Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறை ஊரணி பிரதேசத்தில் மீழக் குடியேறச் சென்ற தமிழ் மக்கள் துரத்தப்பட்டுள்ளனர் ‐ காங்கேயனோடை தமிழ் கிராமம் முஸ்லீம் கிராமமாக மாற்றம்

Featured Replies

அம்பாறை ஊரணி பிரதேசத்தில் அதிரடிப்படையினரின் முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அகற்றப்பட்டதை தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற சென்ற போது, சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர். முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தமது காணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிங்களவர்கள் தமது காணிகளை கைப்பற்றியுள்ள நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு இடையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் சிங்களவர்கள் தமது சொந்த இடங்களை கைப்பற்றி வருவதை எவ்வாறு தடுத்து நிறுத்த போகின்றனர் எனவும் தமிழ் குடும்பங்கள் கேட்டுள்ளனர்.

ஊரணி பிரதேசத்தில் இருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு 25 தமிழ் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அக்கiபை;பற்று மற்றும் பொத்துவில் பகுதிகளில் உள்ள தமது உறவினர்,நண்பர்களின் வீடுகளில் வசித்து வந்தனர். சுமார் இருபது வருடம் கழிந்துள்ள நிலையில், இந்த குடும்பங்களில் எண்ணிக்கை தற்போது நூறாக அதிகரித்துள்ளது. 20 வருடங்களுக்கு பின்னர், தமது சொந்த இடங்களுக்கு சென்று காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே சிங்களவர்களால் விரட்டப்பட்டுள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு ஆரயம்பதி காங்கேயனோடை தமிழ் கிராமத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.ஏம். ஹிஸ்புல்லா, முஸ்லீம் கிராமாக மாற்றியுள்ளதாக ஆரயம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பு குற்றம்சுமததியுள்ளது.

ஈரானின் நிதியுதவியுடன் காங்கேயனோடை கிராம் முஸ்லீம் கிராமாக மாற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெயரை சமாதான கிராமம் என பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் இந்த கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்

www.globaltamilnews.net

=======================================

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் -எம்.எல்.ஏ.ஏம். ஹிஸ்புல்லா

இதில் ஏதோ வில்லங்கம் கிடக்கிறது... வளைகுடாவிலும் காசுக்கு வளைந்து குடுக்கும் நாடுகள் உண்டு... அவைகளை எலும்பு துண்டுகளை நாய்க்கு வீசுவதை போல கடாசி ஈழத்தோழர்கள் கவர் செய்ய வேண்டும்...

BONE.gif

அல்லது நாடுகடந்த தமிழீழ அரசு ஒரு முஸ்லீம் நாட்டையாவது ஆதரவாக உலக அரங்கில் மாற்றவேண்டும்( காசுமீரையும் மாற்றலாம்).. அல்லது ஷியா சன்னி முஸ்லீம்களுக்கிடையில் கொம்பு சீவியாவது ஒரு தரப்பினரை வளைக்க முயற்சிக்கவேண்டும்......இல்லையென்றால் சிங்கள பாசிஸ்டுக்கள்

அப்போதும்...."யாழில் இருந்து புலிகள் முஸ்லீம்களை விரட்டியடித்தார்கள்"...

இப்போ 2010 த்தில் "யாழில் இருந்து புலிகள் முஸ்லீம்களை விரட்டியடித்தார்கள்"...

இன்னும் 3010 அப்போதும் "யாழில் இருந்து புலிகள் முஸ்லீம்களை விரட்டியடித்தார்கள்"

இதேதான் கூறுவார்கள்... காலத்திற்கும் மாறாதிருக்க ...இது என்ன E = mc2 ஐன்ஸ்டீன் கான்செப்டா? அல்லது(a+b)2=a2+2ab+b2 சமன்பாடா? அல்லது நியுட்டன் விதியா? இதை தகுந்த எதிர்வினை மூலம் தோழர்கள் முறியடிக்கவேணும்..... இல்லையெனில் இது திருக்குறள் போல பழமொழியாக நின்றுவிடவும் வாய்ப்புண்டு... :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.