Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல்

Featured Replies

தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.

உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.

காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.

மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர். அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார். உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=11339:2010-10-01-02-48-21&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396

Edited by KILI TIGER

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.