Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த அரசை முடக்க சதி?

Featured Replies

நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது.

இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர்.

ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு இதுவே உலகெங்கும் உள்ள ஜனநாயக நடைமுறை என்று பலரால் எடுத்துக் கூறப்பட்டது. இதை பாரிசில் இருந்து கலந்தகொண்டவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று சிலர் விடாப் பிடியாக நின்றதால் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.பாரிசில் முதலில் வாக்குரிமை வழங்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஒரு பகுதினர் வாக்கெடுப்பு என்று வந்தபோது வெளியில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று வாக்களித்தது அவர்கள் வெளியில் இருந்து சிலரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தம் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்தை தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று இவர்கள் வாதிட்டதும் அதில் விடாப்பிடியாக நின்றதும் 1949 ல் மலையக மக்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று வாக்களித்த மேலதிக்க மனோபாவம் விமானம் ஏறிவந்து புலத்தில் கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பொதுவாக அரசியல் அமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும்.இந்தச் சட்டத்தை தனி நபர்;களோ குழுக்களோ தங்களது சுயலாபத்துக்காக தவறாகப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டத்தை மாற்றுவது திருத்துவது இல்லாமல் செய்வது எதுவாக இருந்தாலும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தேவை என்ற ஒரு விதி அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான ஒரு அடிப்படை விதி என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் இந்த விதியை மாற்றி பெரும்பான்மை பலம் அதாவது 51 க்கு 49 என்ற அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பகுதியினர் வாதிட்டனர். இதன் நோக்கம் இந்த அரசையும் பாராளுமன்றத்தையும் பலம்மிக்க அமைப்பாக உருவெடுக்க விடாமல் தடுத்து வெளியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாக தொங்கு பாராளுமன்றமாக வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும்.ஆளமாக சிந்தித்துப் பார்த்தால்; மேற்குலகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டு தடை செய்ததற்கான புறநிலைகளை உருவாக்கி கொடுத்ததைப் போல இந்த அரசையும் சர்வதேச பயங்கரவாத பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான ஒரு சதிவலை பின்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இந்த முயற்சியும் பெரும்பான்மை பிரதிநிதிகளால் முறியடிக்கப்பட்ட போது பாரிசில் இருந்து கலந்தகொண்டு ஒரு பிரதிநிதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பை செவிமடுத்த அவர் அமெரிக்காவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நேர்வே பிரதிநிதியான முரளி என்பவரை கத்தில் குத்திவிட்டார்கள் என்ற தகவலை அவர் அவைக்கு அறிவித்தார்.ஆனால் அவ்வாறு அறிவித்த ஒரிரு நிமிடங்கள் அது பொய் என்பது ஆதாரபுர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. குத்தியால் குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட உறுப்பினர் உணவுண்டு கொண்டிருந்த காட்சி நேரடியாக காணொழியில் காண்பிக்கப்பட்டது.

முக்கியமான விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான ஒரு பொய் செய்தியை அவைக்கு தெரிவித்தன் மூலம் அவை நடவடிக்கைகளை திசை திருப்புவதற்கு அல்லது குழப்புவதற்கு சில சக்திகள் முயன்றிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.

இது நடந்த இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் கனேடிய பிரதிநிதி ஒருவர் தன்னை இருவர் தாக்கிவிட்டார்கள் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது அதனால் தான் அவையை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று கூறி ஒருவர் சென்று விட்டார்.

ஊண்மையில் அவ்வாறான ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அது கண்டிக்கததக்கது.

ஆனால் 32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்த்திருந்தால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்யும் முடிவை தவிர்த்திருப்பார்.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் மீண்டும் பாரிசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதுவும் நோர்வே பிரதிநிதியை கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற தகவலை தெரிவித்த அதே பிரதிநிதிக்குத் தான் இந்த அழைப்பு வந்தது.

அதை அடுத்து விடுதலைப்புலிகள் எங்களை இந்த அவையைவிட்டு வெளிநடப்புச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம் என்று கூறிவிட்டு அந்த உறுப்பினர் தனக்கு இசைவான சிலருடன் வெளியேறிவிட்டார்.

உறுப்பினார் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்துக்கு அல்லது தீர்மானத்துக்கு எதிராக வெளிநடப்புச் செய்வது ஜனநாயக உரிமை.ஆனால் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கின்றார்கள் என்று கூறிவிட்டு வெளியேறியது ஆபத்தானதும் சந்தேகத்துக்குரியதுமாகும்.

உண்மையில் இந்த அவையில் இருந்த சிலரை வெளியில் இருந்து வழிநடத்திய சக்திகள் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்க முனைகிறார்கள் என்ற செய்தியை யாருக்கோ தெரிவிக்க முற்படுகின்றன என்பது தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அனைவரும் நாசமாப்போகப்போவார்கள் என்பதற்கான அறிகுறிகள் எப்போதோ தொடங்கிவிட்டது. கூடிய விரைவில் நாடுகடந்த தமிழீழ அரசிற்கு மங்களம் பாடுவார்கள் ஆகவே இப்போதே மனதைத்தேத்திக் கொள்ளுங்கோ. இன்னுமொரு விடையம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வலுகூடிய ஒரு அமைப்பு காலக்கிரமத்தில் வந்தேதீரும் அதை வழிநடாத்திச் செலவது சிலவேளை உங்கள் குடும்ப உறுப்பினராகவோ அன்றேல் உங்கள் பிள்ளைகளில் ஒருவராகவோ இருக்கலாம் அதுவரை பொறுத்திருங்கள்.

  • தொடங்கியவர்

ஓப்பரேசன் இறக்கை வெட்டலை தோற்கடித்து வெற்றிநடைபோடும் நாடுகடந்த தமிழீழ அரசு

(தயவு செய்து இந்தத் திரியின் தலைப்பை இவ்வாறு மாற்றிவிடவும்)

நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது.

இந்த அமர்வில் நாடுகடந்த அரசை முடக்குவதற்கும் அதன்பிரதமராக வருவரின் அதிகாரங்களை குறைத்து அவரை செயலாற்ற முடியாத ஒரு பொம்மை பிரதமராக வைத்திருப்பதற்கும் ஒப்பரேசன் இறக்கை வெட்டல் என்ற பெயரில் திரைமறைவில் சில சக்திகள் மேற்கொண்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது

இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர்.

ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு இதுவே உலகெங்கும் உள்ள ஜனநாயக நடைமுறை என்று பலரால் எடுத்துக் கூறப்பட்டது. இதை பாரிசில் இருந்து கலந்தகொண்டவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று சிலர் விடாப் பிடியாக நின்றதால் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.பாரிசில் முதலில் வாக்குரிமை வழங்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஒரு பகுதினர் வாக்கெடுப்பு என்று வந்தபோது வெளியில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று வாக்களித்தது அவர்கள் வெளியில் இருந்து சிலரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தம் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்தை தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று இவர்கள் வாதிட்டதும் அதில் விடாப்பிடியாக நின்றதும் 1949 ல் மலையக மக்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று வாக்களித்த மேலதிக்க மனோபாவம் விமானம் ஏறிவந்து புலத்தில் கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பொதுவாக அரசியல் அமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும்.இந்தச் சட்டத்தை தனி நபர்;களோ குழுக்களோ தங்களது சுயலாபத்துக்காக தவறாகப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டத்தை மாற்றுவது திருத்துவது இல்லாமல் செய்வது எதுவாக இருந்தாலும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தேவை என்ற ஒரு விதி அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான ஒரு அடிப்படை விதி என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் இந்த விதியை மாற்றி பெரும்பான்மை பலம் அதாவது 51 க்கு 49 என்ற அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பகுதியினர் வாதிட்டனர். இதன் நோக்கம் இந்த அரசையும் பாராளுமன்றத்தையும் பலம்மிக்க அமைப்பாக உருவெடுக்க விடாமல் தடுத்து வெளியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாக தொங்கு பாராளுமன்றமாக வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும்.ஆளமாக சிந்தித்துப் பார்த்தால்; மேற்குலகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டு தடை செய்ததற்கான புறநிலைகளை உருவாக்கி கொடுத்ததைப் போல இந்த அரசையும் சர்வதேச பயங்கரவாத பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான ஒரு சதிவலை பின்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இந்த முயற்சியும் பெரும்பான்மை பிரதிநிதிகளால் முறியடிக்கப்பட்ட போது பாரிசில் இருந்து கலந்தகொண்டு ஒரு பிரதிநிதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பை செவிமடுத்த அவர் அமெரிக்காவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நேர்வே பிரதிநிதியான முரளி என்பவரை கத்தில் குத்திவிட்டார்கள் என்ற தகவலை அவர் அவைக்கு அறிவித்தார்.ஆனால் அவ்வாறு அறிவித்த ஒரிரு நிமிடங்கள் அது பொய் என்பது ஆதாரபுர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. குத்தியால் குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட உறுப்பினர் உணவுண்டு கொண்டிருந்த காட்சி நேரடியாக காணொழியில் காண்பிக்கப்பட்டது.

முக்கியமான விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான ஒரு பொய் செய்தியை அவைக்கு தெரிவித்தன் மூலம் அவை நடவடிக்கைகளை திசை திருப்புவதற்கு அல்லது குழப்புவதற்கு சில சக்திகள் முயன்றிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.

இது நடந்த இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் கனேடிய பிரதிநிதி ஒருவர் தன்னை இருவர் தாக்கிவிட்டார்கள் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது அதனால் தான் அவையை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று கூறி ஒருவர் சென்று விட்டார்.

ஊண்மையில் அவ்வாறான ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அது கண்டிக்கததக்கது.

ஆனால் 32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்த்திருந்தால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்யும் முடிவை தவிர்த்திருப்பார்.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் மீண்டும் பாரிசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதுவும் நோர்வே பிரதிநிதியை கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற தகவலை தெரிவித்த அதே பிரதிநிதிக்குத் தான் இந்த அழைப்பு வந்தது.

அதை அடுத்து விடுதலைப்புலிகள் எங்களை இந்த அவையைவிட்டு வெளிநடப்புச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம் என்று கூறிவிட்டு அந்த உறுப்பினர் தனக்கு இசைவான சிலருடன் வெளியேறிவிட்டார்.

உறுப்பினார் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்துக்கு அல்லது தீர்மானத்துக்கு எதிராக வெளிநடப்புச் செய்வது ஜனநாயக உரிமை.ஆனால் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கின்றார்கள் என்று கூறிவிட்டு வெளியேறியது ஆபத்தானதும் சந்தேகத்துக்குரியதுமாகும்.

உண்மையில் இந்த அவையில் இருந்த சிலரை வெளியில் இருந்து வழிநடத்திய சக்திகள் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்க முனைகிறார்கள் என்ற செய்தியை யாருக்கோ தெரிவிக்க முற்படுகின்றன என்பது தெரிகிறது

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி செய்தி உண்மையானால் மிகவும் கண்டிக்கத் தக்க விடயம்.தமிழர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி முக்கிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் வைத்திருப்பதும் அதன் வழிவந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தறியாது உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்க பரப்புவதும் அவருடைய தகுதியின்மையை வெளிக்காட்டியுள்ளது.உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.சபை உறுப்பினர்கள் தவறு செய்யுமிடத்து அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை நீக்குவதற்குரிய அதிகாரம் சபைக்கு இருக்கத்தக்கதாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.எந்த மாற்றமும் 3இல் 2 பெரும்பான்மையுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.விடுதபை; புலிகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லும் உறுப்பினர் யார் அந்த விடுதலைப்புலிகள் என்பதை சொல்ல வேண்டும்.இதே வாதத்தை மறுதலையாக விடுதலைப் புலிகள் ஆதரிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்தானே.விடுதலைப்புலிகள் யார்?மக்களே விடுதலைப்புலிகள்.அந்த மக்களும் அந்த மக்களின் பிள்ளைகளுமே போராடினார்கள்.நாடுகடந்த அரசில் அங்கம் வகிப்பவர்களும் புலிகள்தான்.புலிகளின் இலட்சியத்தை அடைய வேறு போராட்ட வடிவத்தைத் தேர்ந்தடுத்திருக்கிறார்கள்.கேபியால் வழிமொழியப்பட்டது என்பதற்காக இதனை எதிர்ப்பது முட்டாள்தனமானது.கேபியின் துரோகத்தை யாராலும் மன்னிக்க முடியாது.அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.நீங்கள் வெளியில் வந்து என்ன காரணத்திற்காக நா.க.அரசை எதிர்க்கிறீர்கள் என்று மக்கள் முன் சொல்லுங்கள்.காரணம் சரியானது எனில் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அதை விடுத்து உள்வட்டம் வெளிவட்டம் ஆழ்வட்டம் என்று மக்களைக் குழப்பும் கட்டுரைகளும் மாயமான் அதியமான் என்று எந்தக்கட்டுரை எழுதினாலும் இறுதியில் உருத்திரகுமாரன் மேல் சேறு பூசுவதும் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தராது.ஒத்துழைக்க முடியாவிட்டால் ஒதுங்கி இருங்கள்.கத்திக் குத்து அடிபிடி என்று குழாயச் சண்டை மாதிரி தமிழர்களின் போராட்டத்தைக் கேலிக்கூத்தாக்காதீர்கள்.தலைவர் வந்து சொல்லட்டும் நா.க.அரசை வேண்டாமென்று உடனே நாங்கள் அதைக் கைவிடத் தயார்.ஏனெனில் அவரால் மட்டுமே அதற்கு மாற்றீடான போரட்ட வழிமுறையை வெற்றி;கரமாக உறுதியாக முன்னெடுக்க முடியும்.

  • தொடங்கியவர்

நாடு கடந்த ஈழ இராச்சிய அமர்வுகளில் குழப்ப நிலைமையாம்: அரச ஊடகமான திவயின தகவல்

[ சனிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2010, 03:15.32 AM GMT +05:30 ]

நாடு கடந்த ஈழ இராச்சிய அமர்வுகளில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு ஊடகமான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த ஈழ இராச்சியத்திற்கான பதவி நியமனங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு நியூயோர்க் நகரில் நடைபெற்றதாகவும், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமராக உருத்திரகுமாரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த யோசனைத் திட்டத்திற்கு 28 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெடியவன் உள்ளிட்ட சிலர் இந்த யோசனைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

அமர்வுகளில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக நாடு கடந்த ஈழ இராச்சியத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவை தெரிவு நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டதாக திவயின் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

  • தொடங்கியவர்

photo

post-2907-038148500 1286023992_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.