Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வாழ்வில் இனி காதலுக்கு இடமுண்டு கல்யாணத்திற்கு இடமில்லை-நடிகர் பார்த்தீபன்

Featured Replies

திருமண உறவு முறித்த பிறகு,சீதாவுக்கு ஒரு சினேகிதன் கிடைத்துவிட்டார்.பார்த்திபனுக்கு ஒரு சிநேகிதி கிடைக்கவில்லையா? தென்றல் வீசிய கலைஞனின் வாழ்க்கையில் தீ பரவியது ஏன்?

அண்மையில் ‘மைனா’படப் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு தொகுப்பாளரைப் போல இருந்தாரே, படங்கள் எதுவும் இல்லாததாலா? ‘வித்தகன்’ தயாரிப்பாளருடன் மனக்கசப்பா?

ஆளாளுக்கு அரசியல் மேளம் அடிக்கும் போது பார்த்திபனும் இறங்க வேண்டியதுதானே?ஒரு திறமைசாலிக்கு உரிய மரியாதை கிடைக்காமல் போனது ஏன்?

இப்படி பல கேள்விகளுடன் விடை தேடிச் சென்றபோது,

‘‘எனது வாழ்க்கையில் மட்டும் தென்றலும் தீயும் ஏன் என்பது எனக்கு நானே கேட்டுக் கொள்கிற கேள்வி!இருபது வருடங்களுக்கு முன்பு ‘புதியபாதை’ எடுத்தபோது புதிய கருத்துகளை சொல்லணும்கிற தன்னிச்சையான முரட்டுத்தனம் மட்டுமே இருந்தது.இப்ப முன்னை விட புத்திசாலித்தனம் அதிகம்.வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தபோது முன்னே பின்னே ஏற்படக்கூடிய விஷயங்கள் என் வாழ்க்கையிலும் வந்து போனது.நாங்க ரெண்டு பேரும் பிரிந்தபோது குழந்தைகள் என்னிடம் இருப்பது கட்டாயமானது!சின்னப்பிள்ளைகளை விட்டுப் பிரிந்து அவுட்டோர் போக முடியாத நிலை!ஷூட்டிங்குகளைத் தவிர்த்தேன்!மன உளைச்சல்!’’என ஒரு சிறிய முன்னுரை கொடுத்தார்...

பார்த்திபனின் வாழ்க்கையில் இனி காதலுக்கு இடம் இருக்கிறதா இல்லையா?கற்பு-காதல் என்பதெல்லாம் என்ன?

‘‘கற்பு என்பது கற்பிக்கப்பட்டதுதான்! கற்பு என்பதெல்லாம் இல்லை! கற்பு மனசில இருக்கு என்றால் அது பொய்! மனதில் வருவது காதல்! ‘வழி நெடுக காதல் பூக்கள்’ என்கிற புத்தகம் எழுதுகிறேன். ஏற்கெனவே காதல் செய்து விட்டதால்,கல்யாணம் பண்ணிவிட்டதால் காதல் மறைந்து விடக் கூடியதல்ல! காதல் வந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் அதை நான் ‘அக்செப்ட்’ பண்ணிக்கிட்டேனா, இல்லையாங்கிறது வேற விஷயம்!காதலை காதலா மட்டுமே ‘அக்செப்ட்’ பண்ணிக்கிறோமா, அல்லது உறவா ‘அக்செப்ட்’ பண்ணிக்கிறோமா? உறவு என்பதை இனி என் வாழ்க்கையில் யாருக்கும் கொடுப்பதாக இல்லை!மனைவி என்கிற உறவு இடத்தை வேறு எவருக்கும் கொடுப்பதில்லை என்பது முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயம்!நான் ‘இது’க்காக மறுமணம் பண்ணிக்கிட்டேன், ‘அது’க்காக மறுமணம் பண்ணிக்கிட்டேன். துணை தேவைப்படுகிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை!நான் எனது குழந்தைகளுக்குக் கொடுக்கிற சத்தியமான பாதுகாப்பு இது! ஒருவேளை தொடர் வெற்றிகள் கொடுத்து, வசதிகளுடன் இருந்திருந்தால் மே....பி தடுமாறி இருப்பேனோ? என்னை நம்பிய குழந்தைகளுக்கு நான் நல்லது செய்தாக வேண்டும்!நான் என் பிள்ளைகளிடம் சினிமா நடிகனாக,தயாரிப்பாளராக நடந்ததில்லை!பொறுப்புள்ள அப்பாவாக மட்டுமே நடந்து கொள்கிறேன்’’ என்றார்.

இந்தப் பொறுப்பு அம்மாவுக்கும் இருக்கவேண்டுமா, வேண்டாமா? இது பொதுவான கேள்வி!

பாரதிராஜா, ரஜினி, கமல் ஆகியோரால் பாராட்டப்படுகிற பார்த்திபன் ஒரு தொகுப்பாளராக ‘மைனா’ பட விழாவில் கலந்துகொண்டது... உங்கள் இமேஜை பாதிக்கவில்லையா?

‘‘அது நான் காசுக்காக பண்ணியதில்லை! எனக்கு நிறைய, தாராள மனசு. அந்தப் படம் பிடித்திருக்கிறது.பெரிய பெரிய நிறுவனங்களுக்கு நான்தான் போன் பண்ணிச் சொன்னேன்.எனக்கு வந்த வாய்ப்புகளைக் கூட மற்றவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்! ‘மைனா’ மாதிரியான சின்னப் படங்கள் ஜெயிக்க வேண்டும்.இது தமிழ் சினிமாவுக்கு நல்லது!’’

தமிழ்சினிமா மொத்தமாக ஒரு ஆதிக்கத்தின் பிடிக்குள் அடங்கிக் கிடக்கிறபோது சின்னப் படங்கள் எப்படி ஜெயிக்கும்?

‘‘மூணு வாரத்தில் கலெக்ஷனை எடுத்துவிட வேண்டும் என்கிற நிலை இப்போது இருக்கிறது!இதனால் சின்னப்படங்கள் கூட பெரிய நிறுவனத்துடன் போய்ச் சேர்ந்து ஜனங்களுடைய பார்வைக்கு போய்ச் சேரக் கூடிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறது.தயாரிப்பாளர்களுக்கு சக்தி இல்லாமல் போகும்போது வேறு வழி? காடுன்னா சிங்கம் மட்டுமே இருக்கக்கூடாது.

மான், மயில், அணிலும் அங்கு இருந்தால்தான் நல்லது என்று உதயநிதி ஸ்டாலினை வைத்துக்கொண்டே சொன்னேன்.சக்ஸேனாவும் அங்கு இருந்தார்.நான் சொன்னதற்குக் காரணம் பெரிய படங்களையே வாங்குகிற அவர்கள் சின்னப் படங்களையும் ரிலீஸ் பண்ணினால் அவர்களுக்கு பெருமையாக இருக்கும் என்று ‘ரிக்வெஸ்ட்’பண்ணிப் பேசினேன். சின்னப் படங்கள் ஓடினால்தான் ஆரோக்கியமாக இருக்கும். அது நல்ல படமாக இருக்க வேண்டும்.’’

நீங்கள் அரசியலுக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே?

“எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் அவங்களுடைய பாப்புலாரிட்டியை இழக்க விரும்பாமல் அரசியலுக்கு பயன்படுத்திக்கிட்டாங்க!அரசியலுக்கு வந்தால் பத்து பைசா அதிலிருந்து சம்பாதிக்கக் கூடாது!நான் சினிமாவில் சாதிக்க வேண்டியதே நிறைய இருக்கே!பொதுவா மாற்று அரசியல் ரொம்ப தேவைன்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க!‘அது’வா, ‘இதுவா, வேற எதுவாவது நடந்திராதா என்கிற நிலைமை இருக்கிறது!ரஜினிக்கு விருப்பமில்லேன்னு தெரிஞ்சிருந்தும் ஏன் இழுக்கிறோம்?அந்தத் தேவையை அவராவது பூர்த்தி செய்வாரா என்கிற எதிர்பார்ப்புதானே?’’

வித்தகன் தயாரிப்பாளருடன் மனக்கசப்பா?

‘‘அப்படி எதுவும் இல்லை! ‘வித்தகன்’ எடுத்து மூன்றரை வருஷம் ஆகுது. ரிலீஸ் ஆகவில்லை என்கிற மன உளைச்சல் உண்டு. நானும் செவன்த் சேனல் நாராயணனும் பல்லாண்டு கால நண்பர்கள்.லாபத்தில் பிஃப்டி-பிஃப்டி என்கிற அடிப்படையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம்! டிசம்பரில் வரலாம்’’ என்றார்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

படங்கள் பார்வையிட.....

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4961

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.