Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா காந்தி இன்று புதுவை, திருச்சி வருகை

Featured Replies

புதுச்சேரி மற்றும் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை 09 Oct 2010 வருகிறார்.

சனிக்கிழமை நண்பகல் தனி விமானத்தில் சென்னை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இறங்கும் அவர், அங்கிருந்து புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்துக்குச் செல்கிறார். அந்த மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரியையும் அவர் திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் இக்பால்சிங், முதல்வர் வைத்திலிங்கம், சுகாதார அமைச்சர் இ. வல்சராஜ், எம்.பி. கண்ணன், முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஆர். விசுவநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். மாலை 4.30 மணிக்கு மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் காங்கிரஸில் இணைகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா, ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா ஆகியவற்றை கொண்டாடும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவராக 4-வது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அதனால், அவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க காங்கிரஸôர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை திருச்சிக்கு அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு அவர் செல்கிறார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88,+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&artid=315413&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

=========================================================================

இந்தியாவில் கிடைக்காத இலவச மருத்துவக் கல்வி புதுச்சேரியில் அறிமுகம்

நாட்டில் எத்தனையோ கல்வி சீர்திருத்தங்கள் வந்தாகிவிட்டன. ஆனால் புதுச்சேரியில் இப்படியொரு புதிய சீர்திருத்தம் இந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் லட்சக்கணக்கில் பணம் கொட்டி படிக்கும் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வி இங்கு இலவசம். இதற்கு முன்பு புதுச்சேரி அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி இல்லை.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் சார்பில் இயங்குகிறது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் குறைந்தக் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரத்துக்குள்தான் கட்டணம். நடப்பு கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசு சார்பில் தொடங்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைப் போன்று கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால் அதையும் தாண்டி இந்தப் புதிய மருத்துவக் கல்லூரியில் கட்டணம் இல்லை. இலவசப் படிப்பு என்று அறிவித்துவிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் இ. வல்சராஜ். இந்த மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி கொடுத்துள்ளது.

முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்குச் சென்று போராடி இதைப் பெற்றுள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரி முதல்வராக இருந்த என். ரங்கசாமி இந்த மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இடையில் அப் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். நிதி நெருக்கடி காரணமாக இந்த மருத்துவக் கல்லூரியைக் கட்டி முடிக்கும் நிலையில் அரசு இல்லை.

இந்நிலையில் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற வைத்திலிங்கம் நிதி நிலைமையைச் சமாளித்து புதிய மருத்துவக் கல்லூரியைக் கட்டி முடித்துள்ளார். இந்தக் கல்லூரிக்கு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது காமராஜர் மருத்துவக் கல்வி சொசைட்டி என்ற அமைப்பின் கீழ் செயல்படும்.

இந்தப் புதிய கல்லூரியைத் திறந்து வைக்க புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைத்துள்ளனர். சனிக்கிழமை (அக்டோபர் 9) அவர் இக் கல்லூரியைத் திறந்து வைக்கிறார்.

இக் கல்லூரி ரூ. 850 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. நிதி நெருக்கடியில் இந்த அளவுக்குப் பணத்தைச் செலவழிக்க புதுச்சேரி அரசுக்கு வழியில்லை. இதனால் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷனில் ஒப்படைக்க ஆலோசனை நடந்தது. இதற்கு எதிர்ப்பு வந்ததால் குறைந்தச் செலவில் அரசு சார்பில் இந்த மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது ரூ. 138 கோடியில் முதலாண்டு மாணவர் சேர்க்கைக்குப் போதுமான அளவுக்கு இப்போது கட்டடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

=====================================================================================

முதல்வரை சந்திக்கவில்லையே?

திருச்சியில் சனிக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் 125 ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். தில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வந்துதான் புதுச்சேரிக்கும், பின்னர் திருச்சிக்கும் செல்கிறார் அவர். திமுகவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு சோனியா தமிழகம் வரும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க தவறுவதில்லை. ஆனால் இம் முறை விமான நிலையத்தில் இருந்து அப்படியே சென்றுவிடுகிறார்.

÷இது கூட்டணி மாற்றத்துக்கான அறிகுறி என்கின்றனர் திமுக கூட்டணியை விரும்பாத காங்கிரஸ்காரர்கள். கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் ஊசலாட்டத்தில் இருப்பதால்தான் சோனியா சென்னைக்குள் வராமலேயே தில்லி சென்றுவிடுகிறார் என்றும் அடித்துச் சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

.

காங்கிரஸ் கட்சி, தமிழர் நாட்டில் திராவிடம் பேசும்..., புண்ணாக்கு கட்சிகளுடன் சேர்ந்தால் தான் வெற்றி கிடைக்கும்

சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் தான் நல்ல பொருத்தம்.

ஜெயாவுக்கும், சோனியாவுக்கும் பொருந்தாது. ஏனென்றால்.... அவர்கள் இருவரும் பெண்கள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.