Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதகு வருது ரோட்டு வருது மகாவலி கங்கை வடக்க வருது..

Featured Replies

திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010

1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரச்சார குழு ஒன்று வில்லிசையில் ஒரு பாட்டு பாடினார்கள்.. மதகு வருது ரோட்டு வருது மகாவலி கங்கை வடக்க வருது என்று.. அப்போ வடக்கு கிழக்கையே முழுவதுமாக அவர் பாடினாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே மகாவலி கங்கை வடக்க வரப்போகுது. மகாவலி கங்கையினை வடக்கே திருப்பி இரணம்டுவிற்கு கொண்டுவந்து அதன் வழியே கிழக்கினை துண்டாடியது போல வடக்கைனையும் துண்டாடி சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்களத்தின் மாபெரும் திட்டம் நடக்கப்போகின்றது.

இரணைமடுக்குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த்ததேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வட பகுதி மக்களின் நிலங்கள் பறி போகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மையில் இரணைமடுக்குளப் பகுதிக்கு விஜயம் செய்த நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவப் பிரதி அமைச்சர் எச். எம். சந்திரசேனவினாலேயே இந்தத் திட்டம் குறித்து அறிவிக் கப்பட்டிருந்தது. அதனைப் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்தத் திட்டம் தொடர்பிலே வடபகுதி தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

யாழ். மாநகர சபை முன்னாள் ஆணையாளரும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான சீ.வி.கே.சிவஞானம் இது குறித்துக் கருத்துக் கூறும் போது மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய திட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது அதனை ஒத்துழைத்து வரவேற்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள ஒரு பகுதி மக்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டு, ஏனைய மக்களின் நலனைக் கருத்திலெடுக்காது அமுல்படுத்த நினைக்கும் திட்டங்கள் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்படவேண்டும். மகாவலி கங்கை நீரை இரணைமடுக்குளத்துக்கு கொண்டு வரவுள்ள திட்டத்தின் பின்னணியில் வடபகுதி நிலங்களில் தமிழ் மக்கள் அல்லாதோர் குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. இது குறித்து வட பகுதித் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மகாவலி கங்கை நீரை இரணைமடு குளத்துக்கு வழங்குவதன் மூலம் அத்திட்டத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரத்துக்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.அதன் மூலம் வட மாகாண சபைக்குள்ள அதிகாரங்களான நீர்ப்பாசனம், காணி, விவசாயம் என்பன பறிபோகும் அபாயம் ஏற்படும். அத்துடன் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது மத்திய அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட தாகும். அது வடபகுதியில் உள்ள மக்களின் நலனில் எந்தளவுக்கு அக்கறை கொள்ளும் என்று தெரியவில்லை.

அநுராதபுரத்துக்குச் செல்லும் மகாவலி கங்கை நீரின் அளவு போதுமானதாக இல்லை என அந்தப் பகுதி மக்களே விசனம் தெரிவிக்கும் நிலையில் அதனை இரணைமடு குளத்துக்குக் கொண்டு வருவது எந்தளவுக்கு சாத்தியமாகும். இதன் காரணமாகவே வடபகுதித் தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ளன என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் மக்களின் அரசியல் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் வடபகுதியில் சிங்கள மக்களைக் குடியமர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் திரை மறைவில் அரங்கேறி வருகின்றன.

அதன் அங்கமே மகாவலி கங்கை நீரை வடபகுதிக்குக் கொண்டு வரும் திட்டமாகும். இது தமிழ் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்துள்ளது.

நாட்டில் பசுமைப்புரட்சி ஏற்படுத்தவென ஆரம்பிக்கப்பட்ட இந்த மகாவலித்திட்டம் உரிய இலக்கை இதுவரை அடைய வில்லை.

எனினும் வடபகுதிக்கு நீரை அனுப்புவதன் மூலம் வடபகுதியை இரு கூறாக்குவதே அரசின் திட்டமாகும். அவ்வாறு இரு கூறாக்கிவிட்டு நடுவே சிங்கள குடும்பங்களைக் குடியமர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மகாவலி நீரை வட பகுதிக்கு அனுப்புவதன் மூலம் வடபகுதித் தமிழ் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றார்.

ஆகவே அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் கருத்து ரீதியாகவும் , நுட்பரீதியாகவும், இன பண்பாடு கலாச்சார ரீதியாகவும் இந்த விடயங்களை மக்களிற்கு எடுத்துக்கூறி இந்த திட்டத்தை எதிர்க்க செய்யவேண்டும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.