Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் போட்டிகள்

Featured Replies

இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்

புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள், சாலை விரிவாக்கம் போன்றவற்றால், அங்கு வாழ்ந்துவந்த அன்றாடம் காய்ச்சிகள் இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது.

வீடு, நிலம் உரிமைகள் கட்டமைப்பு (Housing and Land Right Network) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், டெல்லியில் சாலைகளில் சிறு கடைகளை வைத்து வணிகம் செய்து வந்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள் என்று இரண்டரை இலட்சம் பேர் தங்களுடைய

‘வாழ்விடங்களில்’ இருந்தும், நிரந்தரமாக வாழ்ந்துவந்த வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளுக்காக விளையாட்டு அரங்குகள், மைதானங்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், சாலைகள் விரிவாக்கம், பூங்காக்கள் அமைத்தல், பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக இந்த திக்கற்ற இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டுமுதல் இந்த வெளியேற்றங்கள் நடைபெற்று வந்துள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் நள்ளிரவில் இந்த வெளியேற்றங்கள் நடந்துள்ளது என்றும், பூசா சாலை ரவுண்டாவிற்கு அருகே இருந்த வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பல வீடுகள் அதில் வசிப்பவர்கள் இல்லாத நேரத்தில் இடித்துத் தள்ளப்பட்டது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட வெளியேற்றங்கள் யாவும் ஐ.நா.வின் முன்னேற்றம் மற்றும் வெளியேற்றத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பிரகடனத்திற்கு எதிரானவை என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

http://tamil.webdunia.com/sports/othersports/news/1010/13/1101013067_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்

புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள், சாலை விரிவாக்கம் போன்றவற்றால், அங்கு வாழ்ந்துவந்த அன்றாடம் காய்ச்சிகள் இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது.

வீடு, நிலம் உரிமைகள் கட்டமைப்பு (Housing and Land Right Network) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், டெல்லியில் சாலைகளில் சிறு கடைகளை வைத்து வணிகம் செய்து வந்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள் என்று இரண்டரை இலட்சம் பேர் தங்களுடைய

‘வாழ்விடங்களில்’ இருந்தும், நிரந்தரமாக வாழ்ந்துவந்த வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளுக்காக விளையாட்டு அரங்குகள், மைதானங்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், சாலைகள் விரிவாக்கம், பூங்காக்கள் அமைத்தல், பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக இந்த திக்கற்ற இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டுமுதல் இந்த வெளியேற்றங்கள் நடைபெற்று வந்துள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் நள்ளிரவில் இந்த வெளியேற்றங்கள் நடந்துள்ளது என்றும், பூசா சாலை ரவுண்டாவிற்கு அருகே இருந்த வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பல வீடுகள் அதில் வசிப்பவர்கள் இல்லாத நேரத்தில் இடித்துத் தள்ளப்பட்டது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட வெளியேற்றங்கள் யாவும் ஐ.நா.வின் முன்னேற்றம் மற்றும் வெளியேற்றத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பிரகடனத்திற்கு எதிரானவை என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

http://tamil.webdunia.com/sports/othersports/news/1010/13/1101013067_1.htm

தோழரே.... நீங்க ஏனோ தப்பாக அர்த்தம் கொள்கிறீர்கள் என தெரிகிறது.... டெல்லி வாசிகள் ஒத்துழைத்தார்கள் என்பதே சரி.... :) :) :)

டெல்லி: டெல்லி [^] காமன்வெல்த் போட்டி பெரும் வெற்றி [^] பெற்றுள்ளதாக சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார். இதற்காக டெல்லிக்காரர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டெல்லி மக்கள் [^]தான். போட்டி சிறப்பான வெற்றியைப் பெற டெல்லி மக்கள்தான் பேருதவி புரிந்துள்ளனர். இந்தப் போட்டியின் வெற்றி ஒலிம்பிக் போட்டிகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க உதவும்.

டெல்லி போலீஸாருடன் ஒத்துழைத்த டெல்லி மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். போட்டியாளர்கள் கேம்ஸ் வில்லேஜிலிருந்து உரிய மைதானங்களுக்குச் செல்வதில் எந்த தாமதமும் ஏற்படாமல் போலீஸாருடன் ஒத்துழைத்த டெல்லி மக்களைப் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன்.

டெல்லி மக்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பிற மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்றார் கல்மாடி.

http://thatstamil.oneindia.in/news/2010/10/11/delhiites-commonwealth-games-suresh-kalmadi.html

215.gif

  • தொடங்கியவர்

திருமாவளவன் காமன்வெல்த் நிறைவு விழாவை புறக்கணிப்பு

இந்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் நிறைவு விழாவை நான் புறக்கணிக்கிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காமன்வெல்த் விளை யாட்டு போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்திய அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது. இந்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க் கள் மற்றும் மத்திய மந்திரிகள் அவ்விழாவை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.newindianews.com/view.php?2e3C0AA22eeYYDD42edyYOJ12cddQQAKccd4KOMoqcb443lmmaa43ffm43a002c46600

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.