Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண்டியிட மறுத்து நிமிர்ந்து நிற்கிறது சிறிலங்கா - அதிர்ச்சியில் அனைத்துலக சமூகம்

Featured Replies

மண்டியிட மறுத்து நிமிர்ந்து நிற்கிறது சிறிலங்கா - அதிர்ச்சியில் அனைத்துலக சமூகம்

[ வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010, 05:02 GMT ] [ தி.வண்ணமதி ]

sri_lanka_lion.jpg போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இதுவிடயம் தொடர்பில் வளைந்து கொடுப்பதற்கு மறுக்கிறது.

இந்த விடயம் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீக்கத்துக்கும் வழிவகுத்து, ஆயினும் இந்த வரிச்சலுகை நீக்கம் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் பெரியளவில் பாத்திப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நிகழவில்லை.

இது தொடர்பாக ‘ஐ.பி.எஸ்’ [iPS] என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர் தி.வண்ணமதி.

அதன் முழுவடிவம் வருமாறு,

கொழும்பு நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் தாஜ் சமுத்திரா என்ற ஐந்து நட்சத்திர விடுதியானது இந்தியாவின் தாஜ் விடுதிகள் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

கொழும்பு நகரத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் விருந்தினர்கள் நடந்தே கடற்கரையோரத்திற்குச் செல்லக்கூடிய கடலுக்கு அருகாக, இந்துசமுத்திரத்தினை நோக்கியவாறு அமைந்திருக்கும் ஒரேயொரு விடுதி இதுதான்.

இருந்தும் அண்மைய நாட்கள் வரை, இந்த ஐந்து நட்சத்திர விடுதியும் அனைத்து வசதிகளையும் கொண்ட அதன் அறைகளும் போதியளவு வருமானத்தினைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்றே கூறவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக விருந்தினர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அறைகளைப் பெறும் வசதியினை தாஜ் சமுத்திரா விடுதி ஏற்படுத்தியிருந்த போதும் அது பெரும் வெற்றியினைத் தரவில்லை.

இலங்கைத் தீவில் நீண்ட நெடுங்காலமாகப் தொடர்ந்த போரின் விளைவாக நாட்டினது உல்லாசப்பயணத்துறை பெரிதும் நலிவடைந்து காணப்பட்டமைதான் இந்தப் பின்னடைவுக்கான பிரதான காரணமாக அமைந்தது.

இந்தப் பின்னடைவு நாட்டினது பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதற்கு வழிவகுத்திருந்தது.

ஈற்றில் கடந்த மே 2009இல் சிறிலங்காவினது அரச படைகளால் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது.

இன்று கொழும்பு நகர மையத்தில் அமைந்திருக்கும் தாஜ் சமுத்திரா விடுதி பெரும் வருமானத்தினை ஈட்டும் அதேநேரம் தாஜ் விடுதிகள் நிறுவனமானது சிறிலங்காவில் புதிய பெரும் முதலீடுகளை மேற்கொள்ளும் முனைப்புக்களிலும் ஈடுபட்டிருக்கிறது.

கடந்த 10 மாதங்களில் கொழும்பு பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடு அபரிமித அதிகரிப்பினைக் கண்டிருக்கிறது என வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் கூறுகிறார். "எப்போதுமே சுறுசுறுப்புடன் இயங்கும் பங்குச் சந்தையிது" என தாஜ் விடுதிகள் நிறுவனத்தைச் சேர்ந்த றேமண்ட் பிக்சன் கூறுகிறார்.

சிறிலங்காவினது அதிகாரிகள் இவரது இந்த வார்த்தைகளைச் செவிமடுப்பார்களா. சிறிலங்காவினது பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்களுக்கு ஐரோப்பியச் சந்தைகளில் அதிக பெருமதியினைப் பெற்றுக்கொடுத்த ஜி.எஸ்.பி பிளஸ் என அறியப்பட்ட வரிச்சலுகையினைக் கடந்த ஓகஸ்ட்டில் ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்திய போதிலும் கொழும்பு இதுபோன்ற வளர்ச்சியினைக் கண்டிருக்கிறது.

சிறிலங்காவினது உற்பத்திப் பொருட்களுக்கு, குறிப்பாக அதனது ஆடை உற்பத்திகள் அதிகம் சந்தைப்படுத்தப்படும் இடமாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கிறது.

2010ஆம் ஆண்டு சிறிலங்காவினது மொத்த ஆடை ஏற்றுமதி 3.1 பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது. இலங்கைத்தீவிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த ஆடைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானது ஐரோப்பியச் சந்தைகளையே சென்று சேர்கின்றன.

சிறிலங்காவிற்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மூன்றாவது பெரிய தொழில்துறையாக ஆடை ஏற்றுமதி உள்ளது.

சிறிலங்காவிலிருந்து பிற நாடுகளில் சென்று பணிபுரிபவர்களின் ஊடாகக் கிடைக்கும் வருமானமும் முதல் இடத்திலும் உல்லாசப் பயணத்துறை இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் முதல்முறையாக கடந்த யூனில் சிறிலங்காவினது ஏற்றுமதி வளர்ச்சி சற்று வீழ்ந்திருந்தது.

சிறிலங்காவினது ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் 11 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும்.

சிறிலங்காவினது ஆடை ஏற்றுமதித் துறையினை விட பங்களாதேசினது ஆடை ஏற்றுமதித் துறை சிறப்பாகச் செயற்படுவதாகவும் சிறிலங்காவினது உற்பத்திகளை வழமையாக வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது பங்களாதேஸ் உற்பத்திகளில் நாட்டம் காட்டுவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

சிறிலங்கா மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தும் என்ற எண்ணத்தில் அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்தமையின் காரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தமானது ஆறு மாத காலத் தாமதத்தின் பின்னரே அமுலுக்கு வந்திருக்கிறது.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்படுவது தவிர்க்கமுடியாததொன்று என்றாகிவிட்ட பின்னர் கொழும்பு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மண்டியிடவில்லை.

வரிச்சலுகையினை நிறுத்துவது என்ற தீர்மானத்திற்கமைய தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகக் கடந்த பெப்பிரவரியில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சாசனம் மற்றும் சிறுவர் உரிமைச் சாசனங்கள் என்பவற்றை மதித்துச் செயற்படுவதற்குச் சிறிலங்கா தவறிவிட்டது என ஒக்ரோபர் 2009இல் ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுட்டார்கள் என வெளிவந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இத்தகையதோர் நிலைப்பாட்டினை எடுத்திருந்தது.

அரச படையினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்டதாகக் கூறப்படும் இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக இன்னமும் எந்தவொரு விசாரணையும் முடுக்கிவிடப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட 12,000க்கும் அதிகமானோர் அரச படைகளால் நிர்வகிக்கப்படுகின்ற அடிப்படை வசதிகள் எதுவுமற்ற, வழமைக்கு மாறான தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

எது எவ்வாறிருப்பினும் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் இதுவிடயம் தொடர்பில் வளைந்து கொடுப்பதற்கு மறுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலளிக்கும் வகையில் செயற்பட்ட சிறிலங்கா அரசாங்கம் இந்தியா மற்றும் சீனா போன்ற தனது 'நட்பு' நாடுகளுடனான உறவினை பலப்படுத்திக்கொண்டது.

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இன்றிருப்பதைப் போல சிறப்பாக இனி ஒருபோதும் இருக்காது என சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்தா குறிப்பிடுகிறார்.

”இந்த ஆண்டினது முதல் ஏழு மாதக் காலப்பகுதியில் சிறிலங்காவிற்கான இந்திய ஏற்றுமதி 41 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதி வர்த்தகத்திலுள்ள தற்போதைய போக்கு 2010ஆம் ஆண்டின் இறுதி வரை தொடருமானால் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான இருதரப்பு வர்த்தக உறவின் உச்சமாக அது இருக்கும்” என அசோக் காந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

சிறிலங்காவில் 30 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டினை மேற்கொள்வதற்கு இந்தியாவின் தாஜ் விடுதிகள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. கொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாக முதல் தர நட்சத்திர விடுதி ஒன்றை நிர்மானிக்கும் நோக்கில் அதற்கான காணியினை தாஜ் நிறுவனம் கொள்வனவு செய்திருக்கிறது.

அதேநேரம் நாட்டினது மொத்த நிலையான தொலைபேசிகளில் 20 சதவீதமானதைக் கொண்டிருக்கும் சண்ரெல் நிறுவனத்தினை விலைக்கு வாங்குவதற்கான முனைப்புக்களில் இந்தியாவின் டாட்டா குழு TATA Group என்ற நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.

சிறிலங்காவினது பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனங்களைத் தனித்துவமான வடிவமைத்து வருவதாகக் கூறும் இந்தியாவின் மகேந்திரா குழு என்ற வாகன உற்பத்தி நிறுவனம் சிறிலங்காவில் தனது வாகனங்களைப் பொருத்தும் மையம் ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்புக்களிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறது.

மேலும் சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா நாட்டினது வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் அபிவிருத்திக்கென 800 மில்லியன் டொலர் பணத்தினை வழங்கவுள்ளதாக 2009ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தது.

அதேநேரம் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஒரு பில்லியன் டொலர் உதவியினைத் தான் வழங்கவுள்ளதாக 2009இல் ரோக்கியோ அறிவித்திருந்தது.

சீனாவும் தனது பங்கிற்கு பெருந்தொகையான அபிவிருத்தி உதவிகளைச் சிறிலங்காவிற்கு வழங்கி வருகிறது. குறிப்பாக நாட்டினது தென் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் டொலர் பணத்தினை வழங்குவதாக சீனா உறுதியளித்திருந்தது.

நன்றி

புதினப்பலகை

சிறிலங்காவின் பொருளாதாரம் நாற்பது பில்லியன் ( 40 B USD) பெறுமதியானது.

இதில் ஜி. எஸ். பி ப்ளஸ் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சிறிலங்கா ஐரோப்பிய யூனியனின் கொள்கைகைகளை ஏற்க முடியாமையலேயே அதை இழந்தது.

இந்திய சீன மற்றும் புலம் பெயர் தமிழர் படை எடுப்பு என்பன நிரந்தரமானவை அல்ல. அடிப்படையில் ஒரு நாடு முன்னேற இவை காத்திரமானவை அல்ல.

உலக பொருளாதாரம் இன்னும் சறுக்கல் நிலையிலேயே உள்ளது. அதன் தாக்கங்கள் சிறிலங்காவில் நிச்சயம் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.