Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் கண்டுபிடிப்பு திறமைகள்

Featured Replies

அண்மையில் கனடாவில் ஒரு பதினெட்டு வயது இளையவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காரணம்: வங்கி கணக்குகளின் மின்வலை இணையத்தளங்களுக்கு சென்று, அவற்றின் பாதுகாப்பு வளையங்களை உடைத்து பல இலட்சம் டாலர்களை தனது கணக்குக்கு மாற்றியமை.

இவரே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் வங்கிகளின் பாதுகாப்பு பலவீனங்களை காட்டி கொடுத்து ( IT Banking Security Expert) பல இலட்சங்களை சம்பாதித்திருக்கலாம். அதை அவருக்கு சொல்லிக்கொடுத்து காட்டிகொடுக்க வேண்டிய கடமை எமது சமுதாயத்துக்கு உள்ளதாக கருதலாம்.

================================================================

= திருட்டை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு:பெரம்பலூர் வாலிபர் சாதனை =

================================================================

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் கருவியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்-தமிழ்செல்வி தம்பதிகளின் மகன் கலைமணி (26). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு பம்புசெட் மோட்டார் பழுது பார்க்கும் எலக்டரானிக் வேலையில் ஈடுபட்டு வந்தார். எதையாவது சாதிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி செல்போன் மூலம் ஏதாவது கருவியை தயாரிக்க வேண்டும் என யோசித்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை நாளிதழில்களின் வாயிலாக தெரிந்த கொண்ட கலைமணி திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

இவரது திட்டத்தின்படி ஒரு மொபைலை விலைக்கு வாங்கி அதை ஒரு பாக்ஸில் பொருத்தி காந்தம் இரும்பு ஆகியவற்றின் உதவியுடன் மொபைலில் இருந்து ஒயர் இணைத்து கதவில் காந்தம் மற்றும் இரும்பு தகடை பொருத்தி மொபைலில் தனது நம்பரை டயல் நம்பராக பதிவு செய்து இயக்கி பார்த்தார். கதவை திறந்த உடன் ஏற்கனவே பதிவு செய்திருந்த தனது நம்பருக்கு போன் வந்தது.

திருட்டை தடுக்கும் புதிய கருவியை கண்டுபித்துள்ள கலைமணி இது குறித்து கூறியதாவது:கதவில் மொபைலை பொருத்திய பின் நம்பரை டயல் செய்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்று விடலாம். யாரேனும் கதவை திறந்தால் நாம் எங்கு இருந்தாலும் நமது மொபைலுக்கு அழைப்பு வரும். இதன் மூலம் திருடர்கள் வீட்டில் புகுந்து வீட்டார்கள் என போலீஸ் மற்றும் பக்கத்து வீட்டினருக்கு தகவல் தெரிவித்து திருட்டை தடுக்கலாம். மேலும் விவசாய குடும்பத்தில் நான் கடந்த ஆக., மாதத்தில் ஒரு நாள் எங்களது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தேன். பம்புசெட் மோட்டாரை போட்டு விட்டு வயல் வேலையில் ஈடுபட்டிருந்தேன். பின்னர் சிறிது நேரத்தில் தண்ணீர் பாய்ச்சிய வயலை வந்து பார்த்தபோது தேவையான அளவைவிட அதிக அளவு தண்ணீர் வயலில் பாய்ந்து இருந்தது. இதைபார்த்த நான் வயலில் தேவையான அளவு தண்ணீர் உள்ளதை கண்டறியும் கருவையும் கண்டுபிடித்துள்ளேன். திருட்டை கண்டுபிடிக்கும் கருவியை சிறிது மாற்றம் செய்து இந்த கருவியை வயலில் எந்த இடத்தில் தண்ணீர் செ ன்றடைய வேண்டுமோ அந்த இடத்தில் கருவியை வைத்து நம்பரை டயல் செய்து விட்டால் தண்ணீர் அந்த இடத்தை வந்தடைந்தவுடன் மொபைலுக்கு அழைப்பு வரும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105237

Edited by akootha

  • தொடங்கியவர்

உந்துருளி திருட்டை தடுக்க புதிய தொழில் நுட்ப முறையில் மீட்டர் பாக்ஸ் பொறுத்தும் முறையை கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவர் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் விவேக்ராஜ் (23). கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., மெக்கானிக் படித்துள்ளார். இவர் உந்துருளி சாவிக்கு பதில் கைவிரல் ரேகை மற்றும் ரகசிய எண்ணை பயன்படுத்தி இயக்கக்கூடிய வகையிலும், தானாகவே உந்துருளி பூட்டிக்கொள்ளும் வகையில் ஆட்டோமேடிக் லாக்கையும் கண்டுபிடித்துள்ளார்.

சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:உந்துருளி உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும். டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.

மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும். டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது. வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=109102

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா ஜி.டி நாயுடு போல இன்னோரு விஞ்சானி ... ராமர் பிள்ளை போல ஆடிவிடாமல் இருக்கணும் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.