Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல”

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல”

பாரிஸ் 19.10.2010.தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு மனிதநேய நடை செல்லும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும்,புருசல்ஸிலிருந்து பெர்லின் வரை மாந்தநேய மதிவண்டி பயணம்; மேற்கொண்டிருக்கும் ஜேர்மன் வாழ்ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தனது ஆதரவையும், வாழ்த்துதல்களையும் முதலில் தந்துநிற்கின்றது.

‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல”

என்ற வாசகங்களுக்கமைய எமது இத்தனை வருடகால அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள்எல்லாம் முடிந்து போனதாக எண்ணாமல் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக எமது இனம்கண்ட இடர்களையும், பேரழிவுகளையும் கண்டு எவ்வாறு நிமிர்ந்ததோ,நிமிர்த்தப்பட்டதோ அந்த வரலாற்றை மீண்;டும் சற்று பின்நோக்கி பார்த்துவிட்டுதனது இலக்கு நோக்கி தொடர்ந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

பெரும்பலமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும் புலம்பெயர்தேசத்து தமிழீழ மக்கள்தமது சனநாயகரீதியான போராட்டடங்களை பல வழிகளில் நடாத்தி தனது இனத்திற்குஇழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர்பறிப்புகளுக்கும் சர்வதேசத்திடம் நீதிட்பதோடு மட்டுமல்லாது, துன்பச்சிறையில் தினமும் கொடுமைகளை அனுபவித்து வரும்எம் சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்ய தொடர்ந்தும் போராட வேண்டும்.

நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து சுகந்தன் அவர்கள் பிரான்சின் ஊடாக கால்நடைப்பயணத்தை மேற்கொண்டு nஐனீவா மனிதநேய செயலரிடம் மகஐர் கையளித்ததும்,அதனைத்தொடர்ந்து nஐனீவாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் ( ஸ்ராஸ்புக் ) வழியாகஐரோப்பிய பாராளுமன்றம் அமைந்துள்ள பெல்ஐpயம் வரை கால்நடையாக சுவிஸ் நாட்டுஈழத்தமிழ்; சகோதரி ஒருவர் உட்பட மூவர் சென்றடைந்ததும் அங்கும் எமது கோரிக்கைகள்வைக்கப்பட்டதும், அவர்களை தொடர்ந்து எமது இளைய சந்தியினர் மதிவண்டி மூலம்லண்டனிலும், Nஐர்மனியை சுற்றியும், ஆயிரம் கிலோ மீறர் தூரத்தையும்,

டென்மார்கில் மூவர் கடும்குளிர், காலநிலையால் ஏற்படும் உடல்உபாதைகளையும்பொருட்படுத்தாது எமது மக்களுக்காக அவற்றை அனுபவித்துக்கொண்டு நீதி வேண்டிச்சென்று கொண்டிருக்கின்றனர்.

எமது தாய் மண்ணில் எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட இனக்கொடுமைகளை மறக்கமுடியுமா? நீதி கிடைக்கும் வரை,பிரானஸ் தமிழீழ மக்கள் பேரவையினர் ஈழத்தமிழ்;மக்களுக்கும் சில பிரான்ஸ வாழ் மக்களுடன் சேர்ந்து மே 27 2009யிலிருந்துபிரான்ஸின் பாராளுமன்றம் முன்பாக ஒவ்வொரு புதன்கிழமை மாலை,கவனயிர்ப்புபோராட்டம் ஒன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்தும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது மக்கள் போராடுவார்கள்,போராடியே தீரவேண்டும்.

ஒரு இனத்தை துடிக்க, துடிக்க கொன்றவனும், கொல்லத்துணை போனவர்களும், இன்றுசுதந்திரமாக, உல்லாசமாக தனது குலக்கொழுந்துகளுடன் குடியும்,கும்மாளமாககாமன்வெல் என்றும் களியாட்டமும் என்று திரிகின்றனர். ஆனால் ஒரு நாட்டின்சனாதிபதி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்அண்மைக்காலங்களில் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் பேசப்படும் சிலிநாட்டின் சனாதிபதியாவார்.

தனது மண்ணின் மைந்தர்கள் 33 பேர் இரண்டாயிரம் அடிக்குமேற்பட்ட நிலத்தின் கீழ் சுரங்கத்தில் அகப்பட்டுக்கொண்டதும் அவர்களைமீட்பதற்காக இரவுபகலாக அந்த இடத்திலேயே நின்று அவர்களை உயிருடன் மீட்டு,சுரங்கத்தில் மாட்டிக்கொண்டவர்களின் குடும்ப உறவுகளை விட அதிக சந்தோசத்தைஅடைபவன் நானாகத்தான் இருக்க முடியும் என்று சந்தோசமிகுதியில் சிலி நாட்டுசனாதிபதி ஆற்றிய உரைiயும், உவகையையும் கண்டுகளிக்காதவர்கள் இருக்க முடியாது.இதனோடு ஒப்பிட்டு பார்க்கும் போது எங்கள் வன்னிமண்ணில் 2009 மே மாதம் நடைபெற்றதமிழினப்படுகொலையின் உச்சமான சிங்கள இராணுவத்தின் கொலை வெறிக்கு பயந்து பதுங்குகுழிகளில் பதுங்கியவர்களையும், குற்றுயிரும் குறையுமாக இருந்த எமது மக்களைஉயிருடனே புதைத்த அரசஅதிபரின் ஆட்சியும், தனது நாட்டு 33 உயிர்களுக்காகபாடுபடும் சிலி நாட்டு சனாதிபதி எங்கே, 30000 வரையிலான எமது மக்களை உயிருடன்

புதைத்த சிறீலங்கா சிங்கள சனாதிபதி எங்கே? இந்த வரலாற்று நிகழ்கால உண்மைகளைஉணர்த்துவது யார்?

இன்று பிரித்தானியா வருகை தரவுள்ள சிங்கள பேரினவாதியும்,காலத்துக்கு காலம்ஆட்சியாளர்களின் வல்லமைகளை தனதாக்கிக் கொண்டு கட்சிமாறும் பச்சோந்தியும்,தமிழ்மக்களின் நியாயமான பேச்சுவார்தைகளை திட்டமிட்டு குழப்ப காரணமாய்அமைந்தவரும் தற்பொழுது சிங்கள தேசத்தின் வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்துவரும் பேராசிரியர் பீரிஸ் பிரித்தானியாவுக்கு வருகை தருவதும், இங்குஇயங்குகின்ற தமிழர் அமைப்புக்கள் யாவற்றையும் பயங்கரவாத அமைப்புக்களாகவும்,அதற்கு உதவுகின்றவைகளாக கூறிக்கொண்டு சிங்கள தேசத்துக்கும்,பிரித்தானியாவுக்கும் உள்ள முறிந்து போன உறவை மீண்டும் புதிய பிரித்தானியஅரசுடன் உறவாக்கிக்கொள்ள வருகின்றார்.

இதை விட சிங்கள தேசத்தின்இனப்படுகொலையில் சிக்குண்டு உயிர் தப்பிப்பிழைத்து புகலிடம்தேடி ஐரோப்பியநாடுகளுக்கு உயிர்ப் பாதுகாப்பு தேடி வருகின்ற, வந்துள்ளவர்களைதிருப்பியனுப்பும்படியும் கூறப்போவதும் அதனைத்தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டுவாளாதிருப்போமாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளால் ஈழத்தமிழ்மக்கள் விடயத்தில்எடுக்கப்போகும் பாரதூரமான முடிவுகளுக்கு துணைபோனவர்களாகவும், எல்லோரையும்பாதிக்கின்ற நிலைக்கு இட்டுச்செல்லும். சும்மாயிருந்தால் சுதந்திரமல்ல ஒருசொட்டு துணிமணிகூடக்கிடைக்காது என்பார்கள் எனவே நாம் எல்லோரும் எப்பொழுதும்எங்கேயும் எமது உரிமைக்குரலை கொடுக்க முடியுமோ அங்கு தேடிச்சென்று கொடுக்கவேண்டும்.

தனது இனத்திற்கும், இருப்பிற்கும் ஆபத்து என்கின்றபோது கைகொடுப்பதே இன்றையஅவசிய தேவையாகும் அதை முன்னெடுப்பவர் யாராக இருந்தாலும் முன்நிற்பவராக நாம்இருத்தல் வேண்டும் அந்த வகையில் தமிழீழ மக்கள் பேரவையினரான நாம் என்றும்பெரும்பலமாக இருப்போம் என்பதையும் நடைபயண மூலமும், மாந்தநேய மதிவண்டி பயணமும்உரிய இலக்கையும், உரியவர்களை அடைந்திட எமது வாழ்த்துதல்களையும், நம்பிக்கையையும் தந்து நிற்கின்றோம்.

தமிழீழ மக்கள் பேரவை

பிரான்சு

http://meenakam.com/2010/10/21/%E2%80%98%E2%80%98%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.