Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகையிரதத்துக்குள் வயோதிப ஆண் ஒருவரை தள்ளி படுகொலை செய்தார் என்று இலங்கைத் தமிழ் பெண் மீது பிரிட்டனில் வழக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதத்துக்குள் வயோதிப ஆண் ஒருவரை தள்ளி படுகொலை செய்தார் என்று இலங்கைத் தமிழ் பெண் மீது பிரிட்டனில் வழக்கு!

வியாழன், 28 அக்டோபர் 2010 13:34

63 வயது உடைய வயோதிப ஆண் ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை புகையிரதத்துக்குள் தள்ளி படுகொலை செய்து இருக்கின்றார் என்று 34 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் மீது பிரித்தானியாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வயோதிப ஆண் மத்திய லண்டனைச் சேர்ந்தவர். லண்டனில் உள்ள King’s Cross station இல் புகையிரதத்தால் மோதுண்டு இறந்து விட்டார்.

இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொன்று விட்டார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் பெண்ணான நைனா கனகசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று Westminster நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றார்.

tamilcnn.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் டியூப் ரயிலில் வழக்கறிஞரை தள்ளி சாகடித்த கனகசிங்கம் பாலியல் மாற்று அறுவைசிகிச்சையில் மும்முரம்

புதன், 03 நவம்பர் 2010 11:34

சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் ஜனநெரிசல் மிகுந்த மாலை வேளையில் நடைபெற்ற டியூப் ரயில் கொலை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் 34 வயது மதிக்கத்தக்க நினா கனகசிங்கம் என்ற பெண்ணை கைது செய்தனர்.

இரு தினங்களுக்கு முன் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி பாலியல் மாற்று அறுவைசிகிச்சையை முழுதுமாக முடித்து விட்டாரா என நீதிபதி வினவினார். சிகிச்சை முடியவில்லை எனவும் ஆனால் கனகசிங்கம் என்ற பெயரில் அழைப்பதை அவர் விரும்பவில்லை தன்னுடைய பெண் பெயரான நினா என்று அழைப்பதையே தன் கட்சிக்காரர் விரும்புவதாக கனகசிங்கத்தின் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யபப்ட்ட மனித உரிமை வழக்கறிஞரான 63 வயதாகும் டேவிட் பர்கேஷும் அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் சோனியா என்றே அழைக்கப்பட்டுள்ளார். நினா கனகசிங்கத்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

நினாவை பிணையில் எடுப்பதற்கான மனு இதுவரை சம்ர்பிக்கப்படவில்லை. பாலியல் மாற்று அறுவை சிகிச்சை முழுதுமாக முடியாத காரணத்தினால் சிசெல் ரோடு, கிரிக்கில்வூத், வடமேற்கு லண்டன் பகுதியை சேர்ந்த கனகசிங்கம் தற்போது வாண்ட்ஸ்வொர்த் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

tamilcnn.com

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரால் கடந்த 25 ஆம் திகதி மாலை King’s Cross ரயில் நிலையத்தில் வைத்து புகையிரதத்துக்குள் தள்ளி கொல்லப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராக இருந்த David Burgess ஆவார்.

இவர் மிகவும் தலை சிறந்த குடிவரவு-குடியகல்வு சட்ட வல்லுனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஏராளமான வழக்குகளில் பிரித்தானியாவில் ஆஜராகி வாதாடி இருக்கின்றார்.

இவர் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கிட்டுவின் மிக நெருங்கிய சகா. இவர் ஒரு தடவை கிட்டுவுக்காக பிரிட்டன் நீதிமன்றில் ஆஜராகி வாதாடியும் உள்ளார்.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவற்றிலும் அங்கம் வகித்து இருக்கின்றார். இவர் பிறப்பால் ஆணாக இருந்தாலும் பெண்களின் உடைகளையே அணிந்து கொள்வார். இவர் சம்பவ தினமும் பெண்களின் உடுப்பையே அணிந்து இருந்தார்.

இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொலை செய்தவர் Cricklewood ஐ சேர்ந்த கனகசிங்கம். இவர் ஒரு ஆண் என்றே எல்லோரும் எண்ணி இருந்தனர். ஆனால் இவர் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக உரு மாற்றம் செய்து கொண்டிருக்கின்றார்.

நைனா என்று அழைக்கப்படுகின்றமையை விரும்புகின்றார். இவரை அடுத்த பெப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=13346:-david-burgess&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவரால் கடந்த 25 ஆம் திகதி மாலை King’s Cross ரயில் நிலையத்தில் வைத்து புகையிரதத்துக்குள் தள்ளி கொல்லப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராக இருந்த David Burgess ஆவார்.

இவர் மிகவும் தலை சிறந்த குடிவரவு-குடியகல்வு சட்ட வல்லுனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஏராளமான வழக்குகளில் பிரித்தானியாவில் ஆஜராகி வாதாடி இருக்கின்றார்.

இவர் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கிட்டுவின் மிக நெருங்கிய சகா. இவர் ஒரு தடவை கிட்டுவுக்காக பிரிட்டன் நீதிமன்றில் ஆஜராகி வாதாடியும் உள்ளார்.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பலவற்றிலும் அங்கம் வகித்து இருக்கின்றார். இவர் பிறப்பால் ஆணாக இருந்தாலும் பெண்களின் உடைகளையே அணிந்து கொள்வார். இவர் சம்பவ தினமும் பெண்களின் உடுப்பையே அணிந்து இருந்தார்.

இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொலை செய்தவர் Cricklewood ஐ சேர்ந்த கனகசிங்கம். இவர் ஒரு ஆண் என்றே எல்லோரும் எண்ணி இருந்தனர். ஆனால் இவர் சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக உரு மாற்றம் செய்து கொண்டிருக்கின்றார்.

நைனா என்று அழைக்கப்படுகின்றமையை விரும்புகின்றார். இவரை அடுத்த பெப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=13346:-david-burgess&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

இந்த குறிப்புக்கள் எங்கே முதலில் பிரசுரமானது? இப்படியான கருத்துக்களை எந்த ஆதாரத்துடன் tamilcnn பிரசுரித்தது என்று யாரும் அறியத் தர முடியுமா?

Edited by குட்டி

பல்வேறு தளங்களில் இதுபற்றிய செய்தி வந்துள்ளது. டமிழ் சீ.என்.என் ஐலண்ட் வலைப்பதிப்பு தகவலை தங்கள் பாணிக்கு மாற்றி பிரசுரம் செய்துள்ளார்கள் போலும். டமிழ் சீ.என்.என் உலக அளவில் செய்தியாளர்களா வைத்துள்ளார்கள்.. எங்காவது பொறுக்கி இருப்பார்கள்.

http://news.google.ca/news/search?pz=1&cf=all&ned=ca&hl=en&q=%22David+Burgess%22&cf=all&as_qdr=w&as_drrb=q

நான் ஏன் கேட்டனான் என்றால், LTTE க்கு உதவினார் என்ற விபரங்கள் இங்குள்ள பத்திரிகைகளில் வந்ததாகத் தெரியவில்லை. இறந்தவர் ஒரு சிறந்த சட்ட வல்லுநர் என்ற விபரங்கள் வெளிவந்தது உண்மை. ஆனால் இங்கே கூறப் பட்ட சில விபரங்கள் ஒரு சிங்களத் இணையத் தளத்தில் வெளியான செய்தியை வைத்தே பிரசுகிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறன்.

http://www.lankamagazine.com/2010/11/03/murdered-uk-based-transsexual-immigration-solicitor-represented-ltte

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.