Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவின் போர்க்குற்றங்களுக்கு வெள்ளை அடிக்கின்றது நல்லிணக்க ஆணைக்குழு: மனித உரிமை அமைப்புக்கள்

Featured Replies

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கும் (வெள்ளையடிக்கும்) முயற்சியையே சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு மேற்கொண்டுவருவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களான அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன தெரிவித்துள்ளன.

அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயிஸ் ஆர்பர், மனித உரிமை கண்காணிபகத்தின் தலைவர் கீனெத் றொத், அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலைவர் சாலி செற்றி ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் த நேசன் என்ற ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்கக்குழு அனைத்துலகத்தின் குறைந்தபட்ச தராதரத்தை கூட கொண்டிருக்கவில்லை. சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அது எந்த நடவடிக்கைகையும் மேற்கொள்ளவில்லை.

சிறீலங்காவில் நீதித்துறை கூட சட்டங்களையும், அடிப்படை உரிமைகளையும் நிலைநாட்ட முற்படுவதில்லை. சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து எமது அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு மே மாதத்திலும், 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திலும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பும், 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமும், ஜுன் மாதமும், ஆகஸ்ட் மாதமும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.

சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க குழுவானது போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதில் அதிக அக்கறைகளை காண்பிக்கவில்லை.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், காணாமல்போதல், கைதுகள், வன்முறைகள் தொடர்பில் முழு விசாரணைகளை அது மேற்கொள்ளத் தவறிவருகின்றது. அதன் விசாரணைகளும் நம்பகத்தன்மையற்றது.

அரசுக்கு ஆதரவான கருத்துக்களை உள்வாங்கிவரும் இந்த ஆணைக்குழு, அரசு மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. உதாரணமாக வன்னியில் 100,000 பேர் உள்ளதாகவே 2009 ஆம் ஆண்டு அரசு தெரிவித்தது. அவர்களுக்கான விநியோகங்களையே அது வழங்கியது. ஆனால் போரின் பின்னர் அங்கிருந்து 300,000 மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

மேலும் சிறீலங்காவின் குழுவானது ஒரு சுயாதீன குழு அல்ல. அதில் உள்ள உறுப்பினர்கள் எவரும் சுயாதீன உறுப்பினர்கள் அல்ல. அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான பாலிககாரா என்பவர் சிறீலங்கா அரசின் போருக்கு ஆதரவாக 2009 ஆம் ஆண்டு தீவிரமாக செயற்பட்டவர். பாதுகாப்பு வலையத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை மீதான தாக்குதலை கூட நியயப்படுத்த முயன்றவர்.

இந்த குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் முன்னர் அரசுடன் இணைந்து, அதற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள்.

சிறீலங்காவில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டங்களும் கிடையாது, நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் உள்ள குறைபாடுகளில் இதுவும் முக்கியமானது.

இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பவர்கள் அரசின் தாக்குதலுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகலாம் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

http://www.tamilthai.com/?p=4671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.