Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்துமீறி நாவற்குழியில் குடியேறின சிங்களக் குடும்பங்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி நாவற்குழியில் குடியேறின சிங்களக் குடும்பங்கள்: யார் தடுத்தாலும் அங்கேயே இருப்போம் என தெரிவிப்பு

திகதி:11.11.2010

யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள் சந்தடி ஏதுமின்றி எவரது அனுமதியுமின்றி நேற்று எதிர்பாராத வகையில் நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் குடியேறியுள்ளன.

இதனால் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று கம்புகள், தடிகள் சகிதம் தடாலடியாக வீடமைப்பு அதிகார சபைக் காணிக்குள் நுழைந்து கொட்டில்களை அமைக்க ஆரம்பித்தனர்.

மளமளவெனக் கொட்டில்கள் அமைக்கும் பணியில் அவர்கள் நேற்று முழு நாளும் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வீடுகளை அமைப்பதற்கு சீருடையினரும் உதவிகளை வழங்கினர் எனஅப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

சிங்கள மக்களின் இந்த அத்துமீறிய திடீர் குடியேற்றம் குறித்துத் தனக்கு எதுவுமே தெரியாது என யாழ். அரச அதிபர் நேற்று தெரிவித்தார்.

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அனுமதி இன்றியே சிங்கள மக்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றனர் எனவும் அது தொடர்பில் தான் வீடமைப்பு அதிகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார் எனவும் சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

"மீளக்குடியமருமாறு கேட்டு நாம் யாழ்ப்பாணம் வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அதிகாரிகள் எம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாததால் இந்தக் காணிகளில் கொட்டில்களை அமைத்துக் குடியேறத் தீர்மானித்தோம்' என்று நாவற்குழியில் குடியேறும் முனைப்புக்களில் மும்முரமாக இருந்த சிங்கள மக்கள் தெரிவித்தனர்.

தமது ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கம்புகள், தடிகளைக் கொண்டே கொட்டில்களைத் தாம் அமைக்கின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.

"எமக்கு யாரும் இதுவரை உதவி செய்யவில்லை.

யார் என்ன சொன்னாலும், தடுத்தாலும் நாம் இங்குதான் குடியேறுவோம்' என்றும் அவர்கள் அடித்துச் சொன்னார்கள்.

அவர்கள் கொட்டில்கள் அமைத்து வரும் காணிகளில் ஆயிரக்கணக்கான கம்புகள், தடிகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன. நேற்றுப் பிற்பகலுக்குள் சுமார் 25 கொட்டில்கள் போடப்பட்டிருந்ததை எமது செய்தியாளர் நேரில் கண்டார்.

சிங்கள மக்களது மீள்குடியமர்வு குறித்து அப்பகுதிக் கிராம அலுவலர் ஆ.நடராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. அவர் தெரிவித்ததாவது:

நேற்றுமுன்தினம் இரவு முதலே அப்பகுதியில் வாகனங்களின் இரச்சல் கேட்ட வண்ணம் இருந்தது. விடிந்த பின்னர் அங்கு சென்று பார்த்த போது ஏராளமான தடிகள் பறிக்கப்பட்டிருந்தன.

பல சிங்கள மக்கள் அங்கு நின்றதை அவதானிக்க முடிந்தது. அவர்கள் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக இது குறித்து யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலர் சாந்தசீலன் அஞ்சலிதேவிக்கும் அறிவித்தேன் என்றார்.

சிங்கள மக்களின் நடவடிக்கை குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:

எமது அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் கொட்டில்கள் அமைத்துக் குடியேறுவதற்கு முயற்சிப்பதை அறிந்து, நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தேன்.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் எந்தவித அனுமதியும் பெறாது அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றனர். இது குறித்து சபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு உடனடியாகத் தகவல் அனுப்பினேன்.

நாவற்குழியில் அதிகார சபைக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத் திட்டத்திற்கு என வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 60 ஏக்கர் காணியை அதிகார சபை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறது.

சிங்கள மக்கள் அந்தக் காணியில் குடியேறுவதற்கு முயற்சிப்பது குறித்து வீடமைப்பு அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

இது தொடர்பில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்ததாவது:

நாவற்குழியில் சிங்கள மக்களை குடியேற்றுவது குறித்து எனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை. அவர்கள் குடியேற முயற்சிப்பது தேசிய வீட மைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான உறுதி உள்ள காணி. அதனால் அவர்கள் தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வீடமைப்பு அதிகார சபையின் இந்தக் காணியில் 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலர் குடியேறி இருந்தனர். பின்னர் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்தனர். அதன் பின்னர், அந்தப் பகுதியில் தாம் குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு 100 தமிழ்க் குடும்பங்கள் 2003, 2004 காலப் பகுதியில் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அப்போது வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளரால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.