Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ருதியின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது? கமல்ஹாசன்

Featured Replies

கமலிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர், வார்த்தைகளில் வகுப்பெடுக்க ஆரம்பித்தால் அறிஞர்கள்கூட இந்தக் கலைஞானியிடம் காதுகளை கடன் கொடுத்துவிடுவார்கள். போன வாரத் தொடர்ச்சி இதோ....

‘மன்மதன் அம்பு’ படத்திற்கு நீங்கள் எழுதியவற்றை கவிஞர் வாலியின் வீட்டிற்குப் போய் படித்துக் காட்டி கருத்துக் கேட்டீர்களாமே?

‘‘நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதற்காக நான் வழக்கமாகச் செய்கின்ற பழக்கம்தான் இது. என்னுடைய பதினாறு, பதினேழு வயதில் எழுதிய கவிதைகளை கவியரசு கண்ணதாசனிடம் படித்துக் காட்டி கருத்துக் கேட்டிருக்கிறேன். அதேபோல் என்னுடைய கவிதைகளை வைரமுத்துவிடம் கூட படித்துக்காட்டுவேன். அவருக்கு வயதானதே என்னுடைய கவிதைகளைப் படித்துதான். கலைஞரிடம் படித்துக்காட்டி இருக்கிறேன். நல்ல வார்த்தைகளை உச்சி முகர்ந்து கொள்வார். வாலியிடம் இன்றைக்கு இல்லை... பல வருஷமாக படித்துக் காட்டுகிறேன். ‘மன்மதன் அம்பு’ பாட்டையும் அப்படி படித்துக்காட்டி பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று போனேன். அவரோ படித்துப் பார்த்துவிட்டு பாராட்டி அனுப்பிவிட்டார்.’’

வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்கச் சொல்லி கலைஞர் உங்களிடம் அன்புக் கட்டளை போட்டாராமே?

‘‘எனக்கும் ஆசைதான். வருடத்திற்கு இரண்டு என்ன? மூன்று படங்கள் நடிக்கலாம். என்னிடம் கலைஞர் கேட்டதற்கு ‘என்ன செய்வது ஐயா எழுதத் தெரிந்தவர்கள் கம்மி’ என்றேன். உடனே, ‘எழுதத் தெரிஞ்சவங்க கம்மி இல்லை. தெரிஞ்சு எழுதுறவங்க கம்மின்னு சொல்லு’ என்றார். அவரது கருத்து நயம் வார்த்தையான போது மகிழ்ந்து நின்றேன்.’’

கமல் என்ற கலைஞனை மற்றவர்கள் செதுக்கி இருக்கிறார்களா? இல்லை உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டீர்களா?

‘‘கண்ணாடியின் உதவி இல்லாமல் ஒருவனால் தலையையே வாரமுடியாது. அப்புறம் எப்படி? பிறருடைய உதவி இல்லாமல் நான் இல்லை. என்னுடைய உதவியால் பலர் வளர்ந்ததாகச் சொல்லலாம். நானும் பலரைச் செதுக்கி இருப்பேன். ஆனால் எனக்குத் தெரியாது. ஆல்கஹாலிஸம் போலதான் அறிவும். உதவியை தெரிந்து செய்தவர்கள் குருவாக இருக்கிறார்கள். தெரியாமல் செய்தவர்கள் நண்பர்களாகி விட்டார்கள்.’’

உங்கள் லட்சியம்தான் என்ன?

‘‘அதைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்று இருக்கிறதா?எனக்குப் பிடித்தது சினிமா.எனக்கு சந்தோஷமான வேலையைச் செய்கிறேன். வேலை இல்லாமல் சும்மா இருந்த காலத்தில் சலூன் கடையில் வேலை பார்த்திருக்கிறேன்.அப்பாவை வெறுப்பேற்ற செய்த காரியம்.‘என் மேலுள்ள கோபத்தால் எதையும் செய்யாதே, உன்னுடைய விருப்பத்திற்காக எதையும் செய். சலூன் கடையில் வேலை செய்வது அசிங்கமில்லை.ஆனால் உன் முன்னேற்றத்திற்காக அதை ஒழுங்காக பழகிக்கொள்’ என்றார். இப்போது நினைக்கும்போது ஞாபகத்தில் வருகிறது.’’

இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகர் நீங்கள்தான் என்று பலரும் சொல்கிறார்கள்?

‘‘பெரிய நடிகர் என்றால் அது யூசுப்கான்தான்; சினிமாவுக்காக பெயர் திலீப்குமார்; அவரது பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு வார்த்தை பேசும் காட்சிகளில்கூட மனிதர் அபாரமாய் வாழ்ந்திருப்பார். அற்புதமான நடிகர். என்னுடைய ‘தேவர் மகன்’ படத்தை அவர் பார்த்து இருக்கிறார். என்னிடம் பேசியிருக்கிறார். இந்தியாவில் அவர் வாழும் வரை அவர்தான் சிறந்த நடிகர். அவரின் பெரிய ரசிகன் நான்.’’

தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அப்புறம் அந்த இடம் உங்களுக்குத்தான் என்கிறார்களே?

‘‘என்னைப் பொருத்த அளவில் நடிகர் திலகம் என்றால் என்றைக்கும் அவர்தான். என்னுடைய சந்தோஷம் எல்லாம் அவர் இருக்கும்போதே அவரிடம் இருந்து இந்த வாழ்த்துக்களைப் பெற்றதுதான்.அவருக்கு அடுத்த இடத்தில் நம்ம பேர் வராதா? என ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.கலை வாரிசாக நான் இருக்கிறேனா என்பதைவிட அவரின் குடும்பத்தின் மூத்த மகனாக நான் இருக்கிறேன். அதே பெருமைதான்.இன்று அவர் இல்லை என்பதால் உடனே அந்த இடம் எனக்கு வந்துவிடாது.’’

இயக்குநர் சிகரம் பாலசந்தர் ஸ்ருதியை வைத்து ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை நீங்கள் இயக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே?

‘‘இன்று ஸ்ருதி எந்த வேகத்தில் போகிறார். அதே வயதில் நான் எந்த வேகத்தில் இருந்தேன் என்று ஒப்பிட்டுப் பார்க்கின்ற அனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.உண்மையில் சொல்லப் போனால் ஸ்ருதியின் வேகம் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.என்னைவிட பல மடங்கு தூரத்தை அவளால் எட்டமுடியும் என்றும் தோன்றுகிறது.என் மகளை நானே பாராட்டினால் கேட்டவர்களின் செவிக்கு அது இனிக்காது என்பதால் மௌனம் காக்கிறேன். அவ்வளவுதான்.’’

சமீப காலமாக ‘மக்களின் தெய்வம்’ என்று பேசி வருகிறீர்களே?

‘‘ஆமாம். இந்தக் கருத்து என்னுடையதில்லை. அதற்கு சொந்தக்காரர் என் நண்பர் தொ.பரமசிவன். வைணவக் கோயில்கள் பற்றி பல ஆய்வுகளைச் செய்திருக்கும் தமிழ் அறிஞர் அவர். மக்களின் தெய்வங்கள் என்றால் மக்களோடு மக்களாய் வாழ்ந்து மறைந்தவர்கள்.சொல்லப்போனால் நம்முடைய மூதாதையர்கள். இதை மறைக்கின்ற முயற்சி நடக்கின்றது. பெரிய அராஜகம் இல்லையா இது? மதம் என்பது அவரவர் வீட்டோடு இருக்க வேண்டும். செக்ஸும் பக்தியும் வீட்டோடு இருக்கவேண்டியவை. அமைதியாக கும்பிட்டுவிட்டு தொப்புளில் காசு வைத்து கிணற்றில் போட்டுக் கொண்டிருந்த பிள்ளையார்,இன்று எப்படி அட்டகாசம் பண்ணுகிறார்?’’.

Thanks to Kumudam.

கமல் மற்றும் ஸ்ருதியின் லேட்டஸ்ட் படங்கள் பார்வையிட .... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5347

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.