Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில்; காணாமல் போயினர் ‐ பெருமளவிலானோர் சாட்சியம்‐GTNசெய்தியாளர்

Featured Replies

வன்னியிலிருந்து வெளியேறிய பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில்; காணாமல் போயினர் ‐ பெருமளவிலானோர் சாட்சியம்‐GTNசெய்தியாளர்

13 November 10 09:48 am (BST)

வன்னி யுத்தத்தில் வன்னியிலிருந்து வெளியேறிய நிலையில் பெருமளவிலான யுவதிகள் ஓமந்தைப் பகுதியில் வைத்துக் காணாமல் போயிருப்பதாக நல்லிணக்க விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வட்டவாகல் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பிலேயே குறிப்பிடச் சொல்லத்தக்க அளவில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று இடம்பெற்ற பல்வேறு வாக்குமூலங்களிலும் யுவதிகள் காணாமல் போனமை தொடர்பாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்பாக இன்று வடமராட்சி கிழக்கில் குடத்தனையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின்னர் நண்பகல் 2 மணி அளவில் நெல்லியடிப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்து சாவகச்சேரியிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நாளைய தினம் தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளிலும் வாக்குமூலம் இடம்பெறவுள்ளதுடன் வாக்குமூலப் பணிகள் யாழ்ப்பாணத்தில் பூரணமடைகின்றது என ஜீரிஎன் செய்தியாளர் கூறியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற வாக்குமூலப் பணிகளின் போது பலர் ஆஜராகி குறிப்பாக தமது மகள்மார்கள் காணாமல் போயிருந்தமை தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தனர். தமது பிள்ளைகள் விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்புகளும் அற்றவர்கள் எனவும் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் எனவும் பல்வேறு யுவதிகள் குறிப்பாக ஓமந்தைப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லாமல் இருப்பதாகவும் பெற்றோர்; அச்சத்துடன் தெரிவித்தனர்.

அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்ட பெண் போராளிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் 91 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள்; மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறி வருகின்றது. ஆனால் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளாக இருப்பார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளாக இருந்தவர்கள் பற்றி அவர்களது குடும்பங்கள் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் அப்பாவிகளான எமது பெண் குழந்தைகள் அதுவும் குறிப்பாக 20க்கும் 25வயதிற்கும் உட்பட்ட பலர் இவ்வாறு ஓமந்தைப் பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முடியாதிருப்பதாகவும் இந்த வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்டது

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=32393&cat=1

துணிவுகரமான இந்த சாட்சியங்களை, எதிரியின் பாசறைக்குள்ளே இருந்தே முன் வைக்கும் மக்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்.

நாம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என தாயக மக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாமும் பலம் சேர்ப்போம். இதே போல புலம் பெயர் மக்களும் போர்க்குற்ற ஆதாரங்களை படங்களை ஐ. நா.வுக்கு அனுப்ப வேண்டும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.