Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு தீர்வு மனதில் உள்ளது ஆனால் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் - மஹிந்த

Featured Replies

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை தான் மனதில் உத்தேசித்து வைத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இத்தீர்வு யோசனை அரசியல் கட்சிகளும், மக்களும் ஏற்று அங்கிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மனதில் உள்ள அரசியில் தீர்வு அவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்காமல் இருக்கலாம் அதனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. பொதுமக்கள் கூட மறுக்கலாம். மக்களின் மனதினுள் உள்ளவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு என்ன தேவை என்பதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதனால் ஒரு குழுவினை நியமித்து இருசாரர் தரப்பிலும் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததுடன் 2011 ஆம் ஆண்டில் வடக்கு மாகணசபை தேர்தல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

த இந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Eelanatham

தீர்வு இருக்கு ஆனா இல்லை.

இந்தாளு இதையே தான் கிழிஞ்சு போன ஒலி நாடா போல சொல்லிக்கொண்டு இருக்கிறாரு. 'இந்து'வும் விடாமல் இதையெல்லாம் ஒரு பேட்டி எண்டு எடுத்து போட்டு கொண்டே இருகிறாங்கள். வாசிக்கிறவங்களுக்கு அம்னீசியா என்று நினைச்சாங்களா?

"மேலும், தனது மனதில் உள்ள அரசியில் தீர்வு அவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்காமல் இருக்கலாம் அதனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. பொதுமக்கள் கூட மறுக்கலாம். மக்களின் மனதினுள் உள்ளவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு என்ன தேவை என்பதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதனால் ஒரு குழுவினை நியமித்து இருசாரர் தரப்பிலும் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததுடன் 2011 ஆம் ஆண்டில் வடக்கு மாகணசபை தேர்தல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்."

இது ஒரு "காதல்" கதை மாதிரி என எண்ணுகிறார்கள் போலும்.

"மனதில்" உள்ளதை எப்படி சொல்வேன்? அவள் ஏற்பாளா? அவள் பெற்றோர்கள் ஏற்பார்களா?....

இல்லை

அம்புலிமாமா கதை போல "மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய வேதாளம் ....அவனுக்கு ஒரு கதை சொல்லத்தொடங்கியது ...."

Edited by akootha

தமிழ் மக்க ஏற்ருக்கொள்ளாததை எப்படி தமிழ்மக்களுக்கான தீர்வு எண்டு கூறமுடியும்?

ஏதோ ஒண்றை வலுக்கட்டாயமாக திணிக்க அடித்தள்ம் போடப்படுகிறது போலிருக்கிறது... :rolleyes:

கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தபோது, முகாம்களில் இன்னமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தி வேதனை அளிக்கிறது.

முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிப்பது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும், இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் சொந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், மறுவாழ்வுப் பணிகள், மீள் குடியமர்வுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிகிறேன்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகி சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழர்களின் துயர் களைவதற்கு, இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்டு வரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. எனவே, இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வும் காணப்பட வேண்டும் என முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.