Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்'

Featured Replies

"என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மூத்த மகனும், நடிகருமான அருண் விஜய், தன்னை அடித்து உதைத்ததாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆனந்தராஜன், தன் கையை உடைத்து விட்டதாக போலீசில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்தார். அப்புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் ஆனந்தராஜனை கைது செய்தனர். வனிதா, தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், தந்தை அளித்த புகாரையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து நேற்று புகார் அளித்தார்.

புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளேன். என் தந்தை நடிகர் விஜயகுமார். "டிவி' நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2007ல் விவாகரத்து பெற்றேன். அவர் மூலம் விஜய் ஸ்ரீஹரி(9) மற்றும் ஜோவிகா(5) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினர் எனக்கு உதவி செய்யவில்லை. என் குடும்பம் மிகப்பெரியது; என் தந்தைக்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள். பிரபலமான குடும்பம் என்பதால், ஊடகங்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தேன். முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆனந்தராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். அவர் மூலம் மூன்றாவதாக ஒன்றரை வயதில் ஜெயினிதா என்ற குழந்தை உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் வசித்து வந்த நான், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். இங்கு வந்து, என் தந்தை பெயரில், "விஜயகுமார் மீடியா பிரைவேட் லிட்' என்ற நிறுவனம் ஒன்றை துவங்கி, சிறந்த முறையில் நடத்தி வருகிறேன். தீபாவளியை ஒட்டி மூன்று குழந்தைகளும் என் தந்தை வீட்டில் இருந்தனர். கடந்த 7ம் தேதி அவர்களை மீண்டும் அழைத்து வருவதற்காக நானும், கணவரும் சென்றோம். அப்போது, மகன் ஸ்ரீஹரியை என்னுடன் அனுப்ப மறுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், அண்ணன் அருண் விஜய், என்னை அடித்து, வயிற்றில் உதைத்தார். என் கணவர் தடுத்ததுடன், என்னை அழைத்து வந்துவிட்டார். இது தொடர்பாக, மதுரவாயல் போலீசில் புகார் அளித்தோம். புகார் குறித்து எப்.ஐ.ஆர்., போடாமல், சி.எஸ்.ஆர்., மட்டும் தந்தனர். உதவி கமிஷனர் ஜெயராஜ் என்பவர், சமாதானம் பேசுவதாக கூறி வந்தார்.

இதற்கிடையில், கடந்த 15ம் தேதி என் தந்தை விஜயகுமாரின் கையை என் கணவர் ஆனந்தராஜன் உடைத்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் என் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, எப்.ஐ.ஆர்., போட்டு, என் கணவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், வக்கீல் மூலம் பார்த்துக் கொள்ளுமாறும் கூறினர். மேலும், அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த மூன்று ரவுடிகள், என் மகளின் கழுத்தை நெரித்ததுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். என் கணவரை மீட்பதற்காக நான் போராடி வருகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக வனிதா, மேலும் கூறியதாவது: நான் கடந்த 7ம் தேதி குழந்தைகளை அழைத்து வருவதற்காக வீட்டிற்கு சென்ற போது, அப்பா விஜயகுமார் நன்றாக குடித்திருந்தார். நான் மகனை அழைத்த போது அவர் தடுத்ததுடன், அசிங்கமாக பேசினார். அவன் பள்ளி தேர்வுக்காக செல்ல வேண்டும் என்று கூறியும் அவர் மறுத்தார். அதற்கு நான், "நீங்கள் நிதானத்தில் இல்லை; நான் உங்களிடம் அப்புறம் பேசுகிறேன்; மகனை அனுப்புங்கள்' என்றேன். அதற்கு அவர், என்னை பிடித்து தள்ளினார். அப்போது, எனது கணவர் வந்து தடுத்தார். அந்த வீட்டிற்கே சம்பந்தமில்லாத அருண் விஜய் வந்து, என்னை அடித்து உதைத்தார். என் அப்பாவிற்கு அடிக்க உரிமை உள்ளது; அருண் விஜய்க்கு என்னை தொட உரிமை கிடையாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் என் மகன் மீது இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை.

விஜயகுமார் தன் மகனை காப்பாற்ற, என் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு அவரது மருமகன் ஹரியும் உடந்தையாகச் செயல்படுகிறார். என் மகன் தான் அப்பாவிற்கு முதல் பேரன். அவன் மூலம் நான் சொத்தை கேட்டு விடுவேனோ என்ற பயத்திலும், நான் புதியதாக துவங்கிய நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலும், அவர்கள் இப்படி செய்கின்றனர் என்று நினைக்கிறேன். என் தங்கை ஸ்ரீதேவியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடினர். வெளியில் சொன்னால் கேவலம்... என் கணவர் ஆனந்தராஜனின் நண்பர் மூலம் தான் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்தோம். நடந்த விஷயங்களை வெளியில் சொன்னால் எல்லாம் நாறிடும். என் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகள்; இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விஜயகுமார் பற்றி நான் நிறைய ரகசியங்களை வெளியிடுவேன். கேட்டால், தினம் ஒரு கதையாகச் சொல்வேன். புகார் விஷயம் வெளியில் வந்ததால், தற்போது நான் கொடுத்த புகார் மீது எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். டி.ஜி.பி., ஒரு பெண் என்பதால் என் கணவரை மீட்க, அவரை நாடி வந்துள்ளேன். இவ்வாறு வனிதா கூறினார்.

அப்பாவின் கையை கணவர் உடைக்கவில்லை: நடிகர் விஜயகுமார் கடந்த 15ம் தேதி மதுரவாயல் போலீசில், மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் தன் கையை உடைத்து விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்க வந்த வனிதா விஜயகுமாரிடம் நிருபர்கள், தந்தையின் புகார் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, ""அப்பாவின் கையை எனது கணவர் உடைக்கவில்லை. சமீபத்தில் திண்டுக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கினார். அதில், அவரது கையில், "மல்டிபிள் பிராக்சர்' ஏற்பட்டது. சம்பவத்தன்று, தந்தை என்னை அடிக்க வந்தபோது, தடுக்க மட்டும் தான் செய்தார். இதில் அவர் கை முறிந்தது என்று கூறியுள்ளது பொய். இந்த புகாரின் பின்னணியில் ஏதோ பெரிய, "பிரஷர்' உள்ளது,'' என்றார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.