Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவி அரச அதிபர் திருமதி சுலோஜினி ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது

Featured Replies

சுலோஜினியை மீண்டும் உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற மக்கள் பிரதிநிதி வீட்டுக்காவலில் ‐ சிங்களக் குடியேற்றத்திற்கு ஒத்துழைக்காததே பதவி நீக்கத்திற்கு காரணம் ‐ ஜீரிஎன் விசேட செய்தியாளர்

26 November 10 11:56 am (BST)

அரசினால் திட்டமிடப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதிக்கு பணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு கரைச்சிப் பிரதேச உதவி அரச அதிபர் திருமதி சுலோஜினி ஒத்துழைக்கவில்லை என்பதாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் மீண்டும் சுலோஜினியை உதவி அரச அதிபராக நியமிக்காவிட்டால் உண்ணா விரதம் இருக்கவும் தயங்க மாட்டேன் என்று அரச அதிபர் ரூபவதியிடம் தெரிவித்த கிராம சங்க உறுப்பினர் நாகநாதி சின்னையா படையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

கிளிநொச்சி நகரத்தின் முக்கியமான பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சிப் பிரதேச உதவி அரச அதிபர் திருமதி சுலோஜினியிடம் பணித்த வேளை அதை முற்றாக மறுத்த சுலோஜினி தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சிங்களவர்களை குடியேற்ற முடியாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் தன்னை மதிக்கவில்லை என்றும் சொல்லிக் கொண்டு சுலோஜினியின் பதவியை ரூபவதி பறித்துள்ளார் என்று தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் கிராம சங்கப் பிரதிநிதிகள் கடும் சீற்றமடைந்துள்ளனர். வயது முதிர்ந்த சில பிரதிநிதிகள் தங்களுக்கு தாயைப் போன்றவர் சுலோஜினி என்று குளோபலுக்குத் தெரிவித்தார். மக்களின் துயரை துடைக்க முழுமையாக பணியாற்றிவர் என்றும் இளம் வயதிலும் ஆளுமையும் துணிச்சலும் கொண்டவர் என்றும் தெரிவித்தார்கள்.

திருமதி சுலோஜினியை மீண்டும் உதவி அரச அதிபராக கடமைக்கு அமர்த்தா விட்டால் வெகுசனப் போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்த கிராம சங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான ஊற்றுப் புலம் கிராம சங்க தலைவர் அல்லைப் பிட்டி அப்பு என்றழைக்கப்படுகிற நாகநாதி சின்னையா உண்ணா விரதம் இருப்பேன் என்றும் அரச அதிபர் ரூபவதியிடம் எச்சரித்தார். இதனையடுத்து மறுநாளிலிருந்து நாகநாதி சின்னையா படையினரின் கண்காணிப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குளோபலுக்கு தெரிவிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து மாலைப் பொழுதில் வந்த அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மறுநாட்காலை பதவி பறிப்பை மேற்கொண்டிருந்தார். குறித்த முற்றுகை இடம்பெற்றதன் மறுநாள் மீண்டும் கொழும்புக்கு பயணமாகிய நிலையில் இரகசிய சாட்சியம் அளிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அரச அதிபர் மீண்டும் வருகை தந்ததும் தமது போராட்டங்கள் நடைபெறும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

www.globaltamilnews.net

தமிழினத்தில் உள்ள ஈனர்கள் சிலர் அரச அதிபர்களாக இருப்பது துர்பாக்கியம். உரிய பாடம் கற்காமலா போய்விடுவார்கள்?

கிளிநொச்சி பிரதேசத்தில் நாமல் தலைமையில் குடியேற்ற முயற்சிகள். அங்கஜன், ஸ்ரீரங்க ஒத்துழைப்பு.

மனச்சாட்சி உள்ள தமிழர்களுக்கு ஒரு தலைசாய்த்து, நன்றிகள் !

தைரியத்திற்கும் நேர்மைக்கும் பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.