Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு இலங்கை வர விசா மறுப்பு

Featured Replies

நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன? என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்து உள்ளது.

நோர்வே 1997 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது.

இத் தோல்வியின் காரணம் என்ன? என்பதை கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயை தளமாக கொண்டு இயங்கும் Chr. Michelsen’s Institute இன் தலைவரான Gunar Sorbo.

இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடி இருந்தார். இலங்கைக்கு வந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்தித்து நோர்வேயின் தோல்விக்கான காரணங்கள குறித்து அபிப்பிராயம் பெற அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இருவரும் உத்தேசித்து இருந்தனர்.

விசாக்கள் மறுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கின்றனர். நோர்வேயின் முயற்சி இலங்கைக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார்கள்

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15005:2010-12-02-07-32-57&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன் ஆராயும் நோர்வே குழு சிறிலங்காவுக்குள் நுழையத் தடை

வியாழக்கிழமை, 02 டிசம்பர் 2010 11:58

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தும் நோர்வே முகவர் அமைப்பின் இரு பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நுழைவு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

அத்துடன் நோர்வே அரசின் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த 1997ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆணடு வரையான காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது.

இந்த அமைதி முயற்சிகள் தோல்வி கண்டது ஏன் என்பது குறித்து ஆராய்வதற்கு நோர்வே அரசாங்கம் அண்மையில் முடிவு செய்திருந்தது.

இதற்கான பொறுப்பை நோர்வே அரசாங்கம் கிறிஸ்ரியன் மக்கெல்சன் இன்ரிரியூட் என்ற தனியார் முகவர் அமைப்பிடம் ஒப்படைத்தது.

கனர் சோர்போ என்பரின் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சிறிலங்கா அரசாங்கமும் முன்னர் கூறியிருந்த்து.

ஆனால் தற்போது இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து சமாதான முயற்சிகள் தோல்வி கண்டது ஏன் என்பது குறித்து விசாரணை செய்யும் முகவர் அமைப்பின் தலைவர் சோர்போ உள்ளிட்ட இரண்டு பேருக்கு நுழைவு அனுமதி வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இவர்கள் சிறிலங்காவில் சமாதான முயற்சிகளுடன் தொடர்புபட்டிருந்த பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டிருந்தனர்.

அண்மையில் ஒஸ்லோ சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவுடனும் இதுகுறித்து சோர்போ பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sangamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.