Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல் சில பகிர்வுகள்..

Featured Replies

திங்கட்கிழமை, டிசம்பர் 13, 2010

Bala%20uncle.jpg

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து நான்காவது ஆண்டு ஆகும்.. அவரது பிரிவிற்குப் பின்னர் எமது விடுதலைப்போராட்டமும் மிக குறுகிய காலத்திற்குள் ஓர் இக்கட்டான சூழலில் சென்றமையினை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தேசத்தின் குரல் அதனை எதிர்பார்த்தார். அதுமட்டுமன்றி அவர் அதனை சிலரிடம் பூடகமாக தெரிவித்தும் உள்ளார். சர்வதேச சூழல்களை வைத்து கணக்கிட்டு எமது போராட்டத்தினை எவ்வாறு அதற்கு ஏற்ப நகர்த்தவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

பாலா அண்ணரைப்பொறுத்தவரை எமது ஆயுதப்போராட்டத்தில் அடிக்கடி நடந்தேறும் முன்னேற்றம் , பின்னடைவுகளுக்கு அப்பால் எமது தேசியத்தலைவரையும், எமது இயக்கத்தின் இருப்பினையும் பாதுகாக்கும் ஓர் மிகப்பெரிய சவாலை நுணுக்கமாக, தீர்க்க தரிசனத்துடன் செயற்படுத்தி வந்துள்ளார் என்றே கூறவேண்டும்.

வெற்றிகளையும் தோல்விகளையும் சதாரணமாக கருதும் அவர் இயக்கத்தின் இருப்பினை சூழல் மாற்றங்களிற்கு ஏற்ப தாக்குப்பிடிக்க கூடியதாகவும் அதே நேரம் தேசியத்தலைவரின் உறுதியான நடவடிக்கைகளை சீர் குலைக்காமலும் தனது வேலைத்திட்டத்தினை செய்துவந்தார்.

2006 அம் ஆண்டு அவரது உயிர் பிரிவதற்கு முன்பாக அவரது வீட்டில் நான் இருந்தேன்.அவரைப்பார்க்க முக்கியமானவர்கள் வந்துபோனார்கள். நான் அவரது கையினைப்பிடித்துக்கொண்டு இருந்தேன்.. அப்போது அவர் சில வார்த்தைகளைக்கூறினார்.. கூறும் போது அவர் கண்ணீர் விட்டார்..

”பாலா அண்ணைக்கு ஓரு கவலையும் இல்லையடா தம்பி, இப்ப உலகம் மாறிக்கொண்டுபோகுது எங்கட போராட்டம் சர்வதேச வலைப்பின்னலுக்க இருக்கு, உவங்கள் தலைவரையும் தளபதிகளையும் மாட்டுறதுக்கு என்னவேண்டுமானாலும் செய்வாங்கள்; இப்பிடி இடையில போறதுதான் கவலையா இருக்கு “ என்றார்.

இப்போதுதான் யோசிக்கின்றேன் அவர் ஏன் சொன்னார் என்று. பாலா அண்ணருக்கு தெரியும்.. இயக்கத்தின், தேசியத்தலைவரின் இருப்புத்தான் எங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேர் என்று ஆகவேதான் அதனைப்பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார் பாலா அண்ணர்.

வெளி நாட்டில் உள்ளோர்கள், இணையத்தளத்தின் மூலம் தமிழீழம் காண நினைப்போர், கட்டுரை எழுதுவதன் மூலம் தமிழீழம் காண நினைப்போர் உட்பட சில அதி தீவிர புத்தி சீவிகள் என கூறுவோர் வன்னியில் நல்ல பெயர் வாங்குவதற்காக பாலா அண்ணார் சர்வதேசத்தின் வலையில் வீழ்ந்துவிட்டார் என போட்டுக்கொடுத்ததனை இப்போதும் மறக்க முடியாது. இதனை அவரே எனக்கு கூறியுள்ளார். ஆனால் உண்மையில் பாலா அண்ணருக்கும் தலைவருக்கும் இடையே இறுதிவரை எந்த முகவர்களும் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அண்ணை (தலைவர்) இப்படித்தான் சொல்லுவார்; “ அடே அப்பா அவர் (பாலா அண்ணர்) எந்த இடத்தில இருக்கின்றாரோ அவர் அப்படித்தான் கதைக்க வேணும் அவர் இப்போ ஆலோசகர் மட்டுமல்ல பேசுவார்த்தைக்கு தலைமை தாங்குபவரும் கூட” என சொல்லுவார்.

ஆனால் உண்மையில் பாலா அண்ணர் தனக்கு தெரிந்த அனுபவத்தில் இயக்கத்தினையும்தலைவரையும் பாதுகாக்க முயற்சி செய்து இருக்கின்றார் என்றே கூறுலாம். அவர் எதுவுமே விளங்காமல் செய்யவில்லை.

தேசியத்தலைவர் எப்போதுமே தான் ஓர் விடுதலைப் போராளியாகவே இறுதிவரை இருக்க விரும்பினார். எத்தகைய தடைகள் வந்தாலும் கொள்கையினை விட்டுக்கொடுக்காதவராக இருந்தார். பாலா அண்ணரைப் பொறுத்தவரை என்ன பொய் சொல்லியாவது இயக்கத்தினை, தலைமையினை, போராட்டத்தினை காப்பாற்ற பாடுபட்டார் செயற்பட்டார். ஏனென்றால் இயக்கத்தின் இருப்பே தமிழீழத்திற்கான பாதுகாப்பு என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இந்திய இராணுவ காலம், அதற்கு முற்பட்டகாலம், அதன் பின்னரான காலங்களில் பல்வேறு சூழ்ச்சித்திட்டங்களில் இருந்தும் பேராபத்துக்களில் இருந்தும் இயக்கத்தை, தலமையினை பாதுகாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

யப்பானில் நடந்த இணைத்தலைமைகள் நாடுகளின் பங்குபற்றுதலுடன் கொடையாளர் மாநாட்டிற்கு போகக்கூடாது என பாலா அண்ணர் வன்னிக்கு கூறினார் ஏனென்றால் அதற்குள் ஏதோ சூழ்ச்சி இருக்குது பொறுத்திருந்து பார்ப்போம்.. என்றார்.

அடுத்ததாக நோர்வேயில் கொடையாளர் மாநாடு நடக்க இருந்தது அதில் பங்குபற்ற நாம் புறப்பட்டு கொழும்புக்கு சென்றிருந்தோம். அந்த வேளை இலங்கை அரசு எம்மை அழைத்து உங்களுக்கு மாதாந்தம் எவ்வளவு செலவு தேவை, மக்களுக்கு அவசர புனர்வாழ்விற்கு என்னென்ன தேவை என கேட்டார்கள். நாங்கள் ஓர் பெரும் பட்டியலைப்போட்டுக்கொடுத்தோம். அடுத்த நாளே உடனே அரசாங்கம் எம்மை அழைத்து கேட்ட தொகையினை தாம் தரவுள்ளதாகவும் அதற்காக ஓர் ஒப்பந்தத்தையும் தயாரித்து வைத்திருந்தது.. வன்னி சார்பாக கையெழுத்து போடுமாறும் கூறினார்கள். நான் அரசியல் துறைப்பொறுப்பாளருடன் தொடர்புகொண்டபோது பாலா அண்ணரை கேட்குமாறு சொல்லப்பட்டது. பாலா அண்ணரைக்கேட்டபோது கையெழுத்து வைத்துவிட்டு அப்படியே வன்னிக்கு போ கொடையாளர் மா நாட்டிற்கு வரவேண்டாம் என்றார். எனக்கு விளங்கிவிட்டது. அதன் பின்னர் தான் தெரியும் கொடையாளர் மா நாட்டில் தமிழ் மக்களுக்கும் சேர்த்து சிங்கள அரசு தாமே நிதி கேட்க திட்டமிட்டு இருந்தது என்று.

இப்படி பல சம்பவங்கள் வன்னிக்கும், பாலா அண்ணருக்கும் , பாலா அண்ணருக்கும் வன்னிக்குமாக சில வாதங்கள், முடிவெடுப்பதில் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்தன ஆனால் அவை எல்லாம் ஒவ்வொருவரினது அனுபவத்திற்கும் புரிதலுக்கும் ஏற்றாற்போலவே அமைந்தது.

வன்னிக்கு வரும் வேளைகளில் சில தளபதிகளுடன் பேசும் போது பகிடியாக கேட்பார் ஆனால் உண்மையாகவே கேட்பார்...

அதாவது ”என்னடாப்பா சிங்கள அரசு அடிச்சால் திருப்பி அடிப்பியளோ, அடிக்கிறது என்றால் ஒரே அடியாய் அடிக்வேணும் இல்லாட்டி அவங்கள் முடிச்சுப்போடுவாங்கள்” என சொல்லுவார். ஆனால் அவர் பகிடிக்கு கேட்கவில்லை உண்மையாகவே கேட்டார். அவருக்கு உள்ளார்ந்த பயம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அதற்கு காரணமும் உள்ளது.

நோர்வே அரசு உட்பட இணைத்தலைமை நாடுகள் பாலா அண்ணரிடம் சிலவேளைகளில் வெருட்டியுள்ளார்கள்.. அதாவது பேச்சுவார்த்தையினை குழப்பினால் அல்லது மீண்டும் சண்டைக்கு போனால் எல்லா நாடுகளும் அரசாங்கத்திற்கே ஆதரவு தெரிவிக்கும் என்பதே அந்த மிரட்டல். பாலா அண்ணைக்கு மட்டும் அல்ல

மாவிலாறில் எதிர் சண்டை செய்ததில் இருந்து.. நோர்வே உட்பட இராஜதந்திரிகள் என்னிடமும் அதனைத்தான் வன்னிக்கு சொல்லுமாறு கூறுவார்கள்.

செஞ்சோலை வளாக குண்டுவீச்சின் பின்னர் எரிக் சொல்கைம், மற்றும் நோர்வே அமைச்சர்களையும் ஜேர்மன் நாட்டின் அமைச்சர் ஒருவரையும் சந்தித்த வேளை.. இப்படித்தான் கூறினார்கள் “ எல்லா நாடுகளும் அரசாங்கத்திற்குத்தான் ஆதரவு கொடுப்பார்கள். குறிப்பாக இந்த தடவை தலைவர் பிரபாகரனை இலக்கு வைத்தே சண்டை நடக்கும் இதில் இந்தியா முழு மூச்சாக செயற்படுகின்றது” இவ்வாறு எரிக் சொகெய்ம் தமிழ்ச்செல்வன் அண்ணரிடம் சொல்லுமாறு கூறினார்.

இதனை தமிழ்ச்செல்வன் அண்ணரிடம் சொன்னேன். அவர் சொன்னார். இந்த வெருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டமாம் என்று சொல்லு என்றார்.

ஆகவே இப்படியான வெருட்டல்களிற்கு மத்தியில்தான் சமாதானப்பேச்சுவார்த்தையினை பாலா அண்ணர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாலா அண்ணர் மேற்கு நாடுகளின் இந்த வெருட்டல்களையெல்லாம் அப்படியே போய் வன்னிக்கு கூறி வன்னியை கோபப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. சர்வதேசத்தின் களுகுப்பார்வையில் இருந்து எப்படி நளுவிப்போகலாம் எப்படி இயக்கத்தினை பாதுகாத்து. பலமடையச்செய்யலாம் என்பதே அவரது குறியாக இருந்தது.

1998 இறுதிப்பகுதி என நினைக்கின்றேன்.

மிகுந்த நெருக்கடி... இராணுவம் ஒட்டுசுட்டானிற்கு வந்து முட்டிகொண்டு நிற்கின்றது.. அம்பகாமம் பகுதி எப்பவும் உடைக்கப்படலாம் உடைத்தால் இராணுவம் இரணைமடுவிற்கு மேவிவிட்டால் வன்னி இரண்டாக பிரிக்கப்பட்டுவிடும்.. இப்படியான நெருக்குவாரம் ஒருபுறம்.. சாப்பாட்டு பிரச்சினை, வழங்கல் பிரச்சினை, கூடவே மக்களுக்கும் உணவுப்பிரச்சினை.. இந்த நேரத்தில் நோர்வே சந்திரிக்காவுடன் பேசுவோமா என கேட்டிருக்க வேணும்... பாலா அண்ணார் வன்னிக்கு தகவல் அனுப்பினார்.. காரணம் அவருக்கு போராட்டத்தின் நெருக்கடி அச்சத்தை ஏற்படுத்தியது.. அப்போ வன்னியில் இருந்து கிடைத்த பதில்.. இப்ப எதை வைச்சுக்கொண்டு பேசுறது முடிந்தால் சனங்கள் இஞ்ச பட்டிணி கிடக்குதுகள் நோர்வேயிட்ட சொல்லி உதவி கேளுங்கோ என்று...

நோர்வேயிடம் மக்களின் கஸ்டங்களை எடுத்துக்கூறி அந்த நாட்டு தொண்டர் அமைப்பு ஊடாக தமிழர்களின் முக்கிய தொண்டர் அமைப்பிற்கு அந்த நேரம் பாலா அண்ணர் பெற்றுக்கொடுத்த உதவி பேர் உதவியாகும்.

00

1999 நவம்பர் 6 ஆம் திகதி என நினைக்கின்றேன்.. கிலோ 1 முகாம்.. காலை 11 மணி இருக்கும் தேசியத்தலைவர் வந்து நின்றார். தமிழ்ச்செல்வன் அண்ணரும் நின்றார் சிறிது நேரத்தில் சற்றலைட் தொலைபேசியில் இலண்டனில் இருந்து பாலா அண்ணார் பேசினார். “ என்ன மாதிரி பேசுவமோ என்று நோர்வே காரங்கள் கேட்கிறாங்கள், நான் சண்டை நிற்கட்டும் பேசுவம் என்று சொல்லிவிட்டேன் என பாலா அண்ணார் கூறினார்.

பின்னர் எப்போ நிற்கும் என பாலா அண்ணர் கேட்க அது நான் சொன்னாலும் நிற்காது எங்கட பெடியள் களைக்கும்வரை அடிப்பாங்கள் என்றார் பகிடியாக.. ஆனால் பின்னர் பிரச்சினை இல்லை அண்ண செய்வம் கொஞ்ச நாள் பொறுங்கோ என்று சொன்னார்.

உண்மையில் பாலா அண்ணர் அப்படிக்கேட்பதற்கு காரணம் இருந்தது.. அதாவது தொடர்ந்து சண்டை பிடிக்கலாமோ அல்லது இடைவேளை தேவைப்படுமோ என்றுதான் அவர் கேட்டார். பாலா அண்ணருக்கு தெரியும் போராட்டத்தின் வலி, போராளிகளின் வலி, மக்களின் வலி, ஜயசிக்குறு எதிர்ப்பு சமர் என்பதும் கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரின் ஆரம்ப வடிவம் என்றே கூறமுடியும்.

ஜயசிக்குறு ஆரம்ப கட்டத்தில் படையணிகளுக்கு பெருமளவில் ஆட்கள் சேரவில்லை. ஆட்சேர்ப்பில் ஈடுபடும் போராளிகள் களைப்படைந்துவிட்டார்கள்.. ஒருகட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி ( வீட்டிற்கு ஒருவர்) கதைக்கப்பட்டது. அண்ணையிட்ட இந்த கதை போகும் முன்னரே பாலா அண்ணர் எல்லோரையும் அழைத்து கூறினார். எப்போது நாம் மக்களை கட்டாயப்படுத்தி சேர்க்கின்றோமோ அன்றில் இருந்து எமது விடுதலைப்போராட்டம் தேய்வடைய தொடங்கும்.. கட்டாய ஆட்சேர்ப்பு என்பது வேண்டாம். வேறு வழிகளில் செய்யுங்கள் என கூறினார். மக்களுக்கு உதவுங்கள், அவர்களுடனேயே இருங்கள்.. அவர்களுக்கு உங்கள் மீது இரக்கம் வரும் போது உங்களுக்கு உதவுவார்கள்.. நீங்கள் அதிகாரம் பிரயோகித்தால் அவர்கள் ஆத்திரம் அடைவார்கள் என கூறினார்.

00

சர்வதேச சக்திகள் எமது போராட்டத்தினை எப்படி எல்லாம் நசுக்குவார்கள் என 1996, 1997 ஆம் ஆண்டுகளிலேயே அதற்கேற்ப பணிகளை ஆரம்பித்துவிட்டார்.. சிறுவர் உரிமை தொடர்பாக இயக்கத்தின் கரிசனையினை ஒலாரா ஒட்டுணுவை அழைத்து பேசினார், மிகுந்த போர் நெருக்கடியில் கூட அதனைச்செய்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் உடனான ஒப்பந்தம், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடனான வேலைகள் அவர்களை அனுசரித்துப்போதல், ஆகிய விடயங்களில் மிகவும் சாதூரியமாக செயற்படுவார். ஏனென்றால் அதுதான் இயக்கத்திற்கு சவாலாக இருக்கும் என அப்போதே கூறி இருக்கின்றார்.

ஆனால் மேலே கூறப்பட்ட அமைப்புக்களுடன் ஆக கீழே இறங்கி போகவும் மாட்டார். குறிப்பாக இலங்கையின் யுனிசெவ் வதிவிட பிரதி நிதியாக இருந்த ரெட் சைபானை யுனிசெவ் இற்கு முறைப்பாடு செய்து மாற்றியமையினை குறிப்பிடலாம்.

வன்னியில் மேற்கூறப்பட்ட அமைப்புக்களுடன் போராளிகள் முரண்படும் போது அதனை வெளி நாட்டில் இருந்தவாறே சமாளித்து ஓரளவு விமர்சனங்கள் வராது பார்த்துள்ளார்.

இயக்கத்தினையும் போராளிகளையும் தலைமையினையும் எல்லா வழிகளிலும் எப்படி பாதுகாக்கலாம் என்பதில் அவர் இறுதிவரை அயராது உழைத்தார்... எங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தினை அடைவதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் தலைவரும் இயக்கமும் முக்கியம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயற்பட்டார். அதற்காக உள்ளேயும் வெளியேயும் அழுத்தங்கள் சில இருந்தாலும் துணிவுடன் செயற்பட்ட எங்கள் தேசத்தின் குரலின் மறைவு எவ்வளவு இழப்பு என்பது எம்மால் உணரக்கூடியதாக இருந்தது.

00

பகிர்வு 2 (2010)

பகிர்வு 1 (2007)

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.