Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி திமுக வை கைப்பற்ற ராசா தீட்டிய திட்டம் அம்பலம். ஓர் பகீர் ரிப்போர்ட்.

Featured Replies

ஸ்பெக்ட்ரம்’ தன்னை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு போகும் என ராசா நினைத்திருக்க மாட்டார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்த விவகாரம் மறக்கப்பட்டு விடும் என்றுதான் அவர் நினைத்திருந்தார்.

ஆனால் இப்படி தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராசா மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இரண்டு கட்டமாக சி.பி.ஐ. ரெய்டு நடந்து முடிந்திருக்கிறது.

ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், கட்சி அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தான் ராசா உட்பட அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் கட்சிக்கு கெட்டபெயர், குடும்பத்திற்குள் குழப்பம் என சிக்கித் தவிக்கும் கருணாநிதி ஓய்வெடுக்க கடந்த வாரம் ஏலகிரி சென்றார். இரண்டாவது கட்டமாக சி.பி.ஐ. ரெய்டு நடக்கப் போவதை அறிந்து அங்கும் நிம்மதியாக இருக்க முடியாமல் சென்னை திரும்பினார்.

‘ராசா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கட்சிக்குள்ளும், குடும்பத்திலும் கருணாநிதிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் கருணாநிதியைச் சந்தித்து ரெய்டு குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார் ஆ.ராசா. அதைப் பொருட்படுத்தாத க ருணாநிதி, ‘‘இன்னும் என்னென்ன சிக்கல்களைச் செய்து வைத்திருக்கிறாய்’’ எனக் கோபப்பட, ராசா சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தயங்கியி ருக்கிறார்.

இதை உணர்ந்த கருணாநிதி, உதவியாளர்கள் சண்முகநாதன், ராஜமாணிக்கம் ஆகியோரை அறையில் இருந்து வெளியேற்றி விட்டு ராசாவிடம் தனிமையில் பேசியிருக்கிறார். ராசா பேசிய விஷயங்களால் கோபமான கருணாநிதி, தலைமைச் செயலகத்தில் இருந்து கிளம்பி கோபாலபுரம் சென்றார். முதல்வரைப் பின் தொடர்ந்து அங்கும் சென்றார் ராசா. என்ன காரணத்தினாலோ கோபாலபுரம் இல்லத்தில் ராசாவைச் சந்திக்க மறுத்து விட்டார் கருணாநிதி.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கருணாநிதியைச் சந்தித்த ராசா, முப்பது நிமிடங்கள் பேசியிருக்கிறார். ராசா - கருணாநிதி சந்திப்பில் என்ன நடந்தது எ ன்பது குறித்து தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘‘ராசா தான் செய்த தவறை உணர்ந்து ‘என்னால் கட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நான் மட்டும் காரணமல்ல. கட்சியில் இருந்து கொண்டே நமக்கு எதிராக சிலர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்’ என்று சிலரது பெயரைக் கூறியுள்ளார்.

அப்போது முதல்வர், ‘இதை ஏன் நீ முதலிலேயே சொல்லவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு சிலரது பெயர்களைச் சொன்ன ராசா, ‘இவர்கள் தான் உங்களிடம் எதையும் சொல்ல விடாமல் என்னைத் தடுத்து விட்டனர். நான் நம்பியவர்கள் என்னை நட்டாற்றில் விட்டது போல் உணர்கிறேன்’ என்று கலங்கியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தெந்த இடத்தில் தவறு நடந்தது, எங்கெங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என எல்லாவற்றையும் முதல்வரிடம் சொன்ன ராசா, ‘பத்திரிகைகளும், கட்சியினரும் என்னைப் பற்றி ஏதேதோ சொல்லி வருகிறார்கள். என்னை கைவிட்டு விடாதீர்கள்’ என்று முதல்வரின் கையைப் பிடித்து க ண்கலங்கினார்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட முதல்வர், ‘நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது, நிச்சயமாக கட்சி உன்மீது நடவடிக்கை எடுக்கும். மனதை திடப்படுத்திக்கொள்’ என சொல்லியிருக்கிறார்’’ என்று சொல்கிறார்கள் நிர்வாகிகள்.

நிதியமைச்சர் அன்பழகனின் 89-வது பிறந்த நாளுக்கு வாழ்த்தச் சென்ற கருணாநிதி, அவரிடமும் ராசா குறித்துப் பேசியிருக்கிறார். இன்னும் சில நாட்களில் கூடவிருக்கும் கட்சியின் உயர்மட்டக்குழுவிற்குப் பிறகு, ராசாவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும், தாற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என்று சொல்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

இதற்கிடையில், கடந்த 18-ம் தேதி மதுரைக்கு அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அழகிரி வீட் டுக்குச் சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு மூன்றுமணி நேரம் நடந்துள்ளது. அப்போது ராசா குறித்து சில ரகசிய தகவல்களை அழகிரியிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் தயாநிதி.

‘ஸ்பெக்ட்ரம் ஊழலின் பெரும் பணத்தை தமிழக அமைச்சர்களுக்கு ராசா பகிர்ந்து கொடுத்திருக்கிறார். கருணாநிதிக்குப் பிறகு கட்சிக்குள் நிச்சயம் குழப்பம் வரும். அப்போது அமைச்சர்கள் தனக்குச் சாதகமாக இருந்தால்தான் கட்சியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று இந்தப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்றும் தயாநிதிமாறன் அழகிரியிடம் சொன்னதாக தகவல்கள் உலா வருகின்றன. இதுபோன்ற தகவல்தான் தயாநிதிமாறன் மீது நடவடிக்கை எடுத்தபோதும் சொல்லப்பட்டது.

இந்தத் தகவலைக் கேட்டு ஸ்டாலினும் அதிர்ந்து போனாராம். இதில் அழகிரியோடு கைகோத்துள்ள அவரும், ராசாவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

மதுரை சந்திப்பிற்குப் பின்னர் அழகிரியும், தயாநிதியும் ஒரே விமானத்தில் சென்னை திரும்பினர். மாறன் சகோதரர்களும், அழகிரியும் எதிராக செயல்பட்ட காலம் மாறி ஸ்பெக்ட்ரம் விவகாரம் இரு குடும்பத்திற்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒற்றுமையையை ஏற்படுத்த செல்வியும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

ராசா மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்.

படங்கள் பார்க்க

http://www.thedipaar.com/news/news.php?id=22286

  • கருத்துக்கள உறவுகள்

ராசா மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள்.

karunanithi.jpg

குடும்ப அரசியல், ஊழல் ௦ தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.