Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தமிழர் 2011ம் ஆண்டிலாவது…………….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் 2011ம் ஆண்டிலாவது…………….

------------------------------------------------------------------------------------

தமிழினத்தின் ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தாயக மண்ணிலே நடைபெறும் துயர நிகழ்வுகள் வழமையாகிவிட்ட சூழலில் புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்போரினது அடுத்தகட்டப் பரிணாமம் என்பது அனாதையாக நிற்பதுபோல் தோன்றுகிறது. 2009 மே 19 வரை தாயகம், தேசியம், அண்ணன் தம்பியென்றோரெல்லாம் இன்று பல்வேறு திசைகளில் நடக்கத்தொடங்கியுள்ளதொரு தோற்றமொன்று தெளிவாகத் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? எந்தவிதமான சுயவிருப்பகளுக்குமப்பால் தமிழின விடுதலையொன்றே தமது குறிக்கோளெனத் தம்மை ஆகுதியாக்கியோரதும் இன்றும் வதைக்கூடங்களிலும், வெட்டவெளிகளிலும் சிங்களப் பயங்கரவாத அரசால் கொன்று வீசப்பட்டுக்கொண்டிருக்கும் போராளிகளதும் உயிரின்மேல் ஏறிநின்று எதுவும் செய்யலாம் என்ற போக்குத் தலையெடுப்பதானது எமது இனத்தை மேலும் அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லவே வழிகோலுமென்பதே மெய்நிலையாகும்.

இந்தநிலை மாறவேண்டும். இதனை மாற்றியமைக்கும் பொறுப்பும் கடமையும் புலம்பெயர்வாழ் தமிழ்; உறவுகளுக்குரியது என்பதை தட்டிக் கழித்துவிட முடியாது. ஆயுதப் போராட்டமானது முனைப்போடிருந்த வேளையில் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாது பக்கபலமாக நின்ற தமிழ் உறவுகளுக்கு வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து அரசியல் இலக்கினை அடைய உழைக்கும் ஆற்றலும் உண்டென்பதை உய்த்துணர்ந்தால் அறியலாம். அதன் ஒரு கட்டமாக நடைப் பயணம், ஈருரளியோட்டமெனப் பரப்புரைப் பயணங்களை தன்னெழுச்சியோடு இளையோர் மேற்கொண்டு தமது கடமையைச் செய்ய முனைகின்றனர். அதற்கு இசைவாகப் புலம்பெயர் உறவுகள் வாழும் நாடுகள்தோறும் நாமும் உரிய முறையிலே திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. நாம் வெறுமனே யூதர்களை எடுகோளாகப் பேசுவதால் பயனில்லை. யூதர்களைப் போன்று செயற்பட்டால் மட்டுமே இந்த உலகை வெல்ல முடியும். யூதர்களால் அந்த நீண்ட இனவிடுதலைப்போரை எதிர்கொள்ள இருந்த அடிப்படை ஆயுதம் ஒற்றுமை மட்டுமே. ஆனால் எம்மிடம் இல்லாததும் இந்த ஒற்றுமையே. எனவே நாம் இதற்கான களமொன்றைத் திறந்து சரியான முறையில் திட்டமிட்டு நகர்த்தாவிடில் திறந்தவெளிச் சிறைச்சாலையாகிவிட்ட எமது தேசத்தில் எஞ்சியிருப்போரையும் இழந்துவிடுவோம் என்பதைத்தான் கடந்த சில நாட்களாக நடைபெறும் சிங்களத்தின் இரகசியப் படைகளின் படுகொலைகள் எடுத்தியம்புகின்றது.

இந்த இடத்திலே ஒரு விடயத்தை சுட்டுதல் பொருத்தமாக இருக்குமென்பதால் நான் பார்த்த நிகழ்வொன்றினை பதிவு செய்கிறேன். அண்மையில் ஒரு தமிழ்ப் பாடசாலையொன்றில் நடைபெற்ற நத்தார் விழாவிலே "புலம்பெயர் தமிழ்ச் சூழலில் சமூக ஒற்றுமையுணர்வு மேம்பட்டுள்ளதா? அல்லது வீழ்ச்சிகண்டுள்ளதா?" என்று பட்டிமன்றம் நடைபெற்றது. அதிலே மேம்பட்டுள்ளது என மகிந்தவை லண்டனில் பேசவிடாது தடுத்தது போன்ற விடயங்களைச் சுட்டி பேசினார்கள். வீழ்ச்சிகண்டுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் பேரவை, மக்களவை, என பிரிந்து நிற்பதாக் பேசினர். இது கூட ஒருவகையில் கலைக்கண்ணூடான மக்களின் எதிரொலியாகவே பார்க்கலாம். நாம் இனியும் விதண்டாவாதம் செய்வதிலே காலத்தை விரயமாக்காது, விடயமும் விவாதமும் செயலுமாக நடக்க வேண்டிய காலமாக எம்முன்னே விரிந்து செல்ல இருக்கும் 2011ம் ஆண்டில் தமிழினம் உறுதியெடுத்துச் செயற்படுவதே உயிரீகம் செய்தோருக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

தமிழரின், முக்கியமாக புலம் பெயர் மக்களின் ஒற்றுமை மிகவும் அத்தியாவசியமானது. அதை மீண்டும் வலியுறித்திய, ஞாபகப்படுத்திய கட்டுரைக்கு நன்றி. ஏனெனில், இன்று அவர்கள் ஒருவர் மட்டும் தான் தொடரும் படுகொலைகளை தடுக்க, உலகிற்கு சொல்ல, அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய நிலைமையில் உள்ளனர். மேலும், புலம் பெயர் மக்களின் சக்தி என்பது ஆழமாக எல்லோரையும் உள்வாங்கி, முக்கியமாக இளையோரை, ஒற்றுமைப்படும் பொழுது, இன்னும் பலமான சக்தியாக உருவாகும்.

வரும் 2011 இல் சிங்ககளத்தின் அரசியல் போக்கு எவ்வளவுக்கு சீனாவுடன் பயணம் செல்லும் என்பதும், இந்தியாவின் பொறுமை எவ்வளவு தூரம் சீனாவின் ஆழ உறவை சகித்திக்கொள்ளும் என்பதும் முக்கியமாகும். அத்துடன், சிங்கள பொருளாதர வளர்ச்சி, சாதாரண மக்களின் வாழ்க்கைதரம் என்பனவும் அவதானிக்கப்பட வேண்டியன.

2010 இல் ஜி. எஸ். பி. பிளஸ் நிற்பட்டப்பட்டது ஒரு வெற்றியாகும். பான் கி மூன் பிரேரணை குழு அமைத்தமை ஒரு வெற்றியாகும். வரும் 2011 இல் இதன் தொடர்வு எவ்வாறு இருக்கும்?, ஒரு நிரந்தர ஆணைக்குவுக்கு வழி வகுக்குமா?, என்பதிலும் பல முடிச்சுக்கள் தங்கி உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.