Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ வை குத்தி கொலை செய்த ஆசிரியை.

Featured Replies

பீகாரில் பிஜேபி எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேஷரியை ரூபம் பதக் என்ற பெண் குத்திக் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை கேஷரி பாலியல் பலாத்காரம் செய்ததாக, கடந்த ஆண்டு போலீஸில் புகாரளித்தவரே அந்தப் பெண் என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து, எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பை அதிகரிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

பீகாரில் பூர்னியா தொகுதியில் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ராஜ் கிஷோர் கேஷரி (வயது 51).

கேஷரி தனது வீட்டில் இன்று காலை வழக்கம் போல் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, குறை கூறுவதற்காக வந்த ரூபம் பதக் என்ற நடுத்தர வயது பெண் திடீரென கேஷரியை கத்தியால் குத்தித் தாக்கினார்.

இதையடுத்து, கடுமையான ரத்த காயங்களுடன் குஷேரியை அவரது பாதுகாவலர்களும், தொண்டர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே, எம்.எல்.ஏ.வை குத்திக் கொலை செய்த பெண்ணை, பாதுகாவலர்களும் தொண்டர்களும் கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்தார். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ.வை குத்திக் கொலை செய்த பெண் பத்க், உள்ளூர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிபவர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. கேஷரி மீது போலீஸில் அவர் புகார் கொடுத்திருக்கிறார். அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை குஷேரி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை குஷேரி மறுத்திருந்தார்.

இந்நிலையில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால் ஏற்பட்ட கோபத்தில் காரணமாகவே குஷேரியை பத்க் கொன்றதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், "காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்தப் பெண், நீதிமன்றத்தின் ஆஜரானபோது தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை. அவருடைய கணவரும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்," என்று காவல்துறை அதிகாரி பி.கே.தாகூர் கூறியுள்ளார்.

நிதிஷ்குமார் நடவடிக்கை...

கேஷரியின் மரணம் குறித்த தகவலை அறிந்து அதிர்ச்சியுற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் அளித்து வரும் பாதுகாப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உத்தரவிட்ட அவர், குஷேரிக்கு மாநில அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றார்.

மேலும், குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கூறிய அவர், குஷேரியின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் நிதிஷ் குமார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்...

இந்தக் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள பீகார் மாநில காங்கிரஸ், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பிகார் மாநில காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் பிரேமச்சந்திர மிஷ்ரா கூறுகையில், "

தன்னை எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்ததாகப் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நடந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.

இந்த சம்பவம் தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டோ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டோ விசாரணை நடத்த வேண்டும்.

பாலியல் புகார் அளித்திருந்தும் எம்.எல்.ஏ.வை சந்திக்க அந்தப் பெண் எந்தக் காரணங்களினால் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து தன்னிச்சையான விசாரணை ஒன்றும் நடத்தப்பட வேண்டும்," என்றார் மிஷ்ரா.

சட்டமன்ற உறுப்பினரை ஒரு பெண் குத்திக் கொலை செய்த இச்சம்பவம், பீகார் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Picture and Video for this news please go to.....

http://www.thedipaar.com/news/news.php?id=22787

  • கருத்துக்கள உறவுகள்

அவர் குற்றம் புரிந்திருந்தால்........

சரியான தண்டனை

வாழ்த்துக்கள்

இது சட்டப்படி குற்றமாக இருந்தாலும்

அரசியல்வாதிகள் திருந்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடமாக கரைச்சல் கொடுத்தவனை

சட்டப்படி அறிவித்தும் சட்டம் என்ன செய்தது

மாறாக

இன்னும் பாதுகாத்தது என்று தான் சொல்லணும்

இது தான் சரியான தண்டனை

அவர் குற்றம் புரிந்திருந்தால்........

சரியான தண்டனை

வாழ்த்துக்கள்

நாளைக்கு அரசியல் பழிவாங்கள் கூட இப்படி சொல்லி கொலைசெய்வார்கள் தானே?,

  • கருத்துக்கள உறவுகள்

நான் சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன்

அவர் உண்மையில் தப்பு செய்திருந்தால் என்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.