Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகள் நாடு திரும்ப விருப்பம் என யு என் எச் சி ஆர் கூறுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகள் நாடு திரும்ப விருப்பம்

அகதிகள் நாடு திரும்ப விருப்பம் என யு என் எச் சி ஆர் கூறுகிறது

இலங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என்று ஐ நா வின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அப்படி வருபவர்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளை தாங்கள் மேலும் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

போருக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று இலங்கையில் இருக்கும் யு என் எச் சி ஆர் அமைப்பின் துணை வதிவிடப் பிரதிநிதி ஜெனிஃபர் பகோனஸ் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு கணிசமான அளவில் உயரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

நாடு திரும்புவர்கள் இலங்கையில் தாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்கிற சூழல் ஏற்படுமாயின் பலர் மீண்டும் அங்கு திரும்பத் தயாராக இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளனர் எனவும் ஜெனிஃபர் பகோனஸ் தெரிவிக்கிறார்.

எனினும் வெளிநாடுகளில் வாழும் அகதிகள் நாடு திரும்புவது அவர்களது சொந்த முடிவு என்றும், அப்படி விரும்புகிறவர்களுக்கு உதவிகளை செய்ய தமது அமைப்பு முன்வந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வேண்டும்

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளை பொறுத்தமட்டில் அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் என்றும், அவர்கள் நிச்சயமாக நாடு திரும்புவார்கள் என்றும், தமிழகத்தில் இருக்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் தலைவரான சந்திரஹாசன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

எப்போது அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது குறித்து அம்மக்களிடையே ஒரு கருத்தரங்கு நடத்தி எடுக்கப்பட்ட ஒரு பொது முடிவின்படி, முதலில் இலங்கைக்குள்ளேயே இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் முதலில் குடியமர்த்தப்பட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பிறகு, இந்த அகதி மக்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்லலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் உள்ள அகதிகள் நாடு திரும்பும் நடவடிக்கைகள் தொடங்கக் கூடும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சந்திரஹாசன் கூறுகிறார்.

தற்போது தமிழகத்தில் இருக்கும் அகதிகள் இலங்கை திரும்புவது தொடர்பில் தமிழக அரசும் இந்திய அரசும் இலங்கை அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/01/110105_refuggesreturn_unhcr.shtml

இலங்கையில் போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய பலர் நாடு திரும்ப விரும்புகிறார்கள் என்று ஐ நா வின் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜரோப்பாவிலும் இருந்துமா? :blink:

இந்தியாவில் இருந்து கட்டாயமாக பிடிச்சு அனுப்ப பட போவதுக்கான முன் ஏற்பாடு போல கிடக்கு... !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.