Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல நகைச்சுவை நடிகை தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 10, ஜனவரி 2011 (18:47 IST)

பிரபல நகைச்சுவை நடிகை தற்கொலை

பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

32 வயதான சோபனா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடத்துள்ளார். 15 வயதில் நடிக்க தொடங்கிய சோபனா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். சோபனாவின் தாயார் ராணியும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். வைரம் உள்பட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் வீட்டு வசதி குடியிருப்பில், தாயார் ராணியுடன் வசித்து வந்த சோபனா, திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயார் ராணி வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டி, பின்னர் கதவை திறந்து பார்க்கையில் இச்சம்பவம் நடந்திருப்பதை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக ராணி கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷோபனாவின் வீட்டில் ஒரு டைரி கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த டைரி குறித்து போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

nakkheeran.in

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபனா மரணம் சொல்வது என்ன?

மீண்டும் மீண்டும் தற்கொலை...

'மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்றால், ஷோபனா நம் நினைவுக்கு வருவார். வெண்ணிற ஆடை

மூர்த்தியுடன் சேர்ந்து கலக்கல் காமெடி பண்ணும் நடிகை. சின்னத் திரையிலும் வண்ணத் திரையிலும் பார்த்துப் பழக்கமான முகம். ஆனால், அவர் இப்போது இல்லை. நகைச்சுவை நடிகையான ஷோபனாவின் தற்கொலை, திரைத் துறையினரைக் கலங்கடித்தது!

கடந்த வாரம் கோட்டூர்புரத்தில் உள்ள தனது குடிசை மாற்று​வாரிய வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் உயிரை இழந்தார். 'காதல் தோல்வியால் தற்கொலை... ஷோபனாவின் சாவில் மர்மம்!’ என விதவிதமான செய்திகள் வர... விசாரித்தோம்.

சின்னத்திரை டைரக்டர் எஸ்.என்.சக்திவேலின் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா’, 'அல்லி ராஜ்ஜியம்’ என நகைச்சுவை சீரியல்களில் நடித்த ஷோபனா, கடைசியாக இவரின் 'மாமா மாப்ளே’ சீரியலில்தான் நடித்தார்.

''நல்ல ஆர்ட்டிஸ்ட்! ஆச்சி மனோரமா, கோவை சரளா என்று நகைச்சுவை அபூர்வமாகவே மிளிரும் பெண் ஆர்ட்டிஸ்ட்கள் வரிசையில் முன்னேறி வந்தவர். ஒரு சீன் சொன்னா, அதை ஸ்பாட்டிலேயே டெவலப் செய்து பக்காவாக பெர்ஃபார்ம் செய்வார். தன் வெரைட்டியான முக பாவனைகளால் பிரபலம் ஆனவர்.

தன் பர்சனல் விஷயங்களைப்பற்றி யாரிடமும் அவ்வளவாகப் பகிர்ந்துகொள்ள மாட்டார். 'என்னம்மா வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்​களா?’ என்றால், 'எனக்கு அப்பா கிடையாது சார்... அம்மா மட்டும்தான்’ என்பார். அம்மா மீது கொள்ளைப் பிரியம். அம்மாவுக்கும் சமீபத்தில் கேன்சர்... ஷோபனாதான் 4 லட்சம் செலவு செய்து அம்மாவைக் காப்பாற்றினார். இந்நிலையில், அம்மாவுக்கு மறுபடியும் உடல்நிலை மோசமாகவே, ஒரு வாரமாக டல்லாக இருந்தார். அம்மாவுக்குப் பிறகு தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்றுகூட அவர் நினைத்து இருக்கலாம்...'' என்றார் எஸ்.என்.சக்திவேல்.

இறந்துபோன ஷோபனாவின் 10 வருடத் தோழி சுஜாதா. ''காரைக்குடிக்கு ஷூட்டிங்... என் பொண்ணோட பஸ்ஸில் போனேன். அப்ப ஷோபனா நடிச்ச படம் வீடியோவில் ஓடியது. அதைப் பார்த்துட்டு, 'நீ ஏம்மா, ஷோபனா ஆன்ட்டி மாதிரி சினிமாவில் நடிக்க மாட்டேங்கிறே?’னு என் பொண்ணு கேட்டா. 'அவங்க அளவுக்கு எனக்குத் திறமை இல்லம்மா’ன்னேன்'' என்கிற சுஜாதா, ''10 வருஷமா பழகிட்டு இருக்கோம். என்னைப் பார்த்து ஒருதடவை கூட கோபப்பட்டதே இல்லை. என்னையும் அவளையும் அக்கா - தங்கச்சினுதான் பலர் நினைச்சுட்டு இருக்காங்க. அவ நடிக்கிறதைப் பார்த்துட்டு 'நல்லா நடிச்சிருக்கீங்க’னு பலர் எனக்கு போன் பண்ணிப் பாராட்டுவாங்க. 'அது நான் இல்லைங்க என் சிஸ்டர்’னு சொல்வேன். செட்ல எல்லாருக்கும் தைரியம் சொல்லுவா. அதேபோல், அவ இருக்கும் இடம் எப்போதும் கலகலன்னு இருக்கும். அவளை மாதிரி ஒரு நல்ல மனசுக்காரியைப் பார்க்கவே முடியாது. யாரைப்பற்றியும் புறம் பேச மாட்டா. அதேபோல், தன்னோட பெர்சனல் லைஃப் பற்றியும் சொல்ல மாட்டாள். அவளுக்கு டைமிங் சென்ஸ் ஜாஸ்தி. 'காமெடியில் டைமிங்கை மட்டும் பிடிச்சுடுங்க சுஜாதா மேடம். அப்புறம் நீங்கதான் கில்லி’னு சொல்லுவா. எனக்குத் தெரிஞ்சு அவளுக்கு எதிரினு யாரும் கிடையாது. 'எல்லாருக்கும் தைரியம் சொல்லுவா. அவளே கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டாளே...’னு எனக்கு போன் பண்றவங்க எல்லாரும் சொன்னாங்க. பாவம் அவளோட மனசில் என்ன நினைச்சிருந்தாளோ?'' என்றார் சுஜாதா.

''எங்க யூனியன் ஆரம்பிக்கும்போதே ஷோபனா அதில் உறுப்பினர். போன மாசம் போன் பண்ணி, 'சார், என் வாழ்க்கை கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய வீட்டிலேயே முடிஞ்சுபோயிடும்னு பயமா இருக்கு’ன்னு சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு ஒரு வீடு அலாட் பண்ணி இருக்கும்மா’னு சொன்னேன். உடனே, சொசைட்டிக்கானபணத்தைவந்துகட்டிட்டுப் போனாங்க...'' என்கிறார் சின்னத்திரை சங்கங்​களின் கூட்டமைப்பின் தலைவர்இயக்குநர்விடுதலை. மருத்துவமனை, பிரேதப் பரிசோதனை என ஷோபனாவின் இறுதிச் சடங்கை முன் நின்று நடத்தியவர், ''ஷோபனாவின் அம்மாவுக்கு கேன்சர். ஷோபனாவும் சிக்குன்குன்யா வந்து கஷ்டப்பட்டாங்க. அதனால, உடம்பு வீங்கியும் கஷ்டப்பட்டார். 'இனிமேல் நம் சினிமா, சீரியல் வாழ்க்கை அவ்வளவுதான்’ என அவர் பயந்துபோய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்...'' என்கிறார் விடுதலை.

நாம் விசாரித்த வகையில், ஷோபனா முதலில் ஒருவரைக் காதலித்து இருக்கிறார். அந்தக் காதல் நிறைவேறவில்லை. அந்த விஷயத்தை மறந்துவிட்டு இயல்பாக இருந்த நிலையில், அவரின் வாழ்க்கையில் மீண்டும் வந்திருக்கிறது காதல். ஆனால், அதுவும் தோல்வியில் முடிந்திருக்கிறது. அவரின் பிரிவை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், வாழ்க்கையே வெறுத்துப்போய், 'இனி திருமணம் பற்றியே யோசிப்பதில்லை’ என தோழிகளிடம் கூறி இருக்கிறார். இந்நிலையில், 'தன் அம்மாவுக்குப் பிறகான தனிமையை எண்ணியே அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்’ என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்!

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.