Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ - தமிழில் TN

15 ஜனவரி 2011

நாம் தேர்தல்களுக்குப் பயம் இல்லை. தேர்தல் நடத்தினால் ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக் கட்சியும் நடுங்குகின்றன. இது மகிந்தவும், அவரது அரசாங்கமும் எப்போதும் கூறும் திருவாசகம். அப்படியானால், ஏன் மாநகர சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் போட்டிகள் நடைபெறும் நகரங்களின் தேர்தலை ஒத்திவைப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது. அப்படியானால் போட்டிகள் நடத்தப்படும் கொழும்பு மாநகர சபை, பல்லேகல பிரதேச சபை, சூரியவௌ நகரசபை ஆகியவற்றின் தேர்தல்களை மாத்திரமே ஒத்திவைத்திருக்க வேண்டும். அப்படியானால் ஏன் 18 மாநகர சபைகளின் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு வேறு எந்தக் காரணமும் அல்ல. குறித்த 18 நகரங்களிலும் அரசாங்கம் தோல்வியடையும் என புலனாய்வுப் பிரிவுகள் அறிவித்திருந்ததன் காரணமாகவே தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தது.

அப்படியானால், தற்போது நகரத்திலுள்ள வாக்குகளைக் கண்டு அரசாங்கம் நடுங்குகிறது. இவ்வாறு நடுங்குவது சாதாரணமான அரசாங்கம் அல்ல. நிறைவேற்று அதிகாரத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்குள் எழுதிவைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வாழ்நாள் முழுவதும் போட்டியிடக் கூடிய வகையில் திருத்தங்களை மேற்கொண்டு ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாக இருக்கும் நிலையிலேயே அரசாங்கம் இவ்வாறு நடுங்குகிறது. இரண்டாவது பதவிக் காலத்திற்கான பதவியேற்று இரண்டு மாதங்கள் கடக்கும் முன்னரே தேர்தல்களைக் கண்டு இப்படி நடுங்குவார்களானால் எதிர்காலத்தில் எப்படி நடுங்கக் கூடும்.

உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்கு முன்னர் 18 மாநகர சபைகளில் தோல்வி அடைவோம் என கணக்குப் பார்த்த அரசாங்கம் ஏனைய இடங்களில் எவ்வாறு வெற்றிபெறும் என்பதை உறுதிப்படுத்துவது. உண்மையில் அரசாங்கம் கடந்த காலத்தில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியைக் கையில் வைத்துக்கொண்டு வெற்றிபெறும் மன நிலையிலேயே தேர்தல்களுக்குச் சென்றது. எனினும், இம்முறை 18 மாநகர சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைத்து அவற்றில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற தோல்வி பயத்தோடே இம்முறைத் தேர்தலைச் சந்திக்கிறது.

அரசாங்கத்தை வீழ்த்துவது கிராமங்கள் அல்ல நகரங்களே. நகரத்தில் தொடங்கினால் கிராமத்திற்குச் செல்லும். கிராமத்திலிருந்து நகருக்கு வருவதில்லை. நகரத்திற்குள் தனக்கு ஆதரவில்லை என அரசாங்கம் நினைக்குமானால் அரசாங்கத்திற்கெதிராக பாரிய எதிர்ப்புகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அது நகரத்தில் ஆரம்பித்து கிராமங்கள் வரை விரிவடையும். இது இலங்கையில் மாத்திரமல்ல உலகம் முழுவதும் இதுதான் நடைபெறுகிறது. பிரேமதாஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நகரத்தில் ஆரம்பித்தது. பிரேமதாஸவிற்கு எதிரான எதிர்ப்புகள் நகரத்திலிருந்து கிராமத்திற்குச் சென்றது. 2001ம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி நகரத்தை மையமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டது. அதுவும் பின்னர் கிராம் வரை விரிவடைந்தது. 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கெதிரான சமாதானத்திற்கெதிரான சிங்கள பௌத்த சக்திகள் நகரத்தை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பித்தன. பின்னர் அதுவும் கிராமங்கள் நோக்கிப் பரவியது.

உண்மையில் மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையும் நகரங்களிலேயே உருவானது. யுத்த வெற்றியின் பின்னர் மகிந்தவை மன்னராக அபிசேகப்படுத்தியதும் நகரமே. இந்த அபிசேகம் பின்னர் கிராமங்களுக்குச் சென்றது. இந்த நிலையில் நகரங்களில் தேர்தலை நடத்த நடுங்கும் அரசாங்கம் அடுத்த ஆறு வருடங்கள் நடுங்காமல் எப்படி ஆட்சி செய்யப் போகிறது. மகிந்த இரண்டாம் தவணைக்காக பதவியேற்றப் பின்னர் இருந்தே அரசாங்கம் ஆட்டம் காண ஆரம்பித்தது.

ஷஷயானைக் குட்டிகள் கதவைத் தட்டுகின்றன. நான் மிகவும் கடினமாக கதவுகளை மூடிவைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் தேவையெனில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு இழுத்துக் கொள்ள முடியும். எனினும் கொடுப்பதற்கு அமைச்சுப் பதவிகள் இல்லை.|| இவ்வாறு தனது இரண்டாம் தவணைக்கான பதவியேற்பிற்கு முன்னர் மகிந்த தெரிவித்திருந்தார். அப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் இருப்பதாகக் கூறி அரசாங்கம் கைத்தட்டி மகிழ்ந்து கேலி செய்தது. ஆனால் இன்று அரசாங்கத்தில் இருக்கும் சிரேஷ் அமைச்சரான முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னர் எத்தனைப் பேர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குத் தாவப் போகின்றன என எழுதிய ஊடகங்கள், தற்போது ரத்னசிறி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சிக்கு செல்வது குறித்து எழுதுகின்றன.

ரத்னசிறி தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற வைபவத்தில் உரையாற்றும்போது தாம் ஒருபோதும் எதிர்க்கட்சிக்கு செல்லப் போவதில்லையெனவும், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க மகிந்தவிற்கும் முடியாது எனவும் கூறினார். அவர் கூறியது உண்மைதான். ரத்னசிறி என்பவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லும் நபர் அல்ல. அவர் அவ்வாறு செல்வதானால் 1983 ஆம் ஆண்டு அநுர பண்டாரநாயக்கவிற்கும், ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்திற்கும் இருந்த அரசியல் கொடுக்கல் வாங்கல் காரணமாக அதிருப்தியடைந்து கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து விலகி விஜேகுமாரதுங்க, சந்திரிக்கா ஆகியோரின் மக்கள் கட்சியில் இணைந்திருக்கலாம். அவர் மக்கள் கட்சிக்குச் செல்லவில்லை. தற்காலிகமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். கட்சி மீது இருக்கும் பற்று காரணமாக அவர் அரசியலிருந்து சிறிதுகாலம் ஒதுங்கியிருந்தார். 92ஆம் ஆண்டு அவர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் திரும்பினார். சுதந்திரக் கட்சி இல்லாத அரசியலை நினைத்துப்பார்க்க முடியாததன் காரணமாகவே அவர் அப்போது சந்திரிக்காவுடன் இணைந்துகொண்டார். இதனால் அவர் கட்சியை விட்டுச் செல்ல மாட்டேன் எனக் கூறுவது உண்மைதான். அப்படியானால் அவர் என்ன செய்யப் போகிறார். அவர் சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு அந்தக் கட்சியின் மறுசீரமைப்பிற்கு தலைமை தாங்கப் போகிறார். சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்குள்ளும் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கும் தலைமைதாங்கப் போகிறார். அவர் அதனை செய்யும் காட்டியிருக்கிறார். அவரது பேச்சுக்குப் பின்னர் அலுவலகங்கள் இல்லாதிருந்த சிரேஷ்ட அமைச்சர்களுக்கு ஒரு அலுவலகம் கிடைத்தது. செயலாளர்கள் கிடைத்தனர். ரத்னசிறியின் புண்ணியத்தால் 10 சிரேஷ்ட அமைச்சர்களும் கடமைகளைப் பொறுப்பேற்றனர். என்னை நீக்க ஜனாதிபதி அல்ல எவருக்கும் முடியாது என ரத்னசிறி கடமையைப் பொறுப்பேற்கும் போது கூறினார். அவர் வெறுமனே இதனைக் கூறவில்லை. அரசாங்கம் திருந்தாவிட்டால் திருத்துவதற்கான தலைமைத்துவதை வழங்கத் தான் தயார் என்ற செய்தியை அவர் வழங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சிறகுகளை வெட்டி அந்தக் கட்சியின் மறுசீரமைப்புப் பணியை மறுசீரமைப்புக் குழு வெற்றிகரமாக முன்னெடுத்திருந்த சமயத்தில் ரத்னசிறி நெஞ்சை நிமிர்த்தி கதைக்க ஆரம்பித்திருக்கிறார். அரசாங்கத்தினதும் சுதந்திரக் கட்சியினதும் மறுசீரமைப்பு போராட்டத்தை ரத்னசிறி ஆரம்பிப்பாரா என்பதைக் கூறமுடியாது. எனினும் அவர் அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் அடித்தளத்தை இட்டுள்ளார். அது சரியானது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மறுசீரமைப்பு அணிகள் தனியான பிரிவுகளை உருவாக்கி, கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது சாதாரண விடயம். ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழுவினர் தமது போராட்டத்தில் வெற்றிபெற்று கட்சியின் சம்மேளன நாளில் தலைமையகத்தின் வாயில் கதவை அசைக்கும் வகையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் பின்னரே ரத்னசிறி குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார். ரத்னசிறி போன்றவர்கள் மெதமுலன நுழைவாயில் கதவை எப்போது அசைக்கப் போகிறார்கள். அதனை சரியாகக் கூறமுடியாது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியினர் மறுசீரமைப்பு கோரி சிறிகொத்தவின் வாயில் கதவை அசைத்த போது மகிந்தவின் அரசாங்கமே அதனைக் கண்டு குலுங்கியது. இந்த நடுக்கமும் மாநகர சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு காரணமாகும். இது மகிந்த இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்ட பின்னர் ஏற்பட்ட அடுத்த வீழ்ச்சியாகும்.

உள்ளுராட்சி சபை தேர்தல் முறைத் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சுரட்டிக் கொண்டமை மாபெரும் வீழ்ச்சியாகும். தொகுதி வாரியாக உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்தி இலங்கையில் மூன்றில் இரண்டு பிரதேசங்களைக் கைப்பற்றிக் காட்டுவதற்காகவே அரசாங்கம் ஆரம்பித்தில் திட்டமிட்டது. இந்தப் புதிய திருத்தச் சட்டமூலத்தின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரம் கையைவிட்டுப் போய்விடும். ராஜபக்ஷவின் ராஜதானியான பெலியத்தயில் தொடங்கி உள்ளுராட்சி சபைகளின் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைந்துவரும் நிலையில் சட்டமூலத்தை அமுல்படுத்தினால் அது தமக்குத் தாமே வெட்டிக்கொள்ளும் குழியென அரசாங்கம் அஞ்சியது. தொகுதி வாரியாக தேர்தல் நடத்தினால் எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இந்த அச்சம் காரணமாகவே சட்டமூலத்தை நிறைவேற்றாமல் அதனை ஒத்திவைத்தது.

இந்த விடயங்கள் மகிந்த இரண்டாம் தவணைக்காக பதவியேற்ற பின்னர் அரசாங்கம் அடைந்துள்ள வீழ்ச்சியைக் காட்டுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கூட பூர்த்தியடையவில்லை. ஒன்றரை மாதத்தில் தனது நிழலைக்கூடக் கண்டு அஞ்சும் அரசாங்கம் என்ன தொவில் ஆட்டங்கள் ஆடினாலும் ஆறு வருடங்களுக்கு ஆட்சி செய்யுமானால் அது ஆச்சரியமானது.

தேர்தலைக் கண்டு நடுங்கும் அரசாங்கம்! - சிங்களத்தில்- உபுல் ஜோசப் பெர்னாண்டோ - தமிழில் GTN

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.