Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவங்களின்ர றேஞ்சுக்கு…

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே…?

eelam-150x150.jpg»அத்தார்… உங்களுக்கு நூறு வயசு…! » என்றவாறே சொல்லாமல் கொள்ளாமல் முற்றத்து வாசல்வரை வங்த முகத்தாரை வரவேற்றர் அப்புக்குட்டியர்.

»ஓமடா… ஓமடா… எப்ப என்ர காலை வாரலாம் எண்டு காத்துக் கிடப்பாய்… இப்ப என்ன நடந்ததெண்டு என்னை நினைச்சுக்கொண்டிருந்ததாக றீல் விடுகிறாய்…? » என்று முகத்தார் அப்புக்குட்டியரை நக்கல் அடித்தார்.

»அப்ப… அத்தார்… உங்களுக்கு உண்மையாகவே விசயம் தெரியாது போல கிடக்குது… » என்று இழுத்தார் அப்புக்குட்டியர்.

»என்னடா அப்புக்குட்டி… காலங்காத்தால குண்டைத் தூக்கிப் போடுகிறாய்… ஏதேனும் பிரச்சினையோடா… » என்று அங்கலாய்ந்தார் முகத்தார்.

»எங்கட பக்கத்து நாட்டுத் தலையாரி அமெரிக்காவில நிக்கிறாராம்… »

»ஆர்… பக்கத்து நாடெண்டால்… ஜெர்மனியா… சுவிசா… இத்தாலியா… இதுக்கும் உனக்கும் என்னடா இருக்கு அப்புக்குட்டி…? » என்று அலட்சியமாகக் கேட்டார் முகத்தார்.

20061202029515021-260x300.jpg »அத்தாருக்கு அறளை பேந்துபோச்சு… வந்த இடமெல்லாம், நம்மட இடமெண்ட நினைப்போ…? எங்கட பக்கத்து நாடெண்டால்… அது சிறிலங்கா, அதின்ர தலையாரி மகிந்ததான் அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்… » என்று விஷயத்தைப் போட்டுடைத்தார் அப்புக்குட்டியர்.

»உண்மையாகவோடா… அப்புக்குட்டி…? சூடு கண்ட பூனை திரும்பவும் அடுப்பங்கரைக்குப் போகுமோடா…? நம்ப முடியாமல் கிடக்குதடா… » என்று தன் ஆச்சரியத்தை வெளியிட்டார் முகத்தார்.

»அத்தார்… திரும்பத் திரும்ப சந்தேகப்பட்டால்… இதோட கதைக்கிறதை விட்டிடுகிறன்… நீங்கள் கிளம்புங்கோ… » என்றார் கோபமாக அப்புக்குட்டியர்.

»எடேய்… அப்புக்குட்டி… ஆரெட்டப் பேசிறன் எண்ட நினைவோடதான் பேசிறியோடா…? எடி பிள்ளை… எடி பிள்ளை செல்லமணி… உவன் அப்புக்குட்டி என்ன பேசுறான் எண்டு ஒருக்காய் கேளு… » என்று உள்ளே குரல் கொடுத்தார் முகத்தார்.

»ஏன் அத்தார்… கோபப்படுகிறியள்… அது ஒண்டுமில்லை செல்லமணி… அத்தார் கோப்பி ஒண்டு குடிக்க வேணுமாம்… » என்று கூறித் தன் தர்மபத்தினி சன்னதம் கொள்ளாதவாறு பார்த்துக்கொண்டார்.

»அந்தப் பயம் இருக்கட்டும்… செல்லமணியும் இல்லாட்டி… உன்ர வாயை அடக்கத்தான் முடியுமோடா…? அதுசரி… என்ன துணிவில உவர் அமெரிக்காவுக்குப் போயிருக்கிறார்…? »

»அத்தார்… லண்டனில கிடைச்ச வரவேற்பு மகிந்தருக்கு அதிர்ச்சி வைத்தியமாகப் போயிட்டுது. புலம்பெயர் தமிழ் மக்களால மகிந்தருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை, ஜனநாயக உரிமைகளை மதிக்கிற பிரித்தானிய அரசால் தடுத்து நிறுத்த முடியேல்லை… குளத்தோட கோவிச்ச மாதிரி அவருக்கும் கோவம் வந்தது… எண்டாலும் கழுவத் தண்ணி வேணுமே… இதுக்காகத்தான் பெரிய அண்ணையின்ர காலில சரணம் எண்டு போய் விழுத்திருக்கிறார்… அங்கயும் ஒரே ஒரு கொண்டிசன் போட்டிருக்கிறார். ‘நீங்கள் எங்கட நாட்டில என்ன செய்யிறதெண்டாலும், செய்யுங்கோ… எதை அள்ளிக்கொண்டு போறதெண்டாலும், கொண்டு போங்கோ… என்னையும், என்ர குடும்பத்தையும் ஒண்டும் செய்து போடாதையுங்கோ… தமிழருக்கு நீதி எண்டு சொல்லி… என்ர பிழைப்பில மண்ணள்ளிப் பொட்டுடாதையுங்கோ…’ எண்டு சாட்டாங்கமாக விழுந்து கிடக்கிறார் எண்டுதான் சொல்லுகினம்… இல்லாட்டி, கொலைகாரன் போய் பொலிஸ் வீட்டில ஒழிக்க நினைப்பானே…? »

»ஓமடா… அப்புக்குட்டி… நீ சொல்லுறதும் சரிதான்… நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ர பிரதமர் அங்கதானே இருக்கிறார்… அவர் ஒண்டும் செய்யமாட்டாரே…? » என்று முகத்தார் அப்பாவியாகக் கேட்டார்.

u1_uruththirakumaar1-300x209.jpg »விடிய விடிய ராமர் கதை… விடிஞ்ச பிறகு, ராமனுக்குச் சீதை என்ன முறை…? என்டு கேட்டானாம்… அத்தார்… உனக்கு அப்பப்ப கொஞ்சம் மாறாட்ட குணம் வந்து துலைக்குது போல கிடக்கு… எதுக்கும் முக்கியமான சிலதையாவது எழுதி வைச்சுக்கொள்ளுங்கோ… எக்கணம், குடுத்தது,.. வாங்கினது… தெரியாமல் பிடுங்குப்படப் போறியள்… போன ஞாயிற்றுக்கிழமைதான் பாரிசில நடந்த கூத்துக்குப் போனனீங்கள்… கூத்துக் கட்டினவை ‘தமிழர் நடுவம்’ எண்ட கே.பி. குழு எண்டாலும், அதில முக்கிய பாத்திரத்தில உருத்திரகுமாரனுக்கு நெருக்கமான மூண்டு நா.க.த. உறுப்பினர்கள் நடிச்சதைப் பார்த்தியள்தானே… அதில ஒருத்தர் உருத்திரகுமாரன்ர ஜால்ராவாக இருந்து பிரதி மந்திரியாகவும் ஆகியிட்டார். இன்னும் ஒரு மந்திரியை அங்க காணயில்லைத்தான்… அவர் இப்ப சிறிலங்காவில நிக்கிறதாகத்தான் எல்லாரும் சொல்லுகினம். அப்ப… இஞ்ச இயங்கிற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை உடைக்கிற முயற்சிக்குப் பின்னால இவங்கள் எல்லாரும் ஒண்டாகத்தானே நிக்கிறாங்கள். உதை இந்த உருத்திரகுமாரன் தட்டிக் கேக்கிறாரோ…? இல்லையே… » என்று தொடர்ந்த அப்புக்குட்டியாரை இடை மறித்த முகத்தார்…

»எடேய்… எடேய்… அப்புக்குட்டி… நீ உருத்திரகுமாரையும் உவங்களோட சேர்க்கிறாய் பொலக் கிடக்கடா… அவர் எங்கட தேசியத் தலைவரோட நிண்ட ஆளடா… அவர் ஒருக்காலும் பிழையாய்ப் போகமாட்டாரடா… » என்று முகத்தார் பதற்றப்பட்டார்.

»பொறுங்கோ… அத்தார்… பொறுங்கோ… நான் அப்பிடி எங்க சொன்னனான்…? அவருக்கு இவங்களைக் கட்டுப்படுத்த முடியேல்லை. அதுதான் உண்மை… பிரான்சில… பிரித்தானியாவில… கனடாவில… சுவிசில… எண்டு எல்லா நாட்டிலையும் நா.க.த.வின்ர குடும்பி கே.பி. குழுவின்ர கையிலதான் பிடிபட்டுக் கிடக்குது… பிரான்சில தங்களுக்கு ஒத்துவரமாட்டினம் எண்ட மூண்டு பேரின்ர தெரிவை இல்லை எண்டிட்டினம்… லண்டனில, வெற்றி பெற்ற இரண்டு பேரை மிரட்டி ஒதுங்க வைச்சுப்போட்டு… தோத்துப்போன ரெண்டு பேரை அந்த இடத்துக்குக் கொண்டு வந்திட்டினம்… அதில ஒருத்தர் மந்திரியும் ஆகியிடு… தலை ஆடு மாதிரி அடிக்கடி ஜி.ரிவியில தத்துவம் பேசுகிறார்… கனடாவில தங்களுக்குப் பிடிக்காத பிரதிநிதியள்மேல துண்டு நோட்டீசில சத்தி எடுத்துக்கொண்டே இருக்கிறாங்கள்… அதையும் பிரதமர் கண்டு கொள்ளிறதாகத் தெரியேல்லை… சுவிசில ஒருத்தரின்ர உள்ளங் கையில நிண்டு ஒம்பது பேரும் சுளண்டு கொண்டு நிக்கினம்… அப்ப உருத்திரகுமாரன் என்னதான் செய்ய முடியும்… அவர் மன்மோகன் சிங் ரேஞ்சுக்கு பிரதமர் முத்திரையாக மட்டும்தான் இருக்கிறார்… » என்றார் அப்புக்குட்டியர் சோகமாக.

முகத்தாரின் கண்கள் கலங்கின… »அப்ப… உந்த மனிசனை அதுக்குள்ளால வெளிய எடுக்கத்தானேயடா வேணும் அப்புக்குட்டி… » என்றார் கவலையுடன்.

KP3-300x231.jpg »அதுக்கு… உவர் நிலமையைப் புரிஞ்சுகொண்டு… கே.பி. குழுவின்ர கைப் பிடியில இருந்து வெளியேற வேணும்… கே.பி. குழுவைப் பிடிக்காத 40 பேர் இப்பவும் அங்க ஒட்டாமல்தான் இரக்கிறாங்கள்… அவையள் எல்லாரும் உருத்திரகுமாரன் ஒருநாள் கே.பி. குழுவின்ர பிடியில இருந்து வெளிய வருவார்… தமிழீழ விடுதலைக்காகப் போராடுகிற அமைப்புக்களுக்குத் தலைமை வகிப்பார் எண்ட நம்பிக்கையுடன் இண்டு வரைக்கும் ராஜினாமா செய்யாமல் நம்பிக்கையோட இருக்கினம்… இப்பவும், உருத்திரகுமாரன் பக்கத்தில தமிழீழத்திற்காக எதையாவது செய்ய வேணும் எண்டு நினைக்கிற பல பேர் இருக்கினம். உருத்திரகுமாரன் டிதளிவான முடிவு ஒண்டு எடுத்தால், அவையளும் ஆதரிப்பினம்… உருத்திரகுமாரன் தன்ர பிரதமர் பதவி பறி போயிடும் எண்டு தயங்க வேண்டியதில்லை… » என்று விளக்கமாகக் கூறினார் அப்பக்குட்டியர்.

»அது சரியடா, அப்புக்குட்டி… மகிந்தவுக்கு எதிராக பிரன்சிலயும் இண்டைக்கு ஒரு ஆர்ப்பாட்டமாம்… நீ போகேல்லையோடா…? » என்றார் முகத்தார் ஆவலுடன்.

»என்ன… அத்தார் கேள்வி… நான் போகாமலோ…? என்ர செல்லமணி போகாமல் விட விடுவாளோ…? நீங்களும் அக்காவையும் கூட்டிக்கொண்டு வாங்கோவன்… » என்று அழைத்தார் அப்புக்குட்டியர்.

»எனக்கும் விருப்பந்தான்ரா அப்புக்குட்டி… அங்கை வந்தாலும், உன்ர கொக்கா… அந்த எட்டுப்பேரையும் காட்டித்தரச்சொல்லி நிப்பாளேயடா… »France_tgte_2010_001-300x200.jpg

»அத்தார்… உங்களுக்கென்ன விசரே…? அவங்கள் எங்க அங்க வரப்போறாங்கள்… அவங்களே, அவங்களை எதிர்த்துப் போராட முடியுமே…? முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு அவங்களை எந்த ஆர்ப்பாட்டத்திலேயும் பாத்தனீங்களோ…? அவங்கள் வரமாட்டாங்கள்… வேணுமெண்டால், அவங்கட பக்கம் நிக்கிற அந்த முப்பத்தைஞ்சு பேரையும் ஆர்ப்பாட்டத்துக்குப் போக வேண்டாம் எண்டு தடக்கப் பாப்பாங்கள்… » என்றார் அப்புக்குட்டியர் கவலையாக.

»அப்ப… அந்த நா.க.த. மந்திரி, பிரதானியள் வருவினமே…? » என்று கேட்டார் முகத்தார் அப்பாவியாக.

»நாசமாய்ப் போச்சுது… எடி செல்லமணி… எடி செல்லமணி… முகத்தார் வீட்டுக்குப் போன் பண்ணி… அக்காவை உடனே வரச்சொல்லு… அத்தார் ஒரு மாதிரிக் கதைக்கிறார்… நாடு கடந்த தமிழீழ அரசின்ர மந்திரி, பிரதானியள் ஆர்ப்பாட்டத்துக்கு வருகினமோ…? எண்டு கேக்கிறார்… அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே… அத்தாருக்கு உடனடியாக வைத்தியம் பார்க்க வேணும்… » என்று உள்ளே குரல் கொடுத்தார் அப்புக்குட்டியர்.

செல்லமணி வெளியே வருவதற்குள், முகத்தார் எடுத்தார் ஓட்டம்…

- சிரித்திரன்

URL simplifié: http://www.eutamil.com/?p=15606

உசுரே போகுது...உசுரே போகுது.....

டெமிழரை நெனைக்கையிலே.....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.