Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது

Featured Replies

மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது:

இந்தியா – சிறிலங்கா கூட்டறிக்கை

திங்கள், 31 ஜனவரி 2011( 16:39 IST )

கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்தச் சூழலிலும் துப்பாக்கியால் சுடுவதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புதுக்கோட்டை, இராமேஸ்வர மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்பைச் சமாளிக்க அயலுறவுச் செயலர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.

இன்று காலை இலங்கை வந்த நிருபமா ராவ், சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன் மீனவர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கை விடுத்துள்ளன.

அந்த கூட்டறிக்கையில், எந்த சூழலிலும் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது நியாயப்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் சமீபத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கவலைத் தெரிவித்ததாகவும், அப்படிப்பட்ட சம்பவங்கள் இதற்கு மேலும் தொடராமல் இருக்க, அச்சம்பவம் குறித்து தீவிரமாக புலனாய்வு செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

“எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் பிரச்சனையில் - அது இந்திய மீனவர்கள் உட்பட எந்த மீனவர்கள் ஆனாலும் - மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுகுவது என்பதே சிறிலங்க அரசின் கொள்கையாக இருந்து வருகிறது என்று சிறிலங்க அதிகாரிகள் வலியுறுத்தினர்” என்று கூறியுள்ள அந்தக் கூட்டறிக்கை, “இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை சிறிலங்க அரசு கண்டுபிடிக்கும். இந்த புலனாய்வில் இந்தியத் தரப்பும் தங்களுக்குக் கிடைக்கும் விவரங்களை சிறிலங்க அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பதை நியாயப்படுத்த முடியாது என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்திய - சிறிலங்க அரசுகளுக்கு இடையே 2008ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கையெழுத்தாகி வெளியிடப்பட்ட மீன் பிடித்தல் தொடர்பான கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டபடி, எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் பிரச்சனையை சமாளிக்க உருவாக்கப்பட்ட ஏற்பாட்டால், மீனவர்களின் மீதான தாக்குதல் குறைந்துள்ளது” என்றும், “மீனவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய இரு நாடுகளும் மீண்டும் பேசுவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

“மீன் பிடித்தல் தொடர்பாக இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு விரைவில் கூடி பேசுவது என்றும், அப்போது இரு நாடுகளும் மீன் பிடித்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது என்றும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மீன் பிடித்தல், மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக புதியதொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவது குறித்தும் இந்த கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில் பேசுவது என்றும், இரு நாடுகளின் மீனவர் அமைப்புகளுக்கிடையே சந்திப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் இரு தரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் செயலாற்றுவது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டறிக்கை கூறி முடிக்கிறது.

மொத்தத்தில், இந்த கூட்டறிக்கையில் இந்த மாதத்தில் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை மட்டுமே மையப்படுத்தி இரு நாடுகளும் பேசியுள்ளன. இதுவரை 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அது குறித்து இந்த கூட்டறிக்கை ஏதும் பேசப்படவில்லை.

அதுமட்டுமின்றி, இரண்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தாங்கள் காரணமல்ல என்று சிறிலங்க அரசு கூறியதை ஏற்றுக்கொ்ண்டு இந்த கூட்டறிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1101/31/1110131042_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அதனால கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டி சாகடிப்பதுதான் நல்லது.-இந்தியா

போங்கடா நீங்களும் உங்கட ஒப்பந்தங்களும்.

  • தொடங்கியவர்

மீனவர் மீது தாக்குதல்: காதில் பூ சுற்றும் கூட்டறிக்கை

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்து மீறி நடத்திவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு ‘முடிவுகட்ட’ கொழும்புவிற்குச் சென்ற இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன் பேசிய பிறகு, இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கை ‘பட்டும் படாமல் தொட்டும் தொடமல்’ தமிழன் காதில் பூ சுற்றியுள்ளனர்.

இந்திய - இலங்கை கடல் பரப்பில் சமீபத்தில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான வன்முறை குறித்து இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறிவிட்டு, அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், ஏதோ... யாரோ.. நடுக்கடலில் திடீரென்று தோன்றி பத்து நாளைக்குள் இரண்டு தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு போய்விட்டது போல் அறிக்கையை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.

“எந்தச் சூழலிலும் எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நியாயப்படுத்த முடியாது” என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த கூட்டறிக்கையில் கூறிவிட்டு, “மீனவர்கள் மீது நடந்த வன்முறைக்கு (எப்படி வார்த்தையைப் போடுகிறார்கள் என்று கவனியுங்கள்) காரணம் என்ன என்பதை புலனாய்வு செய்யப்படும் என்றும், அப்படிப்பட்ட நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் கூறி முடித்து விடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சிறிலங்க கடற்படையே என்று துப்பாக்கிச் சூட்டில் புதுக்கோட்டை மீனவர் கொல்லப்பட்டபோதும், கழுத்தில் சுறுக்கு மாட்டி வேதாரண்யம் மீனவர் சாகடிக்கப்பட்டபோதும் உடனிருந்து பார்த்துவிட்டு தப்பிவந்த மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கூட்டறிக்கையில் சிறிலங்க கடற்படை அத்தாக்குதலில் ஈடுபடவில்லை என்ற சிறிலங்க அரசின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது! இது இந்த மாதத்தில் கொல்லப்பட்ட இரண்டு தமிழக மீனவர்களின் சோக முடிவு மட்டுமல்ல, இதற்கு முன்னர் கடந்த 27 ஆண்டுகளில் சிறிலங்க கடற்படையினர் சுட்டுக் கொன்ற 500க்கும் அதிகமான (மீனவர்கள் கணக்கு 539) தமிழக மீனவர்களின் படுகொலைகளுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். அப்படியானால், சிறிலங்க கடற்படையினர் கொன்றதாக உடனிருந்து தப்பி வந்த மீனவர்கள் கொடுத்த புகாருக்கு விசாரணை, வழக்குக் கிடையாதா?

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/31/1110131057_1.htm

  • தொடங்கியவர்

இப்போது நமக்கு முன் இருக்கும் கேள்விகள் இவை:

1. இந்தியத் தமிழ் மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னையில் இலங்கைக் கடற்படையினர் மட்டும் துப்பாக்கியைத் தூக்குவது ஏன்?

2. இந்திய-பாகிஸ்தான் மீனவர்கள் இடையிலும் ஜூரிஸ்டிக்‌ஷன் பிரச்னைகள் உள்ளன. அங்கெல்லாம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்படும் நிலையில் இலங்கைக் கடற்படை மட்டும் கொலையில் ஈடுபடுவது ஏன்? அதுவும் மனிதாபிமானமற்ற முறையில், மிருகத்தனமாக கழுத்தில் சுருக்கிட்டு, ஆடைகளைக் களைந்து, வதைஇய்ல் ஈடுபடுவது ஏன்?

3.இதனைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்துள்ளது? இந்திய மீனவர்கள்மீது கோபம் கொள்ளும் இலங்கை மீனவர்கள்கூட இந்தச் செயலை என்றும் நியாயப்படுத்த மாட்டார்கள்.

4. இலங்கைக் கடற்படை இந்தக் கொலைச் செயல்களில் ஈடுபடவில்லை என்று இலங்கைத் தரப்பு கூறுகிறது. அப்படியானால் யார் பொய் சொல்கிறார்கள்? தமிழக மீனவர்களா? இந்திய அரசு விசாரணை செய்து உண்மையை வெளியே கொண்டுவரட்டுமே?

5. ஜனவரியில் இரு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது நிஜம். அவர்களது பிணங்களே சாட்சி. அவர்களது பிணங்களுக்கு ஈடாக தமிழக அரசு கொடுத்துள்ள இழப்பீட்டுப் பணம் சாட்சி. அப்படியானால் இந்த மீனவர்களைக் கொன்றது யார்?

6. கடந்த முப்பது வருடத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாறாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எந்த மீனவரும் கொல்லப்படவில்லை. ஒரு இலங்கை மீனவர்கூட இந்தக் காலகட்டத்தில் இந்தியக் கடற்படையால் கொல்லப்படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? யார் பொய் சொல்கிறார்கள்?

7. நாடு கடந்து செல்லும் இந்தியர்கள் இன்னலில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவத்தானே இந்தியத் தூதரகங்கள் உள்ளன? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல், அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் சிக்கிய இந்தியர்கள் படும் பாடு, எகிப்தில் நடக்கும் புரட்சியில் சிக்கியிருக்கும் இந்தியர்களைக் காத்தல் - ஆகியவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடும் இந்திய அரசு, தமிழக மீனவர்களின் துயர் துடைக்க இதுவரை என்ன செய்துள்ளது?

8. ஒரு ஆதரவான வார்த்தைகூடக் கிடையாதே? கடந்த வாரத்தில் இடிச்ச புளிபோலத்தானே மன்மோகன் சிங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இருந்துள்ளனர்? தமிழகத்திலிருந்து சென்றுள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமிருந்து ஒரு வார்த்தை வெளிவரவில்லையே? நடந்துகொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பிரச்னை அவர்கள் கண்களில் படவேயில்லையா?

(மின்னஞ்ச்சலில் வந்தது)

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்தப் பிரச்னை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?

1. இதில் ஒரு கையொப்பம் இடுங்கள்

http://www.petitiononline.com/TNfisher/petition.html

2. தமிழக மீனவர்களைக் காப்போம்… இணையத்தில் பிரசார இயக்கம்! - TWITTER

http://twitter.com/savetnfisherman

3. தமிழக மீனவர்களைக் காப்போம்… இணையத்தில் பிரசார இயக்கம்! - FACEBOOK

http://www.facebook.com/savetnfisherman

தொடர்பு செய்தி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=81172

“எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் பிரச்சனையில் - அது இந்திய மீனவர்கள் உட்பட எந்த மீனவர்கள் ஆனாலும் - மனிதாபிமான கண்ணோட்டத்தோடு அணுகுவது என்பதே சிறிலங்க அரசின் கொள்கையாக இருந்து வருகிறது என்று சிறிலங்க அதிகாரிகள் வலியுறுத்தினர்”

சிறிலங்காவின் மனிதாபிமானம் பேசுது...இந்தியா தாளம்போடுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.