Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மகிந்தாவை சந்தித்ததாரா றொபேட் ஓ பிளேக்? – டெய்லி மிரர் எழுப்பிய கேள்வி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Friday, February 4th, 2011 | Posted by admin

அமெரிக்காவில் உத்தியோகபூர்வமற்ற முறையில் மகிந்தாவை சந்தித்ததாரா றொபேட் ஓ பிளேக்? – டெய்லி மிரர் எழுப்பிய கேள்வி!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் இடையில் குடும்ப ரீதியாக நெருங்கிய உறவுகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ராசில் தங்கியிருந்ததாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando தான் எழுதியுள்ள செய்திக் கட்டுரையிலேயே இது குறித்து கூறியுள்ளார். இச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

‘சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்க விஜயம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியிடம்படுகின்ற போதிலும், அவரின் இவ் விஜயத்தின் உண்மை குறித்து இதுவரை இரகசியமாகவே உள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா விஜயம் செய்திருந்த போது அமெரிக்காவிலுள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு அவருக்கு எதிராக நட்டயீடு கோரி வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த போது, சிறிலங்கா படைத்தரப்பின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உட்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக நாடு திரும்பியிருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா விஜயம் செய்திருந்த போது சரத் பொன்சேகா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது போல் மகிந்த ராஜபக்ச விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

இவர்கள் இருவருக்கும் ஒரேயளவான இராஜதந்திரப் பாதுகாப்பு இருந்த போதிலும், சரத் பொன்சேகா கிறீன் கார்ட்டினை வைத்திருக்கும் ஓர் அமெரிக்கப் பிரஜை என்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் உரிமை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இருக்கின்றது.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியிருந்த ரெக்சாஸ் பகுதியில் தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கும் ஒரேவேளை தங்கியிருந்துள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தங்கியிருந்த ரெக்சாஸில் வைத்து றொபேட் ஓ பிளேக் சந்தித்தாரா என ஊடாகவியலாளர்கள் கேட்டபோது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் குரல்தரவல்ல அதிகாரி தெளிவான பதில் எதனையும் அளிக்கவில்லை.

ரெக்ஸ்சாஸ் பகுதியில் அமைந்துள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காகவே றொபேட் ஓ பிளேக் அங்கு சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ரெக்சாஸூக்கு சென்றிருந்த காலப் பகுதியில் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸ்சாசில் தங்கியிருந்தமை வெறும் தற்செயல் நிகழ்ச்சியாக பார்க்க முடியவில்லை.

அதேவேளை, றொபேட் பிளேக்கின் சம்மதமின்றி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன் அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் பிரச்சினைகள் ஏதாவது தோன்றுமா என மகிந்த ராஜபக்சவோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ றொபேட் பிளேக்கைத் தொடர்பு கொண்டு கட்டாயம் விசாரித்திருப்பார்கள்.

பிரித்தானியாவுக்கு கடந்த வருடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்த போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருந்த பின்னணியில், றொபேட் பிளேக்கிற்குத் தெரியாமல் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் செய்யத் துணிந்திருக்கமாட்டார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக றொபேட் ஓ பிளேக் இருந்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவுடனும், அவரது குடும்பத்தினருடனும் அவர் நெருங்கிய உறவுகயைளக் கொண்டிருந்தார்.

இவர் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக கொழும்பில் இருந்த காலப் பகுதியில் மகிந்த ராஜபக்சவின் அழைப்பினை ஏற்று அவரின் சொந்த ஊரான தங்காலை பகுதியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் ரொபேட் ஓ பிளேக் குடும்பத்தினருடன் தங்கியிருந்து கடலில் நீச்சலடித்தாகவும் கூறுப்படுகிறது.

இப் பின்னணியில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த போது றொபேட் ஓ பிளேக்கும் அப் பகுதியில் தங்கியிருந்தமையானது தற்செயல் நிகழ்ச்சியல்ல என்பது தெளிவாகின்றது. இவர்கள் இருவரும் உத்தியோகபூர்வமற்ற முறையில் ரெக்சாசில் சந்தித்திருப்பதாகத் தான் தெரிகிறது.

அதனால் தான் தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்ற சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அவரின் செயலாளர் லலித் வீரதுங்கவும், வெளிவிவகார அமைச்சர் பீரிஸூம் கூடவே சென்றுள்ளனர்’ எனவும் இச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பொங்குதமிழ்

Short URL: http://thaynilam.com/tamil/?p=2506

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகத்தின அழகு முகத்தில் தெரியும். எரிக் சொல்கைம், றொபேட் பிளேக் இவர்களின் முகச்சாயல்களில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல. இவர்களுடன் பேசுவதற்கே தகுதியற்ற மனிதர்கள். கூடியிருந்து குழிபறிக்கும் பெருச்சாளிகள். முதலில் அகத்தின்அழகை முகத்தில் தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.

எமது போராட்டத்தைப் பின்னடையச் செய்தவர்களில் இவர்களுக்கு 75 வீதமான பங்குண்டு;. இவர்கள் என்றும் அரசாங்கத்தின் மீத பழியைச் செல்லி முடிவில் புலிகள் மீது சுமத்துவதைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். அரசாங்கம் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசியது பற்றி எப்போதாவது வாய்திறந்தார்களா? புலிகள் மக்களுக்குள் இருந்ததால் அழிவு கூடுதலானது என்கிறார் பிளேக்.இதிலிருந்து ஒட்டுமொத்தமானவர்களும் புலிகளை அழிப்பதில் முனைப்புடன் இருந்திருக்கின்நார்கள் என்பது வெட்டவெளிச்சம். இன்று வரை தமிழர்கின் உரிமை பற்றி யாராவது வாய் திறந்தார்களா? தமிழர் பிரச்சனைக்கு முடிவு காணுவதில் முனைப்புக்காட்டினார்களா, புலிகள் மௌனி;த்திருந்தாலும், புலிகளுக்கு எதிரான உலகத்தின் செயற்பாடுகள் முனைப்புடன் தான் இருக்கின்றது. இவர்களுக்கு இன்னும் அந்தப் புலி என்னும் கிலி போகவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.