Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்:-

04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து கூறிய மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார்.

அதேவேளை நாட்டை விடுதலை செய்த சரத் பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை என்ற தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரவு 7 மணிக்கு தீபந்தம் ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டம் பொரல்லை சந்தியில் ஆரம்பித்து, பேரணியாக வெலிகடை சிறைச்சாலை வரை செல்லவுள்ளது.

சரத்பொன்சேக்காவை அவரது மனைவி இன்று முற்பகல் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேக்கா விடுதலை செய்பப்டுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலும் அது நிறைவேறாமல் போயுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் 63 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுதளுவிய ரீதியில் 1623 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் போது சரத்பொன்சேக்காவை அவரது மனைவி இன்று முற்பகல் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

சரத்பொன்சேக்காலைப் பார்வையிட்ட அவரது மனைவி ஊடவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

இதன் போது இன்றைய சுதந்திர தினத்தில் சரத்பொன்சேக்காவைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

எனினும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவரை சிறையில தள்ளிவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஏனையவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனைப் பறைச்சாற்றும் முகமாகவே இயற்கை அனர்த்தங்கள் காலநிலை மாற்றங்கள் எல்லாம் ஏற்படுவதாகவும் இதுவே இயற்கையின் சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்ட அனோமா பொன்சேக்கா என்ன நடந்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது எனவும் எப்படியாயினும் உண்மை ஒரு நாள் வெல்லும் எனவும் கூறினார். இந்த நம்பிக்கைதான் தமதுக்கிருக்கும் பாரிய சக்தி எனவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57468/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமாட் உடை.

தமிழின படுகொளையாலர்களில் ஒருவர் உள்ளே.

மற்றவர்கள் விரைவில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின படுகொளையாலர்களில் ஒருவர் உள்ளே.

மற்றவர்கள் விரைவில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வார்கள்!

ஒரு எதிரியை அவன் எதிரியே கொன்றாலும் தகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.