Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்.

2rzf7gp.jpg

"யாழ் நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ் நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்பேட்டில்

ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்

நானோ

வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்

ஒஸ்லோவில்

என்ன நம் குடும்பங்கள்

காற்றில்

விதிக்குரங்கு கிழித்தெறியும்

பஞ்சுத் தலையணையா?”

என்று ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன். அதன் ஒலிவடிவமும் எழுத்தும் இங்கே.

aadukalam250209_1024_1.jpg

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் திரு.வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களைச் சந்திக்கிறோம். வணக்கம் ஐயா

வணக்கம் கானா, வணக்கம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேயர்களே

இதுவரை காலமும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாகத் திகழ்ந்து வரும் நீங்கள் தற்போது ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக ஒரு நல்லதொரு திரைக்கலைஞனாகப் பேசப்படுகின்றீர்கள் அதற்கு முதலில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி கானா பிரபா, என்னுடைய வாழ்க்கை முழுவதுமே தொடர் அட்வன்சர்ஸ் ஆகத் தான் இருந்திருக்கின்றது. இது ஒரு புதிய அட்வென்சர் என்று என்னுடைய இயக்குனர் ஒருமுறை கூறியிருந்தார். நான் மிகவும் மனச்சோர்வு அடைந்து துயரத்தில் மூழ்கியிருந்த ஒரு தருணத்தில் ஒரு தப்பியோடுதல் மாதிரித் தான் இந்தச் சினிமாப் படவாய்ப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இன்றைக்கு வந்து இந்த முயற்சியில் வெற்றிடைந்திருப்பதால் உலகின் பலபாகங்களில் இருந்தும் எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் உட்படத் தொலைபேசியில் அழைத்து ஒரு ஈழத்தமிழர் நிமிர முடியும் வெற்றியடைய முடியும் என்று நிரூபித்திருக்கின்றீர்கள் நன்றி என்று சொல்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

நீங்கள் வெறும் படைப்பாளியாக மட்டும் நின்றுவிடாது பல இடங்களிலே மனித நேயம் மிக்கவராக நீங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். ஈழத்தின் பேரவலம் உங்களுக்கும் பெரும் மனச்சோர்வை உண்டுபண்ணியதைப் பல பேட்டிகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.

ஈழத்தில் பிறந்து புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் இருக்கும் நீங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு இளம் இயக்குனரின் பார்வையில் பட்டு ஆடுகளம் என்கின்ற திரைப்படத்தில் ஒரு புதிய களத்தில் நடிகராகக் களம் இறங்கியிருக்கின்றீர்கள், இந்த அறிமுகம் எப்படி அமைந்தது?

உண்மையில் ஈழத்தமிழர்களுக்கான ஒரு பெரிய பாதையைத் திறந்தது பாலுமகேந்திரா அவர்கள். இருந்தாலும் அந்தப் பாதை இன்னும் பெரிதாக வேண்டியிருந்தது. பாலுமகேந்திராவுக்கும் எனக்குமான நட்பே இந்த வாய்ப்புக்குக் காரணமாகியிருக்கின்றது. அந்த நட்பின் வழி இந்தப் பாதையைப் பெரிதாக்கியிருக்கின்றேன். பாலுமகேந்திராவின் மாணவன் வெற்றிமாறன். பாலுமகேந்திரா தன் மாணவர்களுக்கு மட்டுமல்ல தன் உறவினர், நண்பர்களுக்கும் என் கவிதைகளை வாசிக்கச் சொல்லுவது வழக்கம். மேடைகள் தோறும் என்னுடைய கவிதைகளைப் பற்றிப் பேசுவார். இந்தவகையில் என்னுடைய கவிதைகளூடாகத் தான் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும். இந்தப் படத்துக்கான டிஸ்கஷன் நடந்துகொண்டிருக்கும் போது அவருடைய வார்த்தையில் சொல்வதானால் "சிங்கம் மாதிரி ஒராளைத் தேடுறோம் நீங்க நடிக்கிறீங்களா?" என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன் எனக்கு வாழ்க்கை முழுக்க அட்வென்சர்ஸ் தான் இதுவும் அப்படியொன்று என்று ஏற்கிறேன் உங்களால் முடியுமானால் என்னை நடிக்க வையுங்கள் முடியாட்டி என்னை விட்டுடுங்க என்றேன். எனக்கு நடித்த அனுபவம் உண்டு. நான் 87 ஆம் ஆண்டு திருமணம் ஆனதில் இருந்து எனது மனைவிக்கு முன் நடித்திருக்கின்றேன் (;-) என்று சொன்னபோது அவர் சொன்னார் அது போதும் என்று. இப்படித் தான் இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால் நான் பாலுமகேந்திராவின் பாதையை அகலமாக்கியிருக்கின்றேன். இதற்கூடாக எமது ஈழத்தவர் பலர் வந்து தமிழகத்தவரோடு கொலாபிரேட் பண்ணி படங்கள் தயாரிக்கவும் நடிக்கவும் பல்வேறு சினிமாத் துறையில் ஈடுபடவும் என்னுடைய வரவும் வழி சமைக்கும் என்று எண்ணுகிறேன். உண்மையில் தமிழ் சினிமா வந்து உலகத் தமிழ் சினிமாவாக வரும் உலகமயமாக்கலின் ஒரு பரிமாணம் தான் நான்.

aadukalam250209_1024_2.jpg

இந்தப் படம் ஒருவருடத்துக்கு மேல் தயாரிப்பில் இருந்தது, மதுரையைப் பின்புலமாக வைத்துப் படமாக்கப்பட்டது, உங்களுக்கு இதுவொரு புதிய அனுபவமாக அமைந்திருக்கும் இல்லையா?

உண்மையில் ஆறுமாதங்களுக்குத் தான் கேட்டார்கள் அதனால் தான் உடனேயே சம்மதித்தேன் ஆனால் பிறகு மூன்று மாதம் என்று இரண்டு வருஷம் எடுத்திட்டுது. அந்தத் தருணங்களில் நான் விரக்தி நிலையில் இருந்த காலம். என்னுடைய சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத சூழ்நிலையில் நான் மிகவும் மனம் உடைந்திருந்தேன் பொது நிகழ்வுகளை நான் முற்கூட்டியே உணர்ந்ததால் என்னால் எதுவுமே செய்யமுடியாத சொல்ல முடியாத கையாலாகாத நிலையில் இருந்த கட்டத்தில் தான் இந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். உலக சினிமாவைப் பார்த்த அனுபவம் எனக்கிருந்தாலும் சினிமா நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பயிற்சிப்பட்டறை மூலம் விளங்க வைக்க முடியாது என்றபோது வெற்றிமாறன் எனக்குச் சினிமா நடிப்பு பற்றிய கோட்பாட்டு வகுப்புக்களை எடுத்தார். நான் நிறைய உயிர்த்த ஆளுமைகள் பிறந்த மண்ணில் இருந்து வந்த வகையிலும், நிறையப் போராட்டங்களில் ஆளுமைகள் பலரைப் பார்த்தவன் என்றவகையிலும் என்னிடத்தில் ஒரு பெரிய வீடியோக்களஞ்சியம் இருப்பதை நான் உணர்ந்தேன். வெற்றிமாறன் சிச்சுவேஷன் சொல்லும் போது என் வீடியோக்களஞ்சியத்தில் இருந்து மீள நினைவூட்டி நடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது பேட்டைக்காரர் என்பது மதுரைச் சூழ்நிலைக்கான ஒரு பாத்திரப்படைப்பாக இருந்தாலும் எமது தாயகத்திலும் இதையொத்த சண்டியர் என்ற பாத்திரம் இருக்கும். அப்படியாக உங்களுடைய வாழ்வியலில் நீங்கள் யாராவது ஒருவரைப் பொருத்திப்பார்த்திருந்தீர்களா?

ஆமாம் என்னுடைய மாமா ஒருத்தர் இதேமாதிரியான ஒரு சண்டியர் தான். அவருடைய உடல்மொழி இப்படித்தான். அதேமாதிரி என்னுடைய தகப்பான பெரும் ஈகோ படைத்த பணக்காரர், அவருக்கும் எனக்கும் இதனாலேயே பல மோதல்கள் வந்திருக்கு. இந்த இரண்டுபேருடைய முகபாவங்களும் உடல்மொழிகளும் எனக்கு உதவியிருக்கு என்று தான் நினைக்கிறேன். அத்தோடு வாழ்க்கை முழுவதும் நிறையச் சண்டியர்களைச் சந்தித்திருக்கின்றேன். என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்குப் புரியும் என்னுடைய 15, 16 வயதிலே சாதிவெறியர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கியவன் நான். போர்டிங்கில் இருக்கும் காலத்தில் களவாக இடதுசாரியினர் நடத்தும் சாதி ஒழிப்புக் கூட்டங்களுக்குப் போவது வழமை. இவற்றால் வீட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலையும் உருவானது. ஆறேழு வருஷங்கள் படிப்பை இடைநிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்களோடே வாழ்ந்ததால் எனக்கு நிறைய வன்முறை, எதிர் வன்முறை கொண்ட மனிதர்களோடு வாழ்ந்த அனுபவம்.

பாலுமகேந்திரா அவர்கள் இந்தப் படத்தில் உங்களின் நடிப்பைப் பார்த்துவிட்டு எப்படித் தன் கருத்தை வெளிப்படுத்தினார்?

அவருக்கு என்னுடைய தோற்றம் இந்தப் பாத்திரத்துக்கு ஏற்றதென்றே எண்ணினார். ஆனால் இவ்வளவு இயல்பாகவும் வித்தியாசமாகவும் நடித்திருப்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. படம் பாதி எடுக்கும் போதே அவரும், ஒரு சில கன்னட இயக்குனர்களும் பார்த்த போது எனக்கு விருது கிடைக்கும் என்றே சொல்லியிருந்தார்கள். ஆனால் டப்பிங் பேசினால் விருது கிடைக்கும் என்ற சூழல் இருக்கின்றது. தன்னுடைய நண்பன் வெற்றிபெற்றிருக்கின்றான் என்ற மகிழ்ச்சி பாலுமகேந்திராவுக்கு இருக்கின்றது.

அந்தப் படத்தின் பேச்சு வழக்கு என்பது ஒரு தடைக்கல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன், உங்களுக்கு ராதாரவியின் குரலை டப்பிங்கில் பயன்படுத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது நீங்களே உங்களின் குரலில் வழங்கியிருக்கலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கும் வந்திருக்கலாம் இல்லையா?

உள்ளே நிறைய அரசியல் இருக்கின்றது அதையெல்லாம் சொல்லவேண்டி எதற்கு. இயக்குனர் பாலா சிங்களப்பெண்ணான பூஜாவை அவருக்கு விருது கை நழுவிப்போயிவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ் பேச வைத்திருக்கின்றார். இயக்குனர் அமீர் மலையாளப்பெண்ணான ப்ரியாமணியையும், மலையாள நடிகர்களையும் தமிழ் பேச வைத்திருக்கின்றார். யாருக்கு விருது கிடைக்கவேண்டும் கிடைக்கக்கூடாது என்பதை இயக்குனர் தீர்மானிக்கக் கூடியதாக அமைந்து விடுகின்றது. விருதுக்கமிட்டி தீர்மானிக்க முன்னர் இப்படியான செயற்பாடுகள் அபத்தமென்பதை அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். மற்றும்படிக்கு கிராமியமக்கள் மத்தியில் என்னுடைய பாத்திரத்துக்குப் பெரும் வரவேற்புக் கிட்டியிருக்கின்றது.

தமிழகத்திலே ஊடகங்களும் சரி, தனிப்பட்டவர்களும் சரி பலருடைய பாராட்டுதல்கள் உங்களுக்குக் கிட்டியிருக்கும் வேளை மறக்கமுடியாத சில பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்

சற்று முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் என்னுடைய நீண்டகால நண்பர் பேராசிரியர் சிவலிங்கராஜா அழைத்திருந்தார். வலம்புரி பத்திரிகையில் தான் ஒரு கட்டுரையை எழுதியிருப்பதாகவும் அது பரவலான வரவேற்பைப் பெற்றதாகவும் சொன்னார். என்னுடைய இன்னொரு நண்பர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கனும் பாராட்டியிருந்தார். ஆச்சரியம் தரத்தக்க விதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் சென்னை சாந்தி தியேட்டரில் என்னைப் பாராட்டி ஒரு தட்டி வைத்திருக்கின்றார். இப்படியான நிகழ்வுகள் என் மனச்சோர்வில் இருந்து விடுபடவும் ஈழத்தமிழரால் இப்படியும் சாதிக்க முடியும் என்று அழைப்புக்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனால் இதைத்தவிர வேறு எதைச் செய்து விட முடியும்?

நன்றி: பேட்டியைத் தந்த வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர், தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தித் தந்த நண்பன் "காதல் கடிதம்" வசீகரன்

ஒலிவடிவம் இங்கே

http://kanapraba.blogspot.com/2011/02/blog-post_07.html

கானா பிரபா

Edited by ந.சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி .........

.

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.