Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடுகளம் பார்த்தேன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம் பார்த்தேன்...

[Aadu kalam] நீண்டகால இடைவெளிக்குப் பின் யாழ்ப்பாணம் செல்லா திரையரங்கில் ‘ஆடுகளம்’ எனும் படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்ததும் முப்பத்தைந்து ஆண்டு கால நினைவுகள் என்நினைவுத் திரையில் நிழலாடின.

எனது நண்பரும் ஒரு சாலை மாணாக்கரும் உறவினருமான கவிஞர் வ.ஐ.ச. ஜெயாபாலன் இந்தப் படத்திலே தனுஷ் உடன் இணைந்து முக்கியபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலே ஒரு கிராமத்தில் ஒரு காலத்தில் நடைபெற்ற கோழிச்சண்டையை (சேவற்சண்டையை) மையமாகவைத்துப் பின்னப்பட்ட கதையிலே பரம்பரை பரம்பரையாகக் கோழிச் சண்டையை நடத்தி வரும் பேட்டையாராக இலங்கையைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரது தோற்றம் அந்தப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. அசல்கிராமத்தவனாக, கிராமத்து ஆளுமைகள் நிரம்பிய தலைமைப் பாத்திரமாகப்படம் முழுவதும் பவனி வரும் ஜெயபாலனும் கதாநாயகனாக நடிக்கும் தனுஷிம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை-காலனித் துவகாலக் கிராமிய வாழ்வியலை நம் கண்முன்கொண்டு வருகின்றனர்.

தனுஷ் தவிரப் பெரும்பாலும் மற்றவர்கள் புதுமுகங்களே. இந்தோ ஆங்கிலக் கிறிஸ்தவப் பெண்ணான கதாநாயகி, அவரது வீட்டுச் சூழல், மொழி, சடங்குகள் முதலானவை காலனித் துவ வாழ்வியலின் ஒரு கூறு எங்கள் கிராமங்களிலே எவ்வாறு எஞ்சி இருந்தது என்பதைப்படம் சிறப்பாகக் காட் டுகின்றது. “வெள்ளாவியில் வைத்து வெளுத்ததோ, வெய்யிலைக்காட்டாமல் வளர்த்ததோ” என்றபாடல் நன்றாகவும் மிகப் பொருத்தமாகவும் இருக்கின்றது. தனுஷ் சற்றுவித்தியாசமாக நடித்துள் ளார். அவரது வளர்ச்சியும் முதிர்ச்சியும் இப்படத்திலே தெளிவாகத் தெரிகின்றது.

பேட்டையாராக நடிக்கும் ஜெயபாலனை தனுஸ் அண்ணே! அண்ணே! என்று குழைந்து குழைந்து பழகுவதும் அதற்கேற்ப முகபாவமும் தோற்றமும் கிராமத்து உறவுநிலையை யதார்த்தமாகப் புலப்படுத்துகின்றது. ஆங்கிலம் பேசும் கதாநாயகியை காதலிக்கும் தனுஸ் அவளின் மொழி விளங்காமல் கஸ்ரப்படும் இடம் மிகப் பிர மாதமாக இருக்கின்றது. மெய்ப்பாடு என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப் பிடும் ‘உடல் மொழியை’ தனுஷ் சிறப் பாகப் பயன்படுத்தியுள்ளார். இருப தாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே எழுதப்பட்ட நாவல்களில், குறிப்பாக இலங்கைத் தமிழ் நாவல்களில், காலனித்துவ படோடபத்தில், கிறிஸ்தவச் சூழலில் வாழும் அழகான பெண்களை கிராமத்து அப்பாவி இளைஞர்கள் விரும்புவதாக சித்தரிக்கப் பட்டுள்ளமை ஆடுகளம் படத்தைப் பார்க்கும்போது என் நினைவில் ஒருகணம் பட்டுத் தெறித்தது.

படத்தின் ஆரம்பத்திலே மதிப் பார்ந்த பாத்திரமாக தோன்றிய ஜெய பாலன் கதையின் பிற்பாதியிலே வில்லனாக மாறுகின்றார். பேட்டையாரின் சொல் லைக் கேளாது அவரின் கருத்தை அசட்டை செய்து கோழிச் சண்டைப் போட்டியிலே தனுஷ் ஈடுபடுவதும், தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றுவதும் ஜெயபாலனுக்கு (பேட்டையாருக்கு) பிடிக்கவில்லை.

பேட்டையாரின் ஈகோவும் தனு´ன் ஈகோவும் வெளிப்படும் வகையிலே கதையைப் பின்னி அதைச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். இயக்குநரின் சிறப்பாற்றல் படம் முழுவதும் வெளிப்படுகின்றது. சிறப்பாக இரு வரினதும் “ஈகோ” தான் (தன் முனைப்பு) கதையின் மையமாகின்றது. இந்த மையப் பொருளைக் கையாள்வதில் இயக்குநர் பெரு வெற்றி பெற்றுள்ளார்.

சண்டைச் சேவலை பேட்டையாரிடம் பணங்கொடுத்து ஏமாற்றி வாங்க வந்தவனின் கையிலிருந்து சேவலைப் பறித் தெடுத்த பேட்டையார், அந்தச் சேவலை அடித்துக் கொல்லும் காட்சி அற்புதமாகவும் யதார்த்தமாகவும் இருக்கின்றது. இந்தக் காட்சியிலே ஜெயபாலனின் முரட்டுச் சுபாவமான ஆணவம்சார் தன் முனைப்பான நடிப்பு துல்லியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. கோழிச்சண்டைப் போட்டிப் பாரம் பரியம் பெரும்பாலும் மறைந்துவிட்ட நிலையில் இதனை கலாபூர்வமாக ஆவணப்படுத்தி இன்றைய இளைய தலைமுறைக்கு காட்ட முனைந்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். இலங்கை யிலேயே யாழ்ப்பாணத்திலே நடை பெற்ற கோழிச்சண்டைப் போட்டி பற்றி கே.டானியல் தனது “அடிமைகள்” என்ற நாவலில் விபரமாக குறிப்பிட்டுள்ளமை யை ஆடுகளம் எனக்கு நினைவுபடுத்தியது.

இலங்கையிலேயே நெடுந்தீவிலே பிறந்து வன்னிக் கிராமத்திலே வளர்ந்த கவிஞர் ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். பல்கலைக் கழக மாண வனாக இருக்கும் காலத்தில் மாணவர் அவைத் தலைவருக்கான போட்டியிலே களமிறங்கி, அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்று மாணவர் அவைத் தலை வராகிச் சிறப்பாகப் பணியாற்றியவர். நமது ஒரு சாலை மாணாக்கனாகிய ஜெயபாலனைத் திரையிலே “பேட்டை யாராகப்” பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியே ஆடுகளம் பற்றிய குறிப்பினை எழுதத் தூண்டியது. தனுஸ் ஜெயபால னைச் சைக்கிளில் ஏற்றி ஓடும் காட்சியைப் பார்த்தபோது 35 ஆண்டுகளுக்குமுன் நான் ஜெயபாலனை சைக்கிளில் ஏற்றி பலாலி வீதியில் ஓடிய நினைவு என் நெஞ்சத் திரையில் நிழலாடியது.

பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவராக ஜெயபாலன் இருந்த காலத்திலே, துணைவேந்தர், பீடாதிபதிகள், நிர்வாக அதிகாரிகள் முதலானோருடன் முரண்படுவது, கோவிப்பது, உணர்ச்சி வசப்படுவது முதலான காட்சிகளை நேரிலே பார்த்துள்ளேன். படத்திலே பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரியுடன் முரண்பட்டு சத்தமிட்டு சபதமிடும் காட்சியைப் பார்த்த போது அந்தப் பழைய நினைவு மீண்டும் என்னுள் தலை காட்டியது.பேராசிரியர் க.கைலாசபதி ஒரு முறை ஜெயபாலனைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது “ஒரு முரடன் ஆனால் நல்ல கவிஞன்” என்று கூறிய கூற்றினைப் படம் பார்க்கும் போது நினைந்துகொண்டேன்.

ஜெயபாலன் நல்லதோர் கவிஞன். இவனின் கவிதைகள் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினர் வெளியிட்ட தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து தொகுத்த “எல்லா நதியிலும் என் ஓடம்” என்னும் கவிதைத் தொகுதியிலும் ஜெயபாலனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ஜெய பாலன் நல்ல கவிஞன் மாத்திரமல்ல சிறந்த ஆய்வாளரும் கூட அவ்வப் போது நல்ல கதைகளும் எழுதியுள்ளார். பல்பரிமான ஆளுமை கொண்ட ஜெயபாலன் தென்னிந்திய திரைப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித் துள்ளமை எமக்குப் பெருமை சேர்க்கும் விடையம் எனலாம்.

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா யாழ்.பல்கலைக்கழகம்

Thanks to: Valampuri

நன்றி - ஈழம்ரைம்ஸ் (EelamTimes)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.