Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடுருவும் உயிர்கொல்லி .......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எயிட்ஸ் நோய் பற்றி எல்லோரும் அறிந்திருப்பினம் இதற்கு மருந்துகளே,

தடுப்பூசிகளோ இல்லை குணப்படுத்த முடியாது தொற்றுக்கு உள்ளான நோயாளியின் உடல்

ஆரோக்கியம் பெனுவதற்கான மருந்துகள் கூட மிகவும் விலை உயர்ந்தவை இம்மருந்துகள்

மில்லியன் கணக்கில் செலவிட வேண்டி ஏற்படலாம். எனினும் நோயாளியின் வாழ்

நாளை அதிகரிப்பது என்பது மாதக்கணக்கில் அல்லது சில வருடங்களாக என்றுதான்

அமையும் நோய்த்தொற்று ஏற்பட்டு 10-15 வருடங்களின் பின் கூட நோயின் அறிகுறி

தெனப்படலாம் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் உதாரணமாக 30 வயதில்

நோய்க்கிருமி தொற்றுதல் அடைத்தவர் நோயாளியாகஅறிகுறிகளுடன் தென்படுவதற்கு 10

– 15 வருடங்கள் செல்லுமாயின் குறித்த நபர் 45 வயதில் அண்மித்தே நோயால்

பாதிக்கப்படுவார் எனக் கருதின் நாம் சற்று சிந்திப பின் இவர் இனங்

காணப்படாதே தனது பாலியல் உயிர்த்துடிப்புள்ள வயதுப் பருவத்தை கடந்து விடுவார்.

(sexsualy active age) அத்துடன் மிக அதிகளவில் நோயை ஏனையோருக்கும்

கடத்திவிடுவார். எனவே இவர் நோயாளியாக நோயின் பிடியில் சிக்கியமை

அறியப்படும் விதமாக அறிகுறிகள் தென்படும் காலகட்டத்தில் இவரால் நோய்த்

தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நீண்டதொரு பட்டியலை ஆ;கிவிடும்.

இந்நோய்களை தொற்றல் வழிமுறைகள் என்றும் போது பாதுகாப்பற்ற பாலியல்

தொடர்புகள் என்பது முக்கியமானது எமது மண்ணில் கட்டுக் கடங்காத பாலியல்

தொடர்புகள் நவீன நாகரிக மாற்றம் என்று ஆகிவிட்டது. இதனால் ஏற்படும் நோய்த்

தொற்று பற்றி கருத்தில் கொள்வதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரும் உணர

வேண்டிய விடயமேயாகும். இது பற்றி கூறுவதால் தீரப் போவதில்லை. இத்துடன்

இன்னோர் படி மேலாக தெற்றலுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படுவதில் பலத்த சிரமம்

நிலவுகின்றது இதில் இவர்கள் தாமாக இனம் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

இதனால் மருத்துவரை நாடுவதும் இல்லை. இங்கு தொற்றுக்கு உள்ளானவர்கள் ஏதேனும்

நோய் நிலையில் சிகிச்சை பெறும் போது தவறுதலாகவே இனம் காணப்படுகின்றனர்.

இனம் காண்பது ஒரு சிரமம் இனம் காணப்பட்டவர் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இப்படி ஒரு மனநிலை உள்ளதால் இனங்காண முற்படாது. நோய்த் தொற்றுக்கு உள்ளான

பலரும் சமூகத்தில் காணப்படலாம்.

இப்படியான நிலையில் நோய்த் தொற்றல் தொடர்பாக கவனத்தில் கொள்வது மிகவும்

முக்கியமானதாகவே உள்ளது.

இங்கு நடைமுறையில் மருத்துவத்துறையில் பயன்படுத்தும் ஊசிகள், சத்திரசிகிச்சை

சந்திகள், மற்றும் கருவிகள் உரிய முறையில் சுத்திகரிக்கப்படுவதுடன் அவற்றினை

மறுதடவை பாவிப்பதை தவிர்த்துள்ளமையும் காணப்படுகின்றது. இத்துடன் குருதி மாற்றீடு

குருதித் திரவ இழைய மாற்றீடு செயற்கை கருத்தரிப்பு போன்வற்றிலும் நோய்த்

தொற்றுந் தகவு ஆய்ந்தறியப்படுகின்றது.

இவற்றைவிட சிகை அலங்கரிப்பு நிலையங்களில் சவர அலகுகள் மறுதடவை பயன்படுத்தாது

விடப்படுகின்றன இவை மெச்சத்தக்க விடயமேயாகும்.

இவ்வாறே போதை மருந்துப் பாவனையாளர்களின் ஊசிகள், மற்றும் சில மருத்துவ

முறைகள் என்பவற்றாலும் ஏற்படலாம் என்றும் எமது சமூகத்தில் கண்ணுக்கு புலப்படாத

சில வழி முறைகள் காணப்படுகின்றன.

அதாவது காது குத்தல், காவடியில் செடில் குத்துதல் இவையும் நோயை உண்டு பண்ண எதுவாகலாம்

காதுகுத்துவது என்பது தற்போது நாகரிகம் மிக்க செயலாகவே காணப்படுகிறது நவீன

உலகில் உடலில் முடிந்தவரைஎங்கெங்கெல்லாம் குத்தமுடியுமோ அங்கெல்லாம் தோடுகள்

வளையல்கள் என்று மாட்டிக் கொள்ளும் வழமை தான் நாகரிகம் என்று உருவாகி உள்ளது.

இதில் நாகரிகத்தின் உச்சக் கட்டத்திற்கு சென்றவர்களில் நோய்த்

தொற்றலுக்கான சந்தர்ப்பம் அதிகமாக் காணப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்றே

சொல்லலாம்.. இவர்களுக்கு பயன்படுத்தும் ஊசி வகை ஏனைய நோய்த்தொற்று

இல்லாதவர்களிற்கும் பாவிக்கப்படின் இவர்களினூடு நோயானது குற்றும் ஊசியூடு பரவும்

என்பதில் ஐயமில்லை. இவ்வாறே நகர்ந்து கொண்டு செல்லும் போது பாரம்பரிய

ரீதியாக தோடு குற்றும் சிறுமியர் கூட எந்தப் பாவமும் அறியாமல் ஆட்கொல்லி

நோயின் கோரப்பிடியில் சிக்க வேண்டி ஏற்படும். இதனால் நாளடைவில்

ஆரோக்கியமற்ற இளம் சந்ததியே உருவாகிவிடும் தன்மை காணப்படுகிறது.

உயிர் கொல்லி நோயின் ஊடுருவலை தடுத்து நிறுத்த எத்தணிப்போம். செயற்படுவோம்

நாளைய நம் சமூகத்திற்காக….உயிர் பெறவேணடும் சமுதாய ஆர்வலர்கள்… செயற்பாடுகள்

http://sivaajihealthwings.org/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.