Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“முதல்வர் மகாத்மா”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை காந்தி சந்திக்கும் சர்ச்சைத் திரைப்படம்! தணிக்கைக் குழு எதிர்ப்பு

வெள்ளி, 18 பெப்ரவரி 2011 20:06

என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காமராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காமராஜ் படத்தை எடுத்தவர்.

காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது.

இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியது.

ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க முதல்-அமைச்சராக இருக்கும் காந்தி பிரபாகரனை சந்திக்க அழைப்பு விடுக்கிறார்.

இருவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றி விவாதித்து முடிவு எடுப்பது போன்று இக் காட்சிகள் உள்ளன. அப்போது பிரபாகரன் கையில் இருக்கும் துப்பாக்கியை காந்தியடிகள் வாங்கி பார்ப்பது போன்றும் காட்சி உள்ளது.

இந்த படம் நான்கு உறுப்பினர்களை கொண்ட அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் காந்தி பிரபாகரன் சந்திக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியாது என்று தடை விதித்தனர்.

இதையடுத்து பத்து உறுப்பினர்களை கொண்ட உயர் நிலை தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். விரைவில் இது ரிலீசாக உள்ளது.

tamilcnn

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவர் பிரபாகரனும் காந்தியும் சந்தித்ததால் படத்துக்கு தடை ?

Friday, February 18, 2011, 16:43

காமாரஜர் வாழ்க்கையைப் படமாக்கி, பெரும் பாரட்டுப்பெற்ற இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் அவர்கள் தற்போது “முதல்வர் மகாத்மா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இன்றைய சூழலில் காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இன்றைய இளையோர்களோடு காந்தி எவ்வாறு பேசுவார், அவர்களை எவ்வாறு வழி நடத்துவார் என்பதும், மற்றும் இன்றைய அரசியல்வாதிகளோடு அவர் எவ்வாறு காய்நகர்த்துவார் என்பதும் படமாக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அவரைச் சந்தித்த தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை காந்தியடிகள் எவ்வாறு கையாள்வார். மற்றும் தமிழீழப் போராட்டம் குறித்து காந்தி என்ன நினைத்திருப்பார் என்பது போன்ற காட்சிகளும் இப்படத்தில் பதிவாகியுள்ளது. கடற்கரை ஒன்றில் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மெய்ப்பாதுகாப்பாளர்களோடு நிற்பதுபோலவும், அவரை காந்தியடிகள் வந்து சந்தித்து பேசுவதுபோலம், ஒரு கட்டத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கியை அவர் வாங்கிப் பார்வையிடுவதுபோலவும் காட்சிகள் தத்துரூபமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தணிக்கைக்குழு, இக் காட்சிகளைத் தணிக்கைசெய்வதற்குப் பதிலாக முழுப்படத்தையும் தடைசெய்துள்ளது. இதனை அடுத்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர்கொண்ட குழு ஒன்று இப் படத்தைப் பார்த்து, தடையை நீக்கியுள்ளதோடு, தேசிய தலைவர் பிரபாகரன் வரும் காட்சிகளையும் அனுமதித்துள்ளனர் எனவே இப் படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

tamilthai.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தியும் பிரபாகரனும் பேசினால்..?

அஹிம்சா மூர்த்தியான மகாத்மாவை​யும், ஆயுதம் தாங்கிய

;பிரபாகர​னையும் கதாபாத்திரங்​களாகச் சித்திரித்து 'முதல்வர் மகாத்மா’ என்கிற திரைப்படத்தை இயக்குநர் பாலகிருஷ்ணன் எடுத்து முடிக்க... இந்தப் படத்துக்கு மட்டும் தடை வராமல் இருக்குமா என்ன? இயக்குநரிடமே பேசினோம். ஏற்கெனவே 'காமராஜ்’ படத்தை எடுத்தவர் இவர்!

''மகாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும்? என்பதுதான் படத்தின் கரு! வசதிமிக்க திவான் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட கோவணம் கட்டி அஹிம்சை பேசியவர் காந்தி. ஆனால், இன்றைய அரசியல்? பிறந்த நாளைக்கு 500 கோடியில் மாலை போடுவது, நாடெல்லாம் சிலைவைப்பது என முதல்வர் மாயாவதியின் உ.பி. அரசியலையும் படத்தில் காட்சிகளாக வைத்தேன். 'இது நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னை. இந்தக் காட்சிகள் வரக் கூடாது!’ என்றனர்.

அஹிம்சாவாதியாக இருந்த மகாத்மாவும், இன்னொரு துருவமாக இருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதுபோல் காட்சி வருகிறது. 'இது தடை செய்யப்பட்ட இயக்கம்...’ என்று கண்டிப்புக் காட்டினர். உடனே, 'நடப்புச் சம்பவங்களை வரிசையாகக் கோத்து திரைக்​கதை அமைக்கப்பட்ட படத்தில், உலகறிய நடக்கிற ஈழப் போராட்​டப் பகுதியை மட்டும் எப்படிச் சொல்லாமல் விட முடியும்? அதுவும் அல்லாமல், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான வசனங்களை நான் படத்தில் சேர்த்திருந்தால்தானே நீங்கள் தடை செய்ய வேண்டும்? எந்த இடத்திலும் அப்படி ஒரு வார்த்தையைக்கூட நான் சேர்க்கவில்லையே’ என்று தெளிவாகச் சொன்னேன்.

ஆனாலும், 'இந்தக் காட்சிகளை அனுமதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சொல்லி படத்தை அட்வைஸரி கமிட்டிக்கு அனுப்பினர். செக்ஸ், வன்முறை என்று எதையுமே வலிந்து திணித்தால்தான், அதை சென்சார் போர்டு ஆட்சேபிக்கும். ஆனால், 'முதல்வர் மகாத்மா’ படத்தின் கதையோடு கூடிய இந்தக் காட்சியின் நியாயத்தைப் புரிந்துகொண்ட அட்வைஸரி கமிட்டி, படத்துக்கு எந்தவித மறுப்பும் இன்றி தணிக்கைச் சான்றிதழ் கொடுத்துவிட்டது. விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறார் 'முதல்வர் மகாத்மா’!'' - போராடி ஜெயித்த உற்சாகத்​தோடு சொன்னார் பால​கிருஷ்ணன்!

காந்தியும் பிரபாகரனும் என்ன பேசுகிறார்கள் என்பதைத் திரையில் பார்ப்போம்!

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

p14a.jpg

நான் இங்க கொண்டு வந்து ஒட்டுவோம் என்று நினைத்துக் கொண்டு கொப்பி பண்ணிக் கொண்டு வந்தால் கறப்பி முந்தியிடடா.ஏதோ எனக்கம் கொஞ்சம் விட்டு வைச்சதுக்கு நன்றி!

படம் -நன்றி யூனியர் விகடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.