Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழியின் சொத்துக் கணக்கை ஜெயலலிதாவிடம் கொடுத்த கருணாநிதி குடும்பத்தார்.

Featured Replies

தி.மு.க.வினருக்குத்தான் டெல்லியில் நேரம் சரியில்லை...’‘‘துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து பண்ணிட்டார்.

‘‘காங்கிரஸுக்கு எத்தனை சீட்டுகள் தரமுடியும் என்பதை நேரடியாக அகமது பட்டேல்,குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பேசி முடிவுக்கு வரலாம் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம். இதைத் தெரிந்து கொண்ட அகமது பட்டேல்,‘எதுவாக இருந்தாலும் ஐவர் குழுவிடம் பேசி முடி யுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதனால் தான் அவர் டெல்லி பயணத்தை ரத்து பண்ணிட்டார்.

டெல்லி போகும் துணை முதல்வர், அப்படியே திகார் சிறையில் இருக்கும் ராசாவைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வர வேண்டும் என் பது முதல்வரின் ஆசை. ஆனால் இந்த விஷயத்தில் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பம் இல்லை. குறிப்பாக அழகிரிக்கும், செல்விக்கும் இதில் உடன்பாடு இ ல்லை. அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ஸ்டாலினோடு பேசி யிருக்கிறார்கள். அவர்கள் ‘இந்த விஷயத்தில் உன் னுடைய நிலைப்பாடு என்ன என்பதை உறுதி செய்துகொள். அதன் பிறகு போய் பார்க்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘இப்போது டெல்லியில் கனிமொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.சமீபத்தில் கூட, கூட்டுக்குழு அமைப்பது தொடர்பாகவும், பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் கனிமொழியிடமும், முதல்வரிடமும் பேசியதாக டெல்லி தலை வர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள். கனிமொழிக்கு டெல்லியில் முக்கியத்துவம் கொடுப்பது குடும் பத்தில் உள்ள சிலருக்குப் பிடிக்க வில்லை. அவர்கள் எல்லாம் பேசிப் பேசி ஸ்டாலினின் பயணத்தை ரத்து செய்யவைத்துவிட்டார்கள்.

‘‘கனிமொழியின் சொத்துப் பட்டியலை ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்டார். ‘ஊழலுக்கு எதிராக பிரதமர் பேசிய போது, ‘நாடாளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்’ என்று சொன்னார். 2009-ம் ஆண்டு, தனது சொத்துப் பட்டியலை சபாநாயகரிடம் கொடுத்தார் கனிமொழி. அந்த நகல்தான் வெளியே வந்திருக்கிறது. அதை வைத்துதான் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு இருந்தார். முதல்வர் குடும்பத்தில் உள்ள சிலர்தான் இதனை எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததாக கனிமொழி தரப்பு நினைக்கிறது...’’

இதற்கிடையில் ‘டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் சோனியாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது,கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர வேண்டியது இருப்பதால் கடந்த முறை போட்டியிட்ட தொகுதி களே ஒதுக்க முடியும். அதே போல கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.’’ அதற்கு சோனியா கூறிய பதில்,

‘‘இவ்வளவு குறைவான தொகுதிகள் என்றால் ‘சரியாக வராது’ . ‘தி.மு.க. கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம். ஆனால் கௌரவமான இடங்கள் வேண்டும்’ என்பதே.

அன்புமணி டெல்லி சென்று சோனியாவைச் சந்தித்த போது,‘நாங்கள் காங்கிரஸுக்கு எதிரான மனநிலையில் இல்லை’ என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதன் பின்னர்தான் ‘பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை’ என்று டெல்லியில் இருந்து சொல்லப்ப ட்டு இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே 31 இடங்கள் கொடுப்பார்கள் என்று யாரும் நினைக்க வில்லை.‘கூட்டணியில் புதிதாக சேரும் கட்சிகள் குறித்து காங்கிரஸுடன் பேசி முடிவு செய்யப்படும்’ என்று முதல்வர் சொன்னார்.சொன்னபடி நடந்து கொள்வார் என்று காங்கிரஸ் தரப்பு நினைத்தது. அவர்களிடம் ஆலோசிக்காமல் சீட் கொடுத்ததில் அவர்களுக்கு ரொம்பவே வருத்தம்.

‘‘காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. தரப்பில் இருந்து விஜயகாந்த்தோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது மாதிரியான பேச்சு வார் த்தையை ரகசியமாக வைத்திருக்கவே கட்சி கள் விரும்பும்.ஆனால் இந்த பேச்சுவார்த்தை விவரம் வெளியே பரப்பப்படுகிறது. இந்த செய்தி காங்கிரஸ் தரப்பை ரொம்பவே கடுப்பேற்றி வருகிறதாம்...’’

‘‘காங்கிரஸை கழற்றிவிட தி.மு.க. தயாராவதைத் தானே இது காட்டுது. அதனால,அவர்கள் வேறு மாதிரி மூவ் பண்ண ஆரம்பித்து இருக்கிறார்களாம். டெல்லியில் உள்ள தி.மு.க. தலைவர்களிடம் சில தகவல்களை மறைமுகமாக சொல்லி வருகிறார்களாம்.’’

‘‘ராசா செய்த தவறால் பிரதமர் தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவர் சி.பி.ஐ. மூலமாக முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும், மத்திய அமைச்சர்களாக இ ருக்கும், இருந்த சிலர் மீதும் வழக்குகள் போடத் தயாராகி வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்...’’

‘‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. இப்போது நினைத்தாலும் கலைஞர் டி.வி. விவகாரத்தில் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரைக் கைது செய்ய முடியுமாம். அதற்குத் தேவையான ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கிறதாம்.அதே போல யூரியா இறக்குமதியில் நடந்த முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அழகிரி பெயரை சேர்க்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்...’’

தயாநிதி மாறனுக்கும் அழகிரிக்கும் பிரச்னை ஏற்பட்டு, தயாநிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அப்போது, அவர் மீது சி.பி.ஐ.யில் ஒரு வழக்குப் போட்டார்கள்.அதாவது அவருக்கென ஒதுக்கப்-பட்ட ‘லீஸ் லைனை’ அவருடைய டி.வி. நிறுவனத்துக்காக பயன்-படுத்தினார் என்பதுதான் குற்றச்சாட்டு. அந்த வழக்கை தூசு தட்டி எடுத்து வருகிறார்களாம். அதே போல, அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட லைசென்ஸ் தொடர்பாகவும் வழக்கு தயாராகி வருகிறதாம்...

Thanks to kumudam reporter.

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=24851

தி. மு. க. வும் காங்கிரஸ் உம் இல்லாது போனால் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.