Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம்

[ பிரசுரித்த திகதி : 2011-03-06 04:23:26 AM GMT ]

தனது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது:

சந்தேகநபர் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கில் இரு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர். அண்மையில்தான் அவர் பிணையில் வெளியே வந்திருந்தார். சம்பவம் இடம்பெற்ற நேற்றுமுன்தினம், நிறை மது போதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து தனது ஒரு மகளை அழைத்துக் கொண்டு சந்தேகநபரின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவர் வீட்டுக்குத் திரும்பிய போது, வீட்டில் இருந்த 8 வயது மகள் விம்மி விம்மி அழுதபடி தந்தைக்கு அருகில் இருந்து விசிறிக் கொண்டிருந்துள்ளார். மகளின் உடலில் இரத்தம் காணப்பட்டதை அடுத்து பதற்றப்பட்ட தாய் விடயம் என்னவென்று விசாரித்துள்ளார். அப்போதே தந்தை தன்னைப் பலாத்காரப்படுத்திய விடயத்தை மகள் தாயிடம் கூறியுள்ளார். விரைந்து செயற்பட்ட தாய் மகளை கோப்பாய் அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கிருந்து சிறுமி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை ஏற்கனவே இருவேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர். அதனால் இரண்டு தடவைகள் நீதிமன்றினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டவர். 15 நாள்களுக்கு முன்னரே கொலை வழக்கு ஒன்றிலிருந்து அவர் பிணையில் வெளியே வந்திருந்தார். தன்னைப் பிடித்துக் கொடுத்தால் வெட்டி விடுவேன் என்று பெரிய வாள் ஒன்றைக் காட்டி அயலவர்களை மிரட்டிவிட்டுத் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்வதற்காகத் தேடுதல்களை முடுக்கி விட்டுள்ளோம் என்றனர் பொலிஸார். எனினும் நேற்று மாலை வரை அந்த நபர் கைது செய்யப்படவில்லை.

tamilulakam.com

  • கருத்துக்கள உறவுகள்
:( புலிகள் இருந்தால் இந்த அநியாயங்கள் நடக்குமா??

இந்த ஆள் டக்ளசின் நெருகிய கூட்டாளியாக இருக்கும்.

கசிப்பு பெருக்கமும், கீழ்த்தர தமிழ் சினிமாவும் உள்ளவரை இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபத்தியஞ்சு முப்பது வருசமாய் வராத செய்தியெல்லாம் இப்ப வருது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.