Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

Featured Replies

தமிழ் இணைய பரப்பில் புதிய வரவாக தினக்கதிர்.

ஊடகத்துறை வரலாறு அல்லது தொடர்பாடல்துறை வரலாறு என்பது மனித இனத்தின் தோற்றத்தோடு ஆரம்பித்து விட்டது எனலாம்.

தனக்கு கிடைத்த ஒன்றை தனக்கென பதுக்கி வைக்க அல்லது அந்த சொத்திற்கு தானே சொந்தக்காரன் என உரிமை கொண்டாட பழகிக்கொண்ட மனிதன் தனக்கு கிடைத்த செய்தியை மட்டும் ஓடிஓடி அறிவித்தான். அந்த மனித பழக்கத்தின் தொடர்ச்சிதான் ஊடகங்கள் தனக்கு கிடைத்த செய்தியை முந்திக்கொண்டு அறிவிப்பதற்காக இரவு பகலாக கண்விழித்து காத்திருக்கின்றன.

ஊடகத்துறையின் முதல் வரவான பத்திரிகைதொழிலின் வரலாறு என்பது மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள எடுத்த நீண்டகால முயற்சியின் வரலாறு என இலங்கை தமிழ் ஊடகத்துறை வரலாறு என்ற நூலை எழுதியவரும் என்னுடைய ஆசானுமாகிய இ.சிவகுருநாதன் தன்னுடைய நூலில் தெரிவித்திருக்கிறார்.

தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பரப்பிக்கொள்ளவும் மனிதன் எடுத்துக்கொண்ட ஒரு நீண்டமுயற்சியின் கதைதான் ஊடகத்துறையாகும்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் வரிசையில் அச்சு ஊடகமான பத்திரிகையே முதலில் தோன்றியதாகும். இந்த வரிசையில் இறுதியாக தோற்றம் பெற்றிருக்கும் இணையத்தளங்கள் இன்று உலகில் அதிகம் வாசகர்களை கொண்ட ஊடகங்களாக திகழ்ந்து வருகின்றன. இணையத்தளங்களை பத்திரிகைகளின் மறுபிறப்பு என்று கூறலாம். ஒலி ஒளி ஊடகங்களுக்கு இணையாக பெரும் வாசகர் பரப்பை இன்று இணையத்தளங்களும் கொண்டிருக்கின்றன.

பத்திரிகைகள் அல்லது ஒலி ஒளி ஊடகங்களுக்கு இருக்கும் எல்லைகளைப்போல் அன்றி எல்லைகடந்து உலகெங்கும் உள்ள மக்களின் வீட்டு முற்றத்திற்கு சென்று செய்தி சொல்லும் ஊடகமாக இன்று இணையத்தளங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

மனித உரிமை பட்டயத்தில் தகவல் அறியும் உரிமை பற்றியும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. மனிதனுக்கு இருக்கும் உரிமைகளில் முக்கிய உரிமைகளில் ஒன்று தகவல் அறியும் உரிமையாகும். அந்த உரிமையை வழங்கும் முக்கிய பொறுப்பு ஊடகங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழில் வெளிவரும் அல்லது ஆசிய நாடுகளிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் பெரும்பாலானவை தகவல் அறியும் மனித உரிமையை சரியாக பேணி வருகின்றனவா என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

தமக்கு சாதகமான தகவல்களை மட்டுமே வெளியிடும் வழக்கத்தை சில ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. அரசுகள் மற்றும் அதிகார ஆதிக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன. இதனால் தகவல் அறியும் உரிமையை மனிதன் இழந்து நிற்கிறான். தமிழர் சமூகம் இந்த பாதிப்பை நிறையவே சந்தித்திருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தகாலமாக ஊடகத்துறையில் முழுநேரமாக பணியாற்றி வரும் என்னைப்போன்றவர்கள் சந்தித்த சவால்களும் வேதனைகளும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சவால்கள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் வெளிப்படைத்தன்மையோடு பக்கசார்பின்றி தகவல்களை சொல்வதுதான் பத்திரிகையாளனுக்கு அழகு.

எதையும் வெளிப்படை தன்மையோடு செய்யும் போது எந்த சவால்களையும் வெற்றி கொள்ள முடியும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அல்லது ஊடகங்களுக்கு வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானதாகும்.

முகமூடியை போட்டுக்கொண்டு தகவலை சொல்வதை விட தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு செய்தியை சொல்லும் போதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த செய்தி தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய கடமையும் ஏற்படுகிறது. முகமூடியை போட்டுக்கொண்டு செய்தி சொல்பவர்கள் பொறுப்பு கூறும் கடமையிலிருந்து தப்பித்து கொள்கிறார்கள்.

எனவேதான் இந்த இணையத்தளத்தை ஆரம்பிக்கும் இவ்வேளையில் நாங்கள் யார் என்பதை வெளிப்படைத்தன்மையோடு சொல்ல வேண்டியதும் எமது கடமை என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

இது தனிமனித முயற்சியல்ல. இலங்கையில் ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவத்தோடு மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கும் ஊடகவியலாளர்கள் தற்போதும் இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் என பலரையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த வேளையில் எம்மை விட்டு பிரிந்து போன என்னுடைய ஊடகத்துறை நண்பர்களான றிசர்ட்டி சொய்சா முதல் நிமலராசன் நடேசன், சிவராம், லசந்த ஆகியோர் எந்த இலட்சியத்தோடு பயணித்தார்களோ அதற்காக தினக்கதிர் இணையம் தன்னை அற்பணித்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முயற்சிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

நன்றி

இரா.துரைரத்தினம்

ஆசிரியர் , தினக்கதிர் இணையம்.

http://www.thinakkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.