Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சீன எல்லைகளில்..

Featured Replies

புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி

இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் பொருட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடும் பொருட்டும் பெப்ரவரி 18 - 19ல் இந்திய பாதுகாப்புதுறை செயலர் ஏ கே அந்தோனி அவர்கள் வடகிழக்கு எல்லை பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் அந்தோனி அவர்கள் அசாம் நாகாலாந்து அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு நிலைகளையும் பார்வையிட்டார்.

சீனாவின் இராணுவ நவீன மயப்படுத்தலில் கவலை கொண்டிருக்கும் இந்திய அரசு இராணுவ கட்டுமானங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை சீனாவின் சுயநகர்வுகள் குறித்த விடயத்தில் கருத்து கொண்டதாக ஆயுத ஆட்பலப் போட்டி ஒன்றை அண்மைக்காலமாக இப்பகுதியில் உருவாக்கி வருகிறது.

இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய அந்தோனி அவர்கள் சீன இராணுவ நடமாட்டம் குறித்து எப்பொழுதும் விழிப்பாக இருப்பதுடன் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டு கொண்டார்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் அதிக நடமாட்டங்களும், கடந்த சில ஆண்டுகளில் இடம் பெற்ற எல்லைகளைத் தாண்டிய முன்னேற்றங்களும் இந்தியாவின் சந்தேக போக்கிற்கு காரணமாய் அமைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் பொருட்டே பாதுகாப்பு அமைச்சர் வடகிழக்கு எல்லைகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதாகவும் அவை கூறுகின்றன.

அதேவேளை வடகிழக்கு எல்லை மாநில ஊடகங்களின் செய்திகளின் படி வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இயங்கக்கூடிய கிளர்ச்சிக்குழுக்களின் சில தலைவர்கள் கடந்த ஆண்டில் சீன அரச அதிகாரிகளுடன் சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கின்றன.

இவற்றில் முக்கிய கிளர்ச்சிக்குழுக்களான UNLF > PLA of Manipur> United Liberation Front of Assam - ULFA ஆகியவற்றுடன் மேலும் பல கிளர்ச்சியாளர்கள் சீனாவின் யுவான் மாநிலத்திலிருக்கும் Ruili என்ற பகுதியில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுகளில் ஈடுபட்டதாகவும் இந்திய பாதுகாப்பு உளவு அதிகாரிகளுக்கு செய்தி எட்டி உள்ளதாகவும் வடகிழக்கு எல்லை மாநில ஊடகங்கள் தெரிவிக்கிண்றன.

மேலும் கடந்த ஆண்டின் இறுதியிலே ஜம்மு காஷ்மீர் பகுதியிலே Demchok எனும் பெயர் கொண்ட இடத்திலே பயனிகள் தங்குமடம் ஒன்றை அமைத்து கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் அரச தெழிலாளர்களை அணுகிய சீன மக்கள் விடுதலைப்படையினர் சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டடவேலைகள் அமைக்ககூடாது என உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கும் பதட்டம் உருவாகியது.

இவ்வாறு ஆங்காங்கே பல்வேறு விதமான சிறிய அளவிலான சர்ச்சைகள் உருவாகிவருவதை தெடர்ந்து இந்திய மத்திய பாதுகாப்ப அமைச்சு தற்காப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக கவனம் செலுத்த முற்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து விவகாரங்களிலும் சீன முனைப்புகள் இரகசியமானதாகவே இருப்பதால் இத்தகைய தன்னிச்சை முன்னேற்ற முனைப்பு முயற்சிகளையும் பாதுகாப்பு செலவீன அறிக்கைகளையும் உதாரணங்களாக கொண்டே இந்திய அதிகாரிகள் தமது செயற்பாடுகளை முடுக்கி விட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதுவே சீனாவின் போக்கு குறித்து இந்திய பாதுகாப்பு தரப்பிற்கு பெரும் ஐயநிலைக்கு காரணமாயுள்ளது.

ஒருபுறம், பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் கடும் போட்டிகளையும் ஒன்றிலிருந்து ஒன்று தவிர்த்து கொள்ள முடியாத உறவு நிலைமையையும் தோற்றுவித்தாலும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் என்ற நிலையிலிருந்து பார்க்கும் போது இந்திய அதிகாரிகள் மிக கவலை கொண்டுள்ளனர்.

இதற்கு ஏற்கனவே1962ம் ஆண்டில் இந்தியா வட எல்லைகளில் சீனாவின் திடீர் தாக்கதலுக்குள்ளான பாடம் எடுகோளாக உள்ளது.

அண்மையிலே ரொய்டர் செய்தி நிறுவனத்தின் செய்திகளின் படி, சீனாவின் நவீன இராணுவ கட்டுமானங்களை கருத்தில் கொண்டு 2011-2012ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவுகளுக்காக 36.28 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா ஒதுக்கி உள்ளது.

இது கடந்த ஆண்டு பாதுகாப்பு செலவீனத்திலும் பார்க்க 11.6 விகிதம் அதிகப்படியானதாக கருதப்படுகிறது.

ஆக இப்பொழுது இந்தியாவின் பாதுகாப்பு செலவீனங்கள் சீனா நோக்கியதாகவே மாறியிருப்பது கூட பிராந்திய அமைதி நோக்கியதாக தெரியவில்லை.

ஏற்கனவே சீனா தனது வெளியுறவு வலைக்குள் இந்தியாவை சூழவுள்ள நாடுகளை வீழ்த்துவதிலே வெற்றிகண்டுவிட்ட நிலையில், [இதில் சிறிலங்கா உட்பட பாகிஸ்தான் நேபாளம் வங்காளதேசம் பர்மா என பல நாடுகளும் அடங்கும்] சீன அணி ஒன்று இந்தியாவை சூழ்ந்து விட்டதாகவே இந்திய ஆய்வாளர்களால் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

தற்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளாயினும் சரி சிறிலங்காவில் இடம் பெறும் உளவு நடவடிக்கைகளாயினும் சரி நேபாளத்தில் இடம் பெறும் ஆட்சி நிலைகுலைப்பு நடவடிக்கைகளாயினும் சரி அனைத்தும் சீனாவிற்கெதிரான பனிப்போராகவே கொள்ளப்படுகிறது.

இதனாலேயே வட எல்லைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி பாதுகாப்பு செயலர் அந்தோனியின் இந்தப் பயணம் இடம் பெறுகிறது.

இதேவேளை இந்தியாவை யுத்தத்தை நோக்கிய பாதையில் தற்போதய தலைமைத்துவம் இட்டு செல்வதாக சமாதானத்தையும் அமைதியையும் மையசிந்தனையாக கொண்டு இயங்கிவரும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய அமைப்புகளில் ஒன்று 'கடவுள் நம்பிக்கை அமைப்பு' ஆகும். இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் இவ்வமைப்பு சாதிகள் மதங்களற்ற ஒரே சமுதாயம் என்ற கொள்கையை கொண்ட தாகும். இதன் தலைவர் கலாநிதி ராஜ் பல்தேவ் [Dr. Raj Baldev] இந்தியாவின் அரசியல் தலைமையை கடுமையாக சாடுகிறார்

ஊள்ளுர் மக்கள் மத்தியிலே சமாதான விழுமியங்களை எடுத்து கூறாது ஆயுதப்போட்டி பற்றிய எண்ணக்கருக்களை மத்திய அரசு பறைசாற்றிவருகிறது என்று இவர் கருதுகிறார். மேலும் இன்னும் மூன்றே ஆண்டுகளில் சீனா பெரும் படைநகர்வை இந்தியாமீது மேற்கொள்ளவதற்கு இந்த ஆயுதப்போட்டி இட்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக இந்திரா காங்கிரசுக்கட்சியை குறிப்பிடும் போது ராகுல் காந்தியை இந்தியாவின் எதிர்கால பிரதமராக காட்டுவதிலும் அவருக்கு பயிற்சிகள் அளிப்பதிலும் அடுத்து ஏழைமக்களை மிக கீழத்தரமாக சந்தோசப்படுத்துவதிலும் தேவைக்குப் புறம்பான உதவிகளை கொடுப்பதற்கு அரச நிதியிலிருந்து செலவு செய்வதிலும் தற்போதய காங்கிரசு அரசாங்கம் முனைவதாக சுட்டி காட்டியுள்ளார்.

இந்தவகையில் சீன பாகிஸ்தானிய உறவு நிலை வலுவடைந்து இருப்பதுவும் பெரும் ஆபத்தை இந்தியா எதிர் கொண்டு நிற்பதாக கலாநிதி பல்தேவ் அவர்கள் கருதுகின்றார்.

கலாநிதி பல்தேவ் மட்டுமல்ல இந்திய அரசியலில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற பல்வேறு கட்சிகளின் முன்நாள் வெளியுறவு அமைச்சர்களும் அவர்களது செயலர்களும் இதேஎச்சரிக்கைகளை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.