Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லாகூர்நெவ்வில் கொடூர வன்முறையில் உயிர்தப்பிய கண்ணதாசன் - வைத்தியசாலையில் வழங்கிய செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லாகூர்நெவ்வில் கொடூர வன்முறையில் உயிர்தப்பிய கண்ணதாசன் - வைத்தியசாலையில் வழங்கிய செவ்வி

March 16, 2011, 2:30 pm[views: 687]

கட்டிலில் கிடந்தபடி வலிகளோடு முனகியபடி தனது ஞாபகங்களை சிரமப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தார் 24 வயதுடைய கண்ணதாசன் எனும் இளைஞன். 7ம்திகதி மார்ச் மாதம் நள்ளிரவு தாண்டி வாட்களாலும் Base-Ball தடிகளாலும் லாகூர்நெவ்வில் 6 முகம் தெரியாத நபர்களால் மரணத் தாக்குதலுக்குள்ளாகியிருந்த சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞனே இந்த கண்ணதாசன்.

இதே வேளை இன்னொரு தமிழ் இளைஞன் இவர் அருகிலேயே வைத்து கைகள் துண்டிக்கப்பட்டுத் தலை பிளக்கப்பட்டு அவ்விடத்திலேயே மரணமடைந்தார்.

இந்தக் கொலையும் கொலை முயற்சியும் இரு வீதிக்குழுக்களுக்குள்ளே நடந்த பழி வாங்கலாகவே கருதப்படுகின்றது. Seine-Saint.Denis காவற்துறையின் சட்வியற் பிரிவினர் கொலைக்குக் காரணமானவர்களைத் தீவிரமாகத் தேடுகின்றது.

இது குழு மோதலாகவே கருதப்பட்ட போதிலும் பரிசியன் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் கண்ணதாசன் தனக்கும் இந்தக் குழுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் தீவிரமாக மறுத்துள்ளார்.

அடிக்கடி நினைவு தப்பும் நிலையிலும் செவ்வியைத் தொடர்ந்து வழங்கியுள்ளார். "எனக்கும் என்னைத் தாக்கவந்தவர்களுக்கும் எந்த் தொடர்புகளுமே இல்லை. நான் எனது நண்பர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். பசியெடுத்ததால் அங்கிருந்த எனது நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கடையில் Sandwich வாங்கச் சென்றேன். அங்கு வரிசையில் நான் நின்றபோது எம்மை நோக்கி ஆறு இளைஞர்கள் ஓடி வந்தனர். அனைவரும் முகங்களை குளிர் சால்வைகளால் (écharpes) போர்த்தியிருந்தனர். வாளும் கோடரியும் Base-Ball தடிகளுமாக வந்தனர். எந்தக் கேட்டுக் கேள்யியுமில்லாமல் எனது பக்கத்தில் நின்றவரைத் தாக்கத் தொடங்கினர். அவரது தலை முதல் வெட்டிலேயே பிள்ந்து கொண்டது. உடனடியாக நான் ஓடத் தொடங்கினேன். கால் தடக்கி பக்கத்திலேய வீழ்ந்து விட்டேன். உடன் ஐந்து பேர் வாட்களோடும் Base-Ball தடிகளோடும் என்னைத் தாக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் நான் இறந்து கொண்டிருப்பதாக என் மனம் சொன்னது. அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது. நான் மயக்கமடைந்திருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் "சிறீலங்காவில் கூட நான் இப்படியான கொடூர வன்முறைத் தாக்குதலை எதிர்நோக்கவில்லை. எனது கழுத்திரும் காலிலும் பலமாக வெட்டப்பட்டுள்ளேன். கை கூரிய ஆயுதத்தால் கிழிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்களுக்குத் தாம் என்ன செய்கின்றோம் என்ற தெளிவுடனே செய்தனர். சிலர் கூறுவது போல் குடிபோதையிலோ அல்லது போதைமருந்து அருந்தியோ செய்யவில்லை. அவர்கள் தெளிவாகவே அந்த இளைஞனைக் கொலை செய்யும் நோக்கத்துடனே வந்துள்ளனர்" என்றார்.

2009ல் பிரான்ஸ் வந்த கண்ணதாசன் அகதிஅந்தஸ்து மூலம் வதிவிட உரிமைபெற அன்றிலிருந்து முயற்சி செய்கின்றார். இவரது தந்தை விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார் என்று சிறீலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணதாசன் உணவு விடுதியொன்றில் வேலை செய்கின்றார்.

காயங்களின் வலியால் சிறிது மயக்கமடைந்த கண்ணதாசன் மீன்டும் முயற்சி செய்து செவ்வி அளித்ததாக Stéphane Sellamii எனும் Le Parisien நிருபர் தெரிவித்துள்ளார். மேலும் தனது ஞாபகங்களை சிரமத்துடன் நினைவுபடுத்தி " பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கதறினர். இறந்த இளைஞனின் முகத்ததைப் பாருங்கள், முகத்ததைப் பாருங்கள் என்று கத்தினர். பின்னனர் நான் கேள்விப்பட்டதன் படி இறந்த இளைஞனை இந்தக் குழுவினர் தேடியுள்ளனர். முகநூலில் (Facebook) கூட அந்த இளைஞனின் படம் போடப்ட்டுத் தேடப்பட்டதாகக் கூறினர். சிறீலங்காவின் அனைத்துக் கொடுமைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் எனனைக் காத்துக் கொள்ளவே நான் இந்த பிரான்ஸ் மண்ணிற்கு வந்தேன். இப்படியான ஒரு கொடுமை இங்கு எனக்கு நிகழும் என்று நான் நினைத்துப் பார்க்கவேயில்லை. இன்று என்னால் நிம்மதியாக உற்காரக் கூட முடியவில்லை" என்றும் கூறியுள்ளார்.

தமிழனுடைய அழிவு அந்நிய சக்கதிகளால் மட்டுமல்ல இப்படியான காட்டுமிராண்டித் தமிழர்களாலும் புலம் பெயர் மண்ணிலும் தொடரத் தான் செய்கின்றது.

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=9088&v=685

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.