Jump to content

வடக்கின் வசந்தத்தின் மறுபக்கம்!(படங்கள் இணைப்பு)


Recommended Posts

போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்திக்காக 'வடக்கின் வசந்தம்" என்ற திட்டத்தை தான் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும் கூட, வடக்கின் நிலைமைகள் அவ்வாறானதாக இல்லை என்பதை கொழும்பிலிருந்து கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் குழுவினரால் நேரில் காணக்கூடியதாக இருந்தது. சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் பங்குகொண்ட இந்த விஜயத்தின்போது வடக்கின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கூடிய சந்திப்புக்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடக்கில் காணப்படும் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்கள். இப்போது வடக்கில் எமக்கு மிஞ்சியிருப்பது பொத்தல் விழுந்த ஏ-9 பாதையும், குடாநாட்டுக்கு வரும் மக்களைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான விளம்பரப் பலகைகளும்தான் என இவர்கள் கூறுவதில் பெருமளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

இந்தமுறை யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டபோது ஒரு விடயத்தைப் பொறுத்துதான் பலருடைய எச்சரிக்கையையும் கேட்க முடிந்தது. அதாவது றோட்டு சரியில்லை. நேரத்துக்குப் போக முடியாது என்பதுதான் பலருடைய எச்சரிக்கையாகவும் இருந்தது. வழமையாக வெள்ளவத்தையிலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் பஸ் மறுநாள் அதிகாலை 5.30 க்கு முன்னரே யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்துவிடும். இப்போது நிலைமை அப்படியில்லை. இரவு 8.00 மணிக்குப் பறப்பட்ட பஸ் மறுநாள் காலை 8.00 மணிக்கு யாழ். நகரை அடைந்த போதுதான் எச்சரித்தவர்கள் சொன்னதிலுள்ள உண்மை புரிந்தது. வழமையைவிட சுமார் 3.00 மணி நேரம் அதிகமாகச் சென்றிருக்கின்றது.

DSC02429.JPG

இந்த 3 மணி நேரத்துக்கு ஏ-9 வீதியின் மோசமான நிலைதான் காரணம். போக்குவரத்துச் செய்ய முடியாத அளவுக்கு ஏ-09 பாதை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 5 முதல் 10 மைல் வரையிலான வேகத்தில் செல்லத்தக்கதாகவே வீதி காணப்படுகின்றது. ஏ-09 பாதையைப் புனரமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்று சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அதற்கான அறிகுறிகள் எதனையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. வடக்கின் அபிவிருத்திக்கு வேகமாகச் செல்லக்கூடிய பாதை வசதி அவசியமானது என்பதால் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட வேண்டியதாக இது உள்ளது.

இதேவேளையில், குன்றும் குழியுமாகக் காணப்படும் இந்த எ-09 வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் குடாநாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையிடுவதற்குத் தயாராகவுள்ளன. குடாநாட்டைப் பொறுத்தவரையில் அவர்களுடைய பொருளாதாரம் புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது எனக் குறிப்பிடலாம். அதாவது யாழ்ப்பாண மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்கள் அனுப்பிவைக்கும் பணம்தான் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரமாக உள்ளது. இதனை இலக்கு வைத்த விளம்பரங்களையே ஏ-09 வீதியின் இரு மருங்கிலும் காணப்படுகின்றது.

குறிப்பாக கைப்பேசி இணைப்பைக் கொடுக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமது தமது அழைப்புக் கட்டணங்களை விளம்பரப்படுத்துகின்றன. இதற்கு அடுத்ததாக வங்கிகளின் விளம்பரங்களையே பெருமளவுக்குக் காணக்கூடியதாக இருந்தது. மூன்றாவது இடத்திலுள்ள விளம்பரங்கள் குளிர்பாணங்கள் - அதாவது கோக் போன்றவற்றின் விளம்பரங்களாகும். மிகவும் பிரமாண்டமான அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்கள் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு மாயத் தோற்றத்தையே கொடுப்பவையாக அமைந்திருக்கின்றன. உண்மையில் இவை யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியையோ அல்லது முன்னேற்றத்தையோ பிரதிபலிப்பவையாக அமைந்திருக்கவில்லை. யாழ்ப்பாண மக்களிடமுள்ள பணத்தைக் கொள்ளையிட வந்தவையே இவை என்பதை குடாநாட்டிலுள்ள பொருளாதார நிபுணர்கள் பலரும் விளக்குகின்றார்கள்.

குடாநாட்டினதோ குடா நாட்டு மக்களினதோ அபிவிருத்திக்காக எதனையும் செய்யாத நிலையில், பல்தேசியக் கம்பனிகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களும் யாழ்ப்பாணத்தில் கடை விதித்திருப்பது குடாநாட்டு மக்களின் நலன்களுக்காக அல்ல. தமது வர்த்தக நலன்களுக்காக மட்டுமே அவை அங்கு கடை விரித்திருக்கின்றன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து குடாநாட்டு மக்களுக்கு அதிகளவு பணம் வருவதைத் தெரிந்துகொண்டு அதிகளவில் வங்கிக் கிளைகள் அங்கு திறக்கப்படுகின்ற போதிலும், அதில் பணிபுரிபவர்கள் பெருமளவுக்குத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

இதனைவிட, இந்த வங்கிகளில் வைப்பிலிடப்படும் பணம் தென்னிலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கே அனுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் ஒருவர் ஒரு பண்ணையை அமைப்பதற்கோ அல்லது கைத்தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கோ ஒரு கடனைப் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. அதாவது வடக்கின் வசந்தம் என்ற பெயரில் திறக்கப்படும் வங்கிக் கிளைகள் மூலம் யாழ்ப்பாண மக்களின் பணம் அவர்களுக்குத் தெரியாமலேயே தென்பகுதியின் அபிவிருத்திக்காகப் பெறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தவர்களைப் பொறுத்தவரையில் தாம் வைப்பிலிடும் பணத்துக்கு வட்டி கிடைக்கின்றது என்பதுடன் நிம்மதியாக இருந்துவிடுகின்றார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளாதாரத்துறைப் பேராசிரியர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, இது ஒரு மிகப்பெரிய பணச் சுரண்டல் எனக் குறிப்பிடுகின்றார்.

இதனைவிட மற்றொரு அழிவையும் வடக்கு சந்திக்கின்றது. அதாவது வன்னிக் காடுகளில் வெட்டப்படும் மரங்கள் பெருமளவுக்குத் தென்னிலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. வன்னி முற்றுமுழுதாக இராணு ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருப்பதால் இராணுவ ஆதரவுடன் அரசுக்குச் சார்பான சிலர் இதனைச் செய்துவருகின்றார்கள். இதனால் வடபகுதியில் இயற்கை வளங்கள் பெருமளவுக்கு அழிக்கப்படுகின்றது. இதனைவிட வடபகுதியில் காணப்படும் சுண்ணாம்புக்கல், மற்றும் மணல் என்பனவும் பெருமளவுக்கு இராணுவத்தின் துணையுடன் தென்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் இராணுவத்தின் துணையுடன் மேற்கொள்ளப்படுவதால் இதனை யாராலும் எதிர்க்க முடியாதிருப்பதாக யாழ்ப்பாணத்தில் கிறிஸ்த்தவப் பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.

இவைதொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரமுகரிடம் கேட்டபோது, அவர் ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்:

DSC02439.JPG

'வடக்கில் அபிவிருத்தி இடம்பெறுவதாக தென்பகுதிக்குக் காட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்ற அதே வேளையில், எமது வளங்களைக் கொள்ளையிட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. 2009 மே 19 ஆம் திகதி போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியிலேயே இந்த நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துவிட்டது. தென்பகுதியிலுள்ள வங்கிகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து எமது மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டுக்கொண்டு தென்பகுதிக்குச் செல்கின்றன.

யாழ்ப்பாணம் என்பது இன்று தென்னிலங்கையினதும், இந்தியாவினதும் வர்த்தக மையமாக மாறிவிட்டது. இந்தியர்களும் சீனர்களும் இங்கு வந்து வெவ்வேறு ஒப்பந்தங்களில் அல்லது உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுகின்றார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்று கூட எமது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அனைத்து ஒப்பந்தங்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றது. இங்குள்ளவர்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

போருக்கு முற்பட்ட காலத்தில் நாடுமுழுவதற்கும் யாழ்ப்பாணத்திலிருந்தே முந்திரிகைப் பழம் அனுப்பப்பட்டது. ஆனால், இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரிகைப் பழங்களே யாழ்ப்பாணச் சந்தைகளில் விற்கப்படுகின்றது. முந்திரிச் செய்கை பண்ணப்பட்ட பெருமளவு காணிகள் இப்போது உயர் பாதுகாப்ப வலயங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அந்தத் தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு அங்கு செல்வதற்கான அனுமதி இன்றுவரையில் கிடைக்கவில்லை. போர் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியாகும் காலத்தில் உள்ள நிலை இது.”

யாழ்ப்பாணம் இன்று வெளிப் பார்வைக்கு உற்சாகமாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுப் பொருட்களும், தென்னிலங்கைப் பொருட்களும் யாழ்.ப்பாண சந்தையில் குவிந்து கிடக்கின்றன. ஆனால், யாழ். பொருளாதார அபிவிருத்திக்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் எதனையும் காணக்கூடியதாகவில்லை! பதிலாக யாழ்ப்பாணப் பொருளாதாரத்தையும், வளங்களையும் சுரண்டுவதற்கான நடவடிக்கைகளே நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலதிக படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

Link to comment
Share on other sites

வடக்கின் வசந்தம் என்ற போர்வையில் ஏமாந்த வெளிநாடுகளிடம் பெருமளவு பணத்தை பெற்று தெற்கில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்பாந்தோட்டை, கதிர்காமம், பொலனறுவை, காலி, மாத்தறை, கொழும்பு, பத்தரமுல்லை, மதவாச்சி, பதவியா, சேருவில பகுதிகளில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடுகடந்த அரசினரும், புலம்பெயர் தமிழரும் தாம் வாழும் நாடுகளின் அரசுகளிடம், வெளிநாடமைச்சு அதிகாரிகளிடம் வட - கிழக்கு பகுதிகளுக்கு வழங்கப்படும் உதவிகளை தெற்க்குக்கு மாற்றும் சிங்கள பயங்கரவாதிகளின் நீண்ட வரலாறு கொண்ட நயவஞ்சக சதித்திட்டங்களை விளங்கப்படுத்தவேண்டும்.

இந்திய பயங்கரவாதிகள் வடக்கிற்கு என்று வழங்கும் பிச்சைத்தன உதவிகளில், 70 % ஆனவை சிங்களவனுக்கே போய்ச் சேருகிறது. இந்திய அடிவருடிகள் சம்பந்தன், சுரேஷ் போன்றவர்களும், இந்திய கைகூலிகள் டக்லஸ், சித்தார்த்தன், சங்கரி போன்றவர்களும் இவற்றைக் கண்டும் காணாதவர்களாக உள்ளனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.