Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் தந்திரம் ரணில் தோற்றதால் தவிடுபொடியானது - விக்கிலீக்ஸ்

Featured Replies

2003 இன் பிற்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு வெற்றியளிக்காத முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியாகியுள்ளது ஆக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சை பிரிப்பதன் மூலம் வடக்கு, கிழக்கில் இராணுவ விவகாரங்களில் செயல்திறன் வாய்ந்த கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்க முடியும் எனவும் ஸ்தம்பிதமடைந்த சமாதான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் இருக்க முடியும் எனவும் இந்தியா யோசனை தெரிவித்திருந்தது.

அச்சமயம் இந்தியத் தூதுவராக இருந்த நிருபம் சென்னின் யோசனையானது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கையை ஊட்டவில்லை. பாதுகாப்பு, உள்துறை, வெகுஜன ஊடக அமைச்சுப் பொறுப்புகளை ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 2003 நவம்பரில் திருமதி குமாரதுங்க திருப்ப எடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் அரசாங்கத் தரப்பில் சமாதான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாளராக அச்சமயம் விளங்கிய சிரேஷ்ட அமைச்சர் மிலிந்த மொரகொடவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த ஜெவ்ரி ன்ஸ்ரெட்டுக்கும் இடையிலான உரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயமானது இந்தியா தனது யோசனையை ஜனாதிபதிக்கு தெரிவிப்பது தொடர்பாக பிரதமர் (ரணில்) ஆட்சேபனை கொண்டிருக்கவில்லை என்பதாக அமைந்திருந்தது.

2004 ஜனவரியில் சார்க் உச்சிமாநாட்டுக்காக ஜனாதிபதி (சந்திரிகா) இஸ்லாமாபாத்தில் இருந்த போது இந்தியா இந்த யோசனையை தெரிவிப்பதற்கு பிரதமர் ஆட்சேபனை கொண்டிருக்கவில்லை என்பதே இந்த உரையாடல்கள் மூலம் அறியவருகிறது.

2003 டிசம்பர் 29 ஆம் திகதி இடப்பட்ட கேபிளில் இந்த விடயங்கள் குறித்து லன்ஸ்ரெட் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு தெரிவித்திருக்கிறார். விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஊடாக இந்துப் பத்திரிகை இதனை பெற்றுக் கொண்டுள்ளது. 2003 ஏப்ரலில் சமாதான பேச்சு வார்த்தையிலிருந்து விடுதலைப் புலிகள் வாபஸ் பெற்றதன் பின்னர் சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டிருந்த ஸ்தம்பித நிலைமை தொடர்பாக இந்தக் கேபிளின் உள்ளடக்கம் அமைந்திருந்தது. ஆறு மாத காலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யுத்த

நிறுத்த மீறல்கள் இடம்பெற்றிருந்தன. அக்டோபர் 31 இல் வட,கிழக்கிற்கான இடைக்கால சுயநிர்வாக அதிகார சபை யோசனையும் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது. நான்கு நாட்களின் பின்னர் தீர்மானம் எடுப்பதை திருமதி குமாரதுங்க ஓரம்கட்டிவிட்டார். அதாவது சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதை ஓரம்கட்டி வைத்ததுடன் அதற்கு உரிய கௌரவத்தை தனது பதவி வழங்கியிருக்கவில்லை என்ற உணர்வையும் அவர் விட்டுச்சென்றிருந்தார். இதனால் சகவாழ்வு நெருக்கடியானது மீளத்தடக்கிற்கு வரக்கூடிய நிலைமை ஏற்படவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாடு இல்லாமல் சமாதானத்தை தன்னால் முன்னெடுக்க முடியாதென விக்கிரமசிங்க கருதியிருந்தார். யுத்த நிறுத்தத்தை பேணுதல் இந்த நடவடிக்கைகளுக்கு அத்திவாரமாகக் காணப்பட்டது. அத்துடன் புதிய பாராளுமன்றத் தேர்தலே ஒரே ஒரு வழியென அவர் நம்பினார்.

டிசம்பர் 26 இல் மொரகொட லன்ஸ்ரெட்டை சந்தித்தார். அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ள தனது விஜயம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. டில்லியில் தனது கலந்துரையாடல்களை இந்திய உயர்ஸ்தானிகர் சென் மேற்கொண்டதன் பின்னர் இந்தியாவால் இந்த யோசனையை தெரிவிப்பதன் மூலமே அரசியல் முட்டுக்கட்டை நிலைமைக்கு தீர்வு காணமுடியும் என அவர் கூறியிருந்தார்.

பிராந்தியக் கட்டுப்பாடு பாதுகாப்பு அமைச்சிலிருந்து வேறாக பிரித்தெடுக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்பதே நிருபம் சென்னின் யோசனையாகும். இதன் மூலம் சமாதான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான கட்டுப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொள்ள முடியும் என்பதே அந்த யோசனையாகும்.

இந்த யோசனை காற்றில் போய் விடக் கூடுமென மிலிந்த மொரகொட அறிந்திருக்கவில்லை. இந்த விடயத்தில் பிரதமர் முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்காவிடினும் இது பயனுள்ளதாக அமையும் என கருதப்பட்டது. ஆயினும் இதனை ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் பொறுப்பை சென்னிடம் ஒப்படைக்க அவர் விரும்பியிருந்தார்.

ஜனவரி முற்பகுதியில் இஸ்லாமாபாத்தில் இடம்பெறும் சார்க் உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இந்தியர்கள் இந்த யோசனையை தெரிவிக்க முடியும் என மிலிந்த மொரகொட நினைத்திருந்தார்.

2003 டிசம்பர் 31 இல் அதாவது இரு நாட்கள் கடந்த பின்னர் கேபிள் அனுப்பப்பட்டிருந்தது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொலின் பவலிடமிருந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளித்த கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கையை கொண்டதாக அந்தக் கேபிள் அமைந்தது.

நிருபம் சென்னின் முன்முயற்சி வெற்றியளிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்று பிரதமரிடம் தான் கேட்டதாக லன்ஸ்ரெட் கூறியிருந்தார். இந்த விடயம் எங்கும் செல்லுபடியாகும் என தான் நினைக்கவில்லை எனவும் தான் அதனை ஏற்றுக் கொண்டாலும் படைத்துறைத் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என தான் நினைக்கவில்லை எனவும் பிரதமர் கூறியிருந்ததாக அந்தக் கேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2004 ஜனவரி 5 இல் கேபிள் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. ஜனவரி 2 இல் லன்ஸ்ரெட் நிருபம் சென்னுடன் கதைத்த விடயங்களை அந்தக் கேபிள் உள்ளடக்கியிருந்தது. எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்று நிருபம் சென் கூறியுள்ளார்.

விடயத்தை சாத்தியமற்றதாக்குவது என்பதே இதன் நுட்பரீதியான அர்த்தமாகும். அதிகளவு தூரத்துக்கு ரணில் அதனை விரும்பவில்லை என்பதே பிரச்சினையாகும். அவர் சகலவற்றையும் விரும்புகிறார்.

ஜனாதிபதி இணக்கப்பாட்டுக்கு விரும்புகிறார். ஆனால், ஏதாவது பகுதியான தீர்வை ஏற்றுக் கொள்வதில் பிரதமருக்கு பிரச்சினை உள்ளது என்று கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு அதிகளவு பாதுகாப்பு விடயங்களை பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ஆராய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரதமர் சகலவற்றையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார் என்று சென் கூறியுள்ளார். அத்துடன் சார்க் உச்சிமாநாட்டின் போது ஜனாதிபதியிடம் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங்காவும் பிரதமர் வாஜ்பாயும் எழுப்ப முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அதே கேபிளில் மற்றுமொரு பகுதியில் திருமதி குமாரதுங்கவுடனான தனது சந்திப்பு குறித்து லன்ஸ்ரெட் கூறியுள்ளார். பவலிடமிருந்து தனியான வேறொரு கடிதத்தை வழங்குவது தொடர்பான திருமதி குமாரதுங்கவுடன் தனது சந்திப்பை ஞாபகப்படுத்துவதாக அவரின் சந்திப்பு அமைந்து இருந்ததாக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பாதுகாப்பு அமைச்சராக நியமித்து பாதுகாப்பு அமைச்சின் சில பகுதிகளை அவருக்கே கையளித்தே சமாதான நடவடிக்கைககள் தொடர்பான விடயங்களை மீள ஆரம்பிப்பதற்கு சந்திரிகா விரும்புவது தொடர்பாகவும் அந்தக் கேபிளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முட்டுக்கட்டை நிலைக்கு பிரதமரை (ரணில்) குற்றம் சாட்ட முடியாதென அமெரிக்கா நம்பியதை தெளிவுப்படுத்துவதாக லன்ஸ்ரெட்டின் சொந்தக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. பாதுகாப்பு விடயங்களை திரும்பவும் அவரின் (ரணிலின்) கரங்களுக்கு வழங்க வேண்டுமென அவர் எதிர்பார்த்தால் ஜனாதிபதிக்கு சில அர்த்தமுள்ள பங்களிப்பை ரணில் வழங்கவேண்டும் என்பது சொல்லப்பட்டிருக்கும் விடயங்களாகும் என்று கருதப்படுகின்றது.

அவரை (சந்திரிகாவை) விட்டுக்கொடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தினோம். அதனைத் தொடர்ந்தும் மேற்கொள்ள விருந்தோம் நாங்கள் கூறியதை அவர் செவிமடுக்க மாட்டார் அவரின் சொந்த அரசியல் நீதியான மறக்கப்பட்ட நிலையை நாங்கள் கேட்டால் அவர் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளமாட்டார் என தென்படுவதாக லன்ஸ்ரெட் அவதானத்தை வெளியிட்டிருக்கிறார்.

நெருக்கடிக்கு ஜனாதிபதியே காரணம் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சர் ஆர்மிரேஜ்ஜிடம் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக டிசம்பர் 26 இல் மொரகொட தெரிவித்திருந்தார். தனது அமெரிக்க விஜயத்தின் போது இதனை தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் நெருக்கடிக்கு ஜனாதிபதியே காரணமாக இருந்ததை அமெரிக்கா புரிந்துகொண்டிருப்பதாகவும் லன்ஸ்ரெட் பதிலளித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. விரைவாக பாராளுமன்றத்தை திருமதி குமாரதுங்க கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 2004 ஏப்ரலில் தேர்தல் இடம்பெற்றிருந்தது. அவரது கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.