Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாளர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாராகிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெயர் தமிழர்களை குழப்ப எடுத்து வரும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொண்ட சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்போது நேரடியாகவே புலத்தில் கால்பதிக்க தொடங்கியுள்ளது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களை தனக்கு சாதமாக பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைந்து வரும் நிலையில் குழப்பங்களை கடந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகள் வேகம் பெறுகின்றமை பெரும் நெருக்கடியை சிறிலங்காவுக்கு தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளை ஊதிப் பெருப்பித்து தமிழ் மக்களை மேலும் குழப்ப நிலையில் வைத்திருக்க அது முனைவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல் வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனது நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைகின்றது.

அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் சிறிலங்கா அரசின் பரப்புரை ஊடகமாக பொஸ்ரன் நியூஸ் எனும் இணையம் இதனை தெளிவாக காட்டியுள்ளது வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனக்கு சார்பாக பயன்படுத்தும் நோக்கில் மறைமுக ஏஜெண்டுகள் மூலம் அவர்களை தொடர்பு கொள்வதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய பயணத்தில் திட்டங்களைத் தீட்டியதாக ஏற்கனவே பொஸ்ரன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க நினைக்கும் சிறிலங்கா அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் முரண்பிடிக்கும் இச்சிறுகுழுவின் செயற்பாடுகள் வரப்பிரசாதம் என குறிப்பிட்டிருக்கும் பொஸ்ரன் நியூஸ் இதனை தீவிரப்படுத்து திட்டங்களை வகுத்துள்ளது.

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஒன்று கூடவுள்ள இந்த சிறுகுழுவின் கூட்டத்தில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் மறைமுக ஏஜெண்டுகளும் பங்கெடுக்கவே லண்டனுக்கு புலனாய்வாளர்கள் விரைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் மக்களின் மத்தியில் தெளிவான நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் அதனை திசைதிருப்பும் நோக்கில் ஹபரண காட்டுப்பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது தாக்குல் என செய்தி திட்டமிட்டு இந்த மறைமுக புலனாய்வு ஏஜெண்டுகளால் பரப்பபட்டிருக்கலாம் என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழின படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்த சிங்கள புலனாய்வுப் பயங்கரவாதிகளை லண்டனில் கைது செய்து உள்ளே போட முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.