Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமும் இந்தியாவும்-14:றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன்

Featured Replies

ஈழமும் இந்தியாவும்-14:றோ அதிகாரியை சந்திக்க அவசரமாக தமிழகம் வந்த பிரபாகரன்

இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ஈழப் போராளி அமைப்புக்கள் அனைத்தினதும் தலைமையைத் தான் எடுத்துக்கொள்வதற்காக சந்திரஹாசன் வகுத்துவைத்திருந்த திட்டம் அன்டன் பாலசிங்கத்துக்கு பெரும் சீற்றத்தைக் கொடுத்தது. இது சந்திரஹாசனின் திட்டமாக மட்டுமன்றி றோவின் ஒரு பகுதியினரும் இதனை விரும்பியிருப்பதற்கான ஏதுநிலைகளும் காணப்பட்டன. தமது போராளிகள் அனைவரையும் சந்திரஹாசனின் சுயநல நோக்கங்களுக்காக பலியிடுவதற்கு அவரது மனம் இடம்கொடுக்கவில்லை. அதனால், அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உடனடியாகவே மறுதலித்த பாலசிங்கம், அவ்வாறான ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதாகத்தான் இந்திய ஆயுதப் பயிற்சித் திட்டம் இருக்க வேண்டுமாயின் அது தமக்கு அவசியம் இல்லை என திட்டவட்டமாகக் கூறினார்.

இருந்தபோதிலும், ஏனைய போராளி அமைப்புக்கள் இந்தியாவின் பாரிய ஆயுதப் பயிற்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும் தனித்துவிடப்படுவது தமக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும் என்பதையும் உணர்ந்துகொண்டவராகவே பாலசிங்கம் இருந்தார். பாலசிங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக வந்திருந்த இராஜேந்திரனும் இதே கருத்தை முன்வைத்து பாலசிங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதற்கு முயன்றார். ஆனால், பாலசிங்கம் அசைந்துகொடுக்காத நிலையில் பேச்சுக்கள் முடிவுக்கு வந்தன. சந்திரஹதசனை விட்டால் வேறு வழியா இல்லை என்ற நிலையில் இந்தப் பேச்சுக்களை பாலசிங்கம் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

எது எப்படியிருந்த போதிலும் இது தொடர்பான விபரங்களை விரிவாக கடிதம் ஒன்றின் மூலம் பிரபாகரனுக்கு அனுப்பிவைத்தார் பாலசிங்கம். இது தொடர்பில் பிரபாகரன் தெரிவிக்கக்கூடிய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட காய்நகர்த்தல்களை முன்னெடுப்பது எனவும் பாலசிங்கம் தீர்மானித்துக்கொண்டார். சந்திரஹாசனின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயற்படுவதிலுள்ள விபரீத விளைவுகளையிட்டும் அவர் புரிந்துகொண்டிருந்தார். அதேவேளையில், இந்த ஆயுதப் பயிற்சித் திட்டத்துக்குள் உட்படவில்லை என்றால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளையிட்டும் அவர் சிந்தித்தார்.

இந்த நிலையில் பிரபாகரனிடமிருந்து வந்த பதில் பாலசிங்கத்துக்கு கடினமானதொரு பணியைக் கொடுப்பதாக அமைந்திருந்தது. பாலசிங்கம் எதிர்பார்த்தது போலத்தான் பிரபாகரனின் சிந்தனையும் இருந்தது. சந்திரஹாசனுடன் தொடர்புகளை எற்படுத்திக்கொள்ளவோ அல்லது உதவியைக் கோரவோ வேண்டாம் என பாலசிங்கத்தை அறிவுறுத்திய பிரபாகரன், எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுப் பிரிவாகிய றோ அதிகாரிகளுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு தனியான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பிரபாகரனைப் பொறுத்தவரையில் சந்திரஹாசனின் வலையில் விழாத அதேவேளையில், உரிய பலனைப் பெறுவதற்கான பாதையை வகுப்பதாக அமைந்திருந்தது.

பிரபாகரனின் இந்தக் கோரிக்கை தனக்கு சிக்கலான ஒரு சவாலாகியதாகக் குறிப்பிடும் அன்டன் பாலசிஙகம், அதனையிட்டும் அதன்பின்னர் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் போரும் சமாதானமும் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பவை இவ்விடத்தில் கவனிக்கத்தக்கவை. அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கியமான ஒரு பகுதியை மட்டும் இங்கு தருகின்றோம்:

'எந்தக் காரணத்தைக்கொண்டும் சந்திரகாந்தனின் உதவியை நாட வேண்டாம் எனத் தெரிவித்த பிரபாகரன், எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுத்துறையினருடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். இது எனக்கு ஒரு சிக்கலான சவாலாக அமைந்திருந்தது. சந்திரஹாசனை வெட்டியோடி, தலைமறைவாக இருக்கும் றோ அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது எவ்வாறு? இப்படியான நான் இடர்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் எனக்கு தமிழக உள்நாட்டுப் புலனாய்வுத்துறையினரது தொடர்பு கிடைத்தது. அப்போது நாம் சென்னை நகரப்பறத்திலுள்ள சன்தோம் என்ற இடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தோம்.

நாம் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததும் தமிழகப் புலனாய்வுத்துறை (கியூ பிரிவு) உதவிப் பொலிஸ் மா அதிபர் அலெக்சாந்தர் என்னை தனது அலுவலகத்துக்கு அழைத்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியும் விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றியும் விசாரித்தார். மாறி, மாறி நடந்த சந்திப்புக்கள் நட்புறவாகப் பரிணமித்தன. அன்பும், பண்பும், ஆழமான அரசியல் தெளிவும் கொண்டவராக விளங்கினார் அலக்சான்டர், இலங்கையின் அரசியல் பற்றியும், தமிழரின் போராட்டம் பற்றியும் அவர் அறிந்துவைத்திருந்தார். இந்திய இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றியும், றோ அதிகாரிகளுக்கும் சந்திரஹாசனுக்கும் இடையிலான இரகசிய உறவுகள் பற்றியும் எந்தெந்த அமைப்பக்களுக்கு எங்கெல்லாம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பன பற்றியும் சகல விபரங்களையும் நான் அலெக்சான்டர் வாயிலாக அறிந்துகொண்டேன்."

இவ்வாறு அன்டன் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சென்னையிலுள்ள பிரபலமான ஒரு விடுதியில் இருந்து றோ அதிகாரிகளுடன் இணைந்து சந்திரஹாசன் செயற்படுகின்றார் என்ற தகவல் பாலசிங்கத்துக்குக் கிடைத்தது. அதேவேளையில், அங்குள்ள றோ அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்து, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அலெக்சான்டர் ஆலோசனை வழங்கினார். இதன்படி விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாகவும், இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் அதனை இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிட்டு விரிவான கடிதம் ஒன்று பாலசிங்கத்தினால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. அதன் பிரதி றோவின் தலைவர் சக்சேனாவுக்கு அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட உடனடியாகவே புதுடில்லியில் பிரதமரின் அலுவலகமும், றோவின் செயலகமும் அவசரமாகச் செயற்பட்டன. உடனடியாகவே அங்கிருந்து பாலசிங்கத்துக்கு தகவல் கிடைத்ததுடன், றோவின் உயர் அதிகாரியான எஸ்.சந்திரசேகரன் சென்னைவந்து பாலசிங்கத்தைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாகவும், அதன் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் விரிவான முறையில் அறிந்துகொள்ள சந்திரசேகரன் முனைந்தார். இறுதியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்கு முன்னர் பிரபாகரனை தான் நேரில் சந்தித்துப் பேசவேண்டியிருப்பதாக வலியுறுத்தினார். இந்த முதலாவது சந்திப்பு திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக பாலசிங்கம் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பு முடிவடைந்த உடனடியாகவே அது தொடர்பான விபரங்களை பிரபாகரனுக்குத் தெரியப்படுத்திய பாலசிங்கம், இந்த ஆயுதப் பயிற்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரபாகரன் சென்னை வந்து றோ அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்த வேண்டியது அவசியம் எனவும் பாலசிங்கம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து ஒருசில தினங்களிலேயே (1983 அக்டோபரில்) பிரபாகரன் தன்னுடைய உதவியாளர்கள் சிலருடன் தமிழகம் வந்து பாண்டிச்சேரியில் தங்கினார்.

இங்குதான் றோ அதிகாரியான சந்திரசேகரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பாலசிங்கமும் உடன் இருந்தார். விடுதலைப் பலிகள் அமைப்புக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவது தொடர்பில் முக்கியமான இரகசியப் பேச்சுக்கள் இங்கு இடம்பெற்றன. சந்திரஹாசனுக்கோ அல்லது ஏனைய அமைப்புககளுக்கோ தெரியாமல் மிகவும் இரகசியமான முறையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன. இந்தப் பேச்சுக்களின்போது, முதலாவது கட்டமாக 200 போராளிகளுக்கு புதுடில்லிக்கு அருகேயுள்ள இராணுவப் பயிற்சிப் பாசறை ஒன்றில் வைத்து ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்திலுள்ள டெக்கா டென் என்ற மலைப் பகுதியிலேயே இந்த இராணுவப் பயிற்சிப் பாசறை அமைந்திருந்தது.

1983 நவம்பர் மாதத்தில் இந்தப் பயிற்சிகள் ஆரம்பமாகும் எனவும் சந்திரசேகரன் தெரிவித்தார். இந்தியாவின் இந்த இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றிய தகவல்களை பிரபாரன் மிகவும் நுணுக்கமாக றோ அதிகாரியிடம் கேட்டறிந்துகொண்டார். நவம்பர் மாதத்தில் இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமாகவிருப்பதால் அதற்கு முன்னர் பயிற்சிக்குக்குத் தேவையானவர்களைத் தெரிவு செய்வதுடன், அவர்களை அனுப்பிவைக்க வேண்டிய தேவையும் பிரபாரனுக்கு இருந்தது.

- தொடரும்

பூராயத்துக்காக

சிவயோகன்

http://pooraayam.com/mukiaya/1447-eelamindia14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.