Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக கோப்பை நச்சரிப்பும் எச்சரிக்கையும்

Featured Replies

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 3, 2011

Mahi%20cricket.jpg

பத்தாவது உலக கோப்பையினை வெல்வோம் என சூழுரைத்து சென்ற இலங்கை அணி கிண்ணத்தை வெல்லாது திரும்பி வந்துள்ளது. இந்த கிண்ணத்தை வைத்து மஹிந்த ஒரு அரசியல் செய்திருப்பார் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர்.

.

மஹிந்த குடும்பமும் இலங்கை கிரிக்கெட் அணியும்

.

10 வது கிரிக்கெட் உலக கோப்பை நேற்று மும்பையில் நடந்தது. அதனை முன்னிட்டு மஹிந்த இந்தியாவிற்கு சென்றார். பிரதமர் மன்மோகன் சிங்கை பார்க்க வருமாறு மஹிந்த இரகசிய தகவல் அனுப்பியும் மன்மோகன் செல்லவில்லை என கூறப்படுகின்றது. மாறாக இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் சென்றார்.

போட்டியை சுவாரசியமாக கண்டு கழித்த மஹிந்த குடும்பத்தினர் அணி வெல்லும் என்பதில் திடமாகவே இருந்துள்ளனர். ஆனால் அணி தோற்றுவிட்டது தோற்றுவிட்ட அணிக்கு ஆறுதல் கூறாமலே மஹிந்த அதிகாலை தனி விமானத்தில் இலங்கை திரும்பினார். இதனால் இலங்கை கிரிக்கெட் அணி மனம் நொந்துபோயுள்ளது மட்டுமன்றி மஹிந்தவிற்குத்தான் நேரம் இல்லையே ஆனால் அவரது புதல்வன் நாமல் இராஜபக்‌ஷ கூட ஆறுதல் கூறவில்லையாம்.

.

தெற்கிலும் வடக்கிலும் சரவெடி ஆனால் யாருக்கு ?

.

உலக கிண்ண போட்டியை கண்டு கழிக்க தென்னிலங்கையில் அகலத்திரை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இலங்கை அணி விளையாடும்போது தென் பகுதிகளில் சரவெடிகள் கொழுத்தி ஆரவாரம் செய்யபப்ட்டன. கோல்பேஸ் மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பெரும் திரைகளில் இந்தக் காட்சிகளை மக்கள் கண்டு களித்தனராம். இந்த ஆட்டத்தில் இலங்கை தோல்வியடைந்ததையடுத்து பார்வையாளரின் பீட் அடங்கியது. ஆரவாரமின்றி அமைதியாகக் கலைந்து சென்றனர்.

ஆனால் வடக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து யாழ். நகரில் வெடி கொளுத்தி வெற்றியைக் கொண்டாடினராம். ஆரம்பத்தில் இராணுவத்தினரால் இலங்கை கிரிக்கெட் அணிக்காக வெடிகொளுத்தி ஆரவாரம் செய்தன்ராம். எனினும் இறுதியில் இராணுவத்தினர், பொலிசார் அமைதியாகி விட்டனராம். ஆனால் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ச்சியாக வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை இரவு 12 மணி வரை ஆங்காங்கு யாழில் மக்கள் வெளிப்படுத்தினராம்.

இரண்டு விடயம் இந்தியாவிற்கு சார்பான இந்த சரவெடி இலங்கை அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பினால் வந்ததா அல்லது உண்மையாகவே இந்திய அணி வெல்லவேண்டும் என யாழ் மக்கள் விரும்பினரா?

எது எப்படி இருப்பினும் இந்தியா வென்றதை மக்கள் கொண்டாடியதனை இராணுவத்தினர் பொறுத்து கொள்ள முடியாது சரவெடி கொழுத்தியவர்களை ஆங்காங்கே படையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

.

பாகிஸ்தான் பிரதமரை அழைத்து பேசியது போன்று மஹிந்தவை ஏன் அழைத்து பேசவில்லை - பால்தக்கரே கேள்வி.

.

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைப் பார்வையிட வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு அழைப்பு அனுப்பி, அதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசும் பிரதமர் மன்மோகன்சிங்கும் முயற்சி செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள் ளார் சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே.

.

30 சிறப்பு ஆசனத்திற்கு பணம் கொடுத்து கிரிக்கெட் பார்த்த மஹிந்த.

.

உலகக்கிண்ணப் போட்டிக்கு ஜனாதிபதி மஹிந்த அழையா விருந்தாளியாகவே சென்றுள்ளார் என்பது சிவசேனா தலைவரின் கூற்று மூலம் தெளிவாகிறது.ஆயினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கை ஒன்றில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே மஹிந்த மும்பை செல்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் யாரால் அந்த அழைப்பு அனுப்பப்பட்டது என்ற தகவல் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

கூடவே இலங்கை அரையிறுதிக்கு புகமுன்னரே மஹிந்த 30 ஆசனங்களை புக் பண்ணியதாகவும் கூறப்படுகின்றது.

'

மஹிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

.

உலகக் கிண்ண துடுப்பாட்டத்தின் இறுதிஆட்டத்தைக் காண மும்பை சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் மத்திய மும்பையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.மத்திய மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் இந்தப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அதிபரின் உருவப்படங்களை வீதிகளில் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். "சிறிலங்கா கடற்படையால் எமது மீனவர்கள் பலர் நடுக்கடலில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடம்கொடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் கூட இதை ஒரு பாரதூரமான விடயமாக கருதவில்லை. இதனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அவரது உருவப்படங்களை தீயிட்டு எரித்தோம்'' என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

மும்பையில் கிரிக்கெட் போட்டியை பார்வையிடும் ராஜபக்சே

மகிந்தர் (கறுத்த முகத்துடன்?) விளையாட்டை இரசிக்கும்(?) படம் இந்த இணைப்பில் உள்ளது.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=51229

இன்றைய நவீன உலகில் பெரிய உலக விளையாட்டுக்கள் எல்லாமே பில்லியன் டாலர்களை கொண்ட வியாபாரம். எனவே உலகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் அந்த இலாபத்தில் தாமும் கால்களை பதித்து வருகின்றன.

பொருளாதர வளர்ச்சி குன்றிய நாடுகளில், பெரிய நிறுவனங்கள், தமது இலாபத்திற்கு அரசியல்வாதிகளை கைக்குள் போடுகின்றன. இலஞ்சம் கொடுக்கின்றன. அரசியல்வாதிகள் "விளையாட்டை" தமது பண ஊழலுக்கும், மக்களை ஏமாற்றவும் பயன்படுத்தி வருகின்றன.

Edited by akootha

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று மும்பையில் இடம்பெற்ற இறுதியாட்டக் காட்சிகளை கோல்பேஸ் மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பெரும் திரைகளில் ஆயிரக்கணக்கானவர்கள்; கண்டு களித்தனர். இந்த ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்ததையடுத்து மக்கள் ஆரவாரமின்றி அமைதியாகக் கலைந்து சென்றனர்.

எனினும் யாழ். குடாநாட்டில் இந்திய அணியின் வெற்றியை ஆதரவாளர்கள் வெடி கொளுத்தி கொண்டாடினர். ஆரம்பத்தில் இலங்கை அணி ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி ஆரவாரப்பட்டனர். எனினும் இறுதியில் அமைதியாகினர்.

இந்திய அணி ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக வெடி கொளுத்தி ஆரவாரத்தை வெளியிட்ட நிலையில் குடாநாட்டின் சில பகுதிகளில் படையினருக்கும் இந்திய அணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.