Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போன கடற்படையினர்: ஆயுததாரிகள் ஏற்றிசென்றனராம்!!

Featured Replies

திங்கட்கிழமை, ஏப்ரல் 4, 2011

கடந்த 29 அம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன நான்கு கடற்படை சிப்பாய்களின் நிலைமை என்ன என்பது தொடர்பாக இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.இவ்வாறு சிங்கள கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசலவர்ண குலசூரிய கூறியுள்ளார்.

கடற்படைச் சிப்பாய்கள் காணாமற் போய் நேற்றுடன் ஆறு நாள்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் காணாமற் போனது இன்னும் மர்மமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கடற்படைச் சிப்பாய்கள் டிங்கிப் படகு ஒன்றுடன் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமற் போயிருந்தனர்.இதனையடுத்து, கரையோர பிரதேசங்களில் முப்படையினரும் கூட்டாக இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் பிரதிபலனாக வெற்றிலைக் கேணி கடற்பரப்பில் வைத்து சிப்பாய்கள் பயணித்த டிங்கிப் படகைப் படையினர் கண்டுபிடித்தனர். படகுக்கு எதுவித சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் அதில் இருக்க வில்லை. அவர்கள் மர்மமான முறையில் காணாமற் போயிருந்தனர்.கடற்படைச் சிப்பாய்கள் காணாமற்போன அதேதினத்தில் ஆயுதக் குழு ஒன்று இலங்கை கடற்பரப்பில் வைத்து ஒரு சிலரைப் படகில் ஏற்றுவதைத் தாம் கண்டனர் என இந்திய மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக கடற்படைப் பேச்சாளரிடம் கேட்டபோது;

ஆம். இவ்வாறானதொரு தகவலும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது எனக் கூறிய அவர் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம் பெறுகின்றன என்றும் கூறினார்.காணாமற் போயுள்ள கடற்படை சிப்பாய்களின் உறவினர்களிடமும் அவர்கள் தொடர்பாகத் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்படை சிப்பாய்கள் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளனரா? அல்லது ஏதாவது விபத்தில் சிக்குண்டுள்ளனரா? என்றெல்லாம் தற்போது கேள்விகள் வருகின்றன. இது தொடர்பில் உங்களின் பதில் என்ன என்று பேச்சாளரிடம் கேட்டபோது; அவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்த பின்னர்தான் என்ன நடந்துள்ளது என்பதை எம்மால் தெளிவாகக் கூறமுடியும். என்றார்.

இலங்கை கடற்படைக்கு இந்திய மீனவர்கள் மீதுதான் சந்தேகம் வலுத்து வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அல்லது கடற்கொள்ளையர்கள் என இந்திய கரையோர காவல்படையினர் பிடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

குறிப்பு.

குறித்த டிங்கி படகு ஆழ் கடல் ரோந்து படகு அல்ல. அத்துடன் சிறிய ராடர் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுடன் இருந்திருக்கின்றது. கூடவே இத்தைய படகுகளில் ஆக குறைந்தது ஒரு கனர இயந்திர துப்பாக்கியும் மற்றும் படையினர் தம் வசம் வைத்திருக்க கூடிய தானியங்கி துப்பாக்கிகளும் வைத்திருப்பர். ஆகவே படகிற்கு எந்த ஆபத்தும் வராமல் அதில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்துவதோ அல்லது ஆட்களை கடத்துவதோ கடினம். அப்படி இருந்தாலும் முன்னெச்சரிக்கைக்காக கடற்படையினர் கட்டளை பணியகத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆகவே இது சம்பந்தப்பட்ட படையினர் தாமாகவே தப்பி ஓடி இருக்கலாம் அல்லது கடற்படையினரின் நாடகமாகவும் இருக்கலாம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.