Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது _

வீரகேசரி நாளேடு 4/7/2011 9:32:45 AM Share

சட்ட விரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த படகொன்று இத்தாலியின் கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றி ஐம்பது பேர் வரையானவர்கள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு அப்படகு பயணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன் பயண இலக்கு இத்தாலியா அல்லது வேறு ஏதேனும் நாடா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

படகு, வட ஆபிரிக்காவிலிருந்தே சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

லிபியா மற்றும் ஆபிரிக்காவின் பல்வேறு நாட்டவர்களும் பிரஸ்தாப படகில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகளும் அதில் பயணித்திருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. _

இந்த கப்பல் உட்பட பல கப்பல்கள் அண்மைக்காலங்களில் ஐரோப்பா நோக்கி வந்தவண்ணம் உள்ளன, கூடுதலாக துனிசியா ன்றும் லிபியா மக்களே இவ்வாறு வருகின்றனர், இந்த கப்பலில் கூட லிபியர்களும் சோமாலியர்களும் கூடுதலாக இருந்திருப்பார்கள் என கூறப்படுகின்றது.

இத்தாலிக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் நோக்கில் பயணம் செய்ததாக நம்பப்படும் ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதில் பயணம் செய்த 150 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாலிய தீவான லம்பெதூஸாவில் இருந்து சுமார் 39 மைல் தூரத்தில் இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

படகு கவிழ்ந்தபோது அதில் 200 பேர் இருந்துள்ளனர். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் மீட்புப் பணிகளுக்காக இத்தாலிய கரையோர காவல் படை விரைந்தது.

இருப்பினும் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும் இங்கு முதலாவதாக விரைந்த மீட்புக் குழுவால் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் டூனீஷியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.