Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் தூதுவராக ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் நடிகர் விக்ரம்.

Featured Replies

தேசிய விருது பெற்ற நடிகரான சியான் விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ நாவின் மனித குடியேற்ற திட்டம்)பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் தெரியப்படுத்தியுள்ளார். இந்த நல்லெண்ணத்தூதுவர் பொறுப்புக்கு உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு செய்யப்படிருப்பது விக்ரம் மட்டுமே.

கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 -வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு சியான் அழைக்கப்பட்டுள்ளார். இன்று தொடங்கி 15 -ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சியான் விக்ரம் இன்று கலந்துக்கொண்டுள்ளார்.

வறுமை ஒழிப்பிற்கும் , நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும் பெருமைக்குறிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்று நைரோபியில் இருந்து விக்ரம் தனது மக்கள் தொடர்பாளரையும் ஊடக நண்பர்களையும் தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

ஐநா சபையின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம் அரோக்கியமான நகர்புற வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவது என்று கூறும் விக்ர‌ம், மக்களுக்கு அவசர தேவை, தினசரி பயன்பாடு,மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி வழங்குவதோடு , வீட்டு வசதியை அளித்து ஓடுக்கப்பட்ட மக்கள் வாழும் சேரிகளை இல்லாமல் செய்வதே ஆகும் என்றும் தெரிவிக்கிறார்.

சினிமா தனக்கு வழங்கியுள்ள புகழுக்கு நன்றி கடனாக ஐநா அமைப்பு மூலம் அதன் நோக்கம் நிறைவேற உதவி செய்து மக்களுக்கு சேவைசெய்ய விரும்புவதாக பெருமிதத்தோடு கூறும் விக்ரம், வளமான எதிர்காலத்திற்காக நகரங்களை மாற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6868

விக்ரம் சமூக பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்.அவர் தற்போது சென்னையில் இயங்கிவரும் சஞ்ஜீவினி அறக்கட்டளையின் தூதராக உள்ளார். சிறப்பு தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் நல்லென்ன தூதாரகவும் இருக்கிறார்.

இது தவிர மாற்றுத்திறனாளிகள்,பெண்கள்,ஏழைகள்,மற்றும் குழந்தைகள் நலனுக்கான விக்ரம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராகவும், விக்ர‌ம் விளங்குகிறார். இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும் காசி கண் சிகிச்சை முகாம் திட்டத்தின் பின்னணியிலும் அவர் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஆயிரகணக்கான ஏழைகளின் பார்வையை இந்த திட்டம் மீட்டு தந்துள்ளதாக தகவல் தருகிறார் அவரது மக்கள் தொடர்பாளர்.

இந்த சமுக நலப்பணிகளோடு விக்ரம் இனி இளைஞர் தூதராக ஐநாவின் நோக்கம் நிறைவேற தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பது அவரது சமூகப்பணியில் அவரை அடுத்த கட்டத்துகு எடுத்துச் சென்றிருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.