Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரணடைந்தோரைக் கொல்லும் சிறிலங்கா இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Apr 13, 2011 / பகுதி: செய்தி /

சரணடைந்தோரைக் கொல்லும் சிறிலங்கா இராணுவம்

எத்தனை ஆதாரங்களை முன்வைத்தாலும் மறுப்புத் தெரிவிப்பதில் சிறிலங்கா இராணுவமும் அரசும் முனைப்பாக இருக்கிறது. சரணடைந்த பொது மக்களையும் போராளிகளையும் கொலை செய்வதை உலகின் மனிதநேயச் சட்டங்கள் தடை செய்கின்றன.

இந்தச் சட்டங்களைச் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் மீறிவருகின்றது. படுகொலைக் காட்சிகள் அடங்கிய காணொளி படங்கள், கைபேசிப் படங்கள் ஆகியவற்றை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியுள்ளது.

அதே தொலைக்காட்சி நிறுவனம் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக் குழுவிடம் இந்தப் படுகொலைக் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்களை வழங்கியுள்ளது.

மிக அண்மையில் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் காப்பகம் என்ற தொன்டு நிறுவனம் சிறிலங்கா இராணுவம் சரண் புகுந்த பொது மக்களையும் போராளிகளையும் படுகொலை செய்துள்ளதாக குற்றஞ் சுமத்தியுள்ளது.

இதை இராணுவத் தரப்பு வன்மையாக் கண்டித்தள்ளதோடு மறுப்புக்களையும் தெரிவித்துள்ளது. இது முழுப் பூசணிக் காயை ஒரு உலைச் சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானது.

1) மே 18, 2009ம் நாள் மனித உரிமைகளுக்கும் அனர்த்த முகாமைத்திற்கும் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் எல்லாத் தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வெளியிட்டார்.

2) மே 2009ல் ஐநாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், 30,000 – 40,000 பொது மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதாக உத்தியோக பூர்வ அறிக்கை மூலம் தெரிவித்தார்.

3) இதற்குப் பதிலளித்த மேற்கூறிய அமைச்சர் "கோர்டன் வைஸ் ஒரு பொய்யன்" என்று தெரிவித்தார்.

4) சரண்புகுந்த பொது மக்கள் பற்றிய மாறுபட்ட எண்ணிக்கைகள் வெளிவருகின்றன. வன்னியில் வாழ்ந்த மக்கள் எண்ணிக்கை 365,000. 26 மே 2009ல் செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்தோர் எண்ணிக்கை 290,000

5) 75,000 பொதுமக்களுக்கு என்ன நடந்ததென்று இது வரையில் தெரியவில்லை. இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புக்களும் கொழும்பில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு இராசதந்திரிகளும் நம்புகின்றனர்.

6) வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஏப்ரல் 2009ல் 70,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் காணாமற்போய்விட்டனர்;. அல்லது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அனைத்துலக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார்.

7) இதற்குத் தண்டனையாகப் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுக் கொழும்பில் நெடுகாலம் அடைத்துவைக்கப்பட்டார்.

8) சரணடைந்த விடுதலைப்புலிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புலி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் பற்றிய எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன.

9) தமது பொறுப்பிலுள்ள மேற்கூறியோரின் எண்ணிக்கை, பெயர், முகவரி பற்றிய விவரங்களை வெளியிட இராணுவம் மறுத்துள்ளது. இவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அது வெளியிட மறுக்கிறது.

10) மே 2010ல் பிரதமர் டி.எம் nஐயரத்தினா 11,700 புலி உறுப்பினர்களும் சந்தேக நபர்களும் சரணடைந்ததாகவும் இவர்களில் 1350 பேர் மீது வழக்குத் தொடரப்பட இருப்பதாகவும், 2,400 பேர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11) இன்னொரு அரச உயர்மட்ட அதிகாரி சரண்புகுந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளி உறுப்பினர் எண்ணிக்கை 12,700 என்று சொன்னார். (REF. INTERNATIONAL CRISIS GROUP 191)

12) சென்ற மாதம் nஐனிவாவின் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது வேறு அமைச்சகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் மகிந்த சமரசிங்க முற்றிலும் வேறுபட்ட எண்ணிக்கையை கைது செய்யப் பட்ட புலிகள் , சரண் புகுந்தவர்கள் தொடர்பாக வெளியிட்டர்.

13) அப்போது 730 வரையிலான இராணுவம் பொறுப்பேற்ற புலிகள் பற்றித் தனக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இரகசிய தடுப்பு முகாம்களில் இராணுத்தினரால் மறைத்து வைக்கபட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.

14) நீதிக்கு புறம்பான படுகொலைகள் சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பது உறுதி (Human Rights Watch Amnesty International, International Crisis Group) போன்ற அமைப்புக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்

http://www.pathivu.com/news/15924/57//d,article_full.aspx

பிராந்திய ஆதிக்க சக்தியும் மேற்குலக நாடுகளும் இணைந்து செயற்பட்டாலொழிய இவைகள் எல்லாம் வெறும் தரவுகளாகவே இறுதிவரையிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.