Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரவதை

Featured Replies

உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்கு தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது.

அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு.

பெரும்பாலான நாடுகளில் பன்னாட்டு சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது.

வரலாற்றில், அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஐ. நா உலக மனித உரிமைகள் சாற்றுரை விதி 5இன் படி மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. மூன்றாவது செனீவாச் சாசனம் மற்றும் நான்காவது செனீவாச் சாசனம் ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என உடன்பட்டுள்ளன. 145 நாடுகள் உடன்பட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான வதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு அவை அறமுறைகளுக்குப் புறம்பானதென்பதாலும் நடைமுறைப்படுத்த வியலாது என்பதாலும் எழுந்தன. இத்துணை பன்னாட்டுச் சட்டங்கள் இருப்பினும் பல நடுநிலை அமைப்புகள் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் சித்திரவதைகளைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன.

இந்தப்பதிவின் உள்ளுடன் எங்கள் எல்லோரது மனதிலும் ஆறாத வடுக்களாக போயிருக்கன்றது. ஒரு இனமாகப் பிறந்த குற்றத்திற்காக 60களுக்குப் பிந்திய தலைமுறையனால் இதன் தாக்கம் துல்லியமாக உணரப்பட்டுள்ளது. நம்மில் பலர் இதன் பாதிப்பில் இருந்து விடுபட முடியாத சூழலிலேயே மிகுதி நாட்களை ஓட்டுகின்றோம். ஒரு காலகட்டத்தில் ஆள்பவர்கள் இதை செய்தார்கள் என்றால் நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளோம் என்பதும் கசப்பான உண்மை. இது பற்றிய உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கின்றேன்.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விவாதத்துக்கு உரிய ஒரு பதிவு, கோமகன்,

மிருகங்கள் எங்களிலும் பார்க்க ஓரறிவு குறைந்தவை என்பது பலரது கருத்து.ஆனால் மிருகங்கள் தங்கள் தேவைக்காக மற்றைய மிருகங்களைக் கொல்வதுண்டு.அது அவற்றின் ஜீவாதாரம்.ஆனாலும் கொல்லப் படும் மிருகங்கள் குட்டிகளாகவோ, நோய் பட்டவையாகவோ அல்லது காயப் பட்டவையாகவோ இருக்கும்.நல்ல ஆரோக்கியமான, வலிமையான விலங்குகள் கொல்லப் படுவது மிகவும் குறைவு.அத்துடன் அவை சித்திரவதை செய்யப் பட்டுக் கொல்லப் படுவதில்லை.உதாரணமாக ஒரு புலியோ சிங்கமோ தங்கள் வயிறு நிரம்பிய பின், தங்கள் வாலை மேலே உயர்த்தியபடி நடந்து திரியும். இதன் கருத்து என்னவெனில் நான் உங்களைக் கொல்லப் போவதில்லை என மற்ற விலங்குகளுக்குத் தெரியப் படுத்தவே.இதை நீங்கள் உங்கள் வீட்டுப் பூனைக் குட்டியில் கூட அவதானிக்கலாம்.நன்றாக அதன் வயிற்றை நிரப்பி விடுங்கள்.அது தனது வாலைத் தூக்கிய படியே தனக்கு மீண்டும் பசியெடுக்கும் வரை திரியும்.

ஆனால் நாகரீகம் அடைந்த மனிதர்களில், மற்றவரை இம்சைப் படுத்துவது ஒரு விதமான மன வியாதி. இவர்கள் பொதுவாகத் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.இவர்களை ஆங்கிலத்தில் sadist என்று கூறுவார்கள்.இவர்களது 'ego' இந்தச் செயல்களைச் செய்வதில் ஒரு திருப்தி அடைகின்றது.அது போல பாலியல் வன்முறைகளிலும் மிருகங்கள் ஈடுபடுவது மிகவும் அரிது.இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்களும் மேற்கண்ட வகையில் அடங்குவர்.இலங்கை இராணுவத்தினர் இதற்கு நல்ல உதாரணம்.இதன் விளைவே பழிவாங்கும் மனோ பாவமும் ஆகும்.இஸ்லாம் மதத்தவரிடமும், இந்திய ஆளும் வர்க்கத்திடமும் இந்தக் குணம் அதிகம் உண்டு.இதன் விளைவுகள் எங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

ஒவ்வொருவரும் கண்ணுக்குக் கண் (eye for an eye ) என்று போனால் உலகத்தில் எல்லோருமே குருடர்களாக இருப்பார்கள்' -மகாத்மா காந்தி.

பதிவுக்கு நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.