Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ருத்ரகுமாரன், விநாயகம், நெடியவன்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் - நோர்வே நாடுகள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ருத்ரகுமாரன், விநாயகம், நெடியவன்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் - நோர்வே நாடுகள் ஆதரவு

20 ஏப்ரல் 2011

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை ஓர் இராஜதந்திர பயங்கரவாதமாக கருதப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களுக்கு முரணான வகையில் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நோக்கில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை ஓர் இராஜதந்திர பயங்கரவாதமாக கருதி செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படையினர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது எனவும், இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அனைவரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முரண்பாடுகளை களைந்து அனைவரும் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஈட்டிய வெற்றியை தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது 47 சகாக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்கா முனைப்பு காட்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருத்ரகுமாரன், விநாயகம், நெடியவன் போன்றவர்களுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஆதரவு வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை இறந்த காலத்துக்கு இழுத்துச் செல்கிறது – சம்பிக்க

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையானது இலங்கைக்கு எதிரான ஒரு இராஜதந்திரரீதியிலான பயங்கரவாதத் தாக்குதலாகும். இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை இறந்த காலத்துக்கு இழுத்துச் செல்கிறது என மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளால் சட்டத்திற்கு புறம்பாக இலங்கை செயற்படுத்தப்பட்டதால் ஐ.நா. நிபுணர் குழுவானது இராஜதந்திர ரீதியிலான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கொள்கைகளுக்கு அமைய இலங்கை ஒரு சுயாதீனமான நாடாகும். இலங்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமானால் ஐக்கிய நாடுகளின் சபைக்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.

அந்த நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. சபையின் பாதுகாப்புசபையில் அனுமதி பெற்று எம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முன்னாள் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேனட், ஐ.நா.சபையின் பாதுகாப்பு சபைக்குச் சென்றார். எனினும் ஐ.நா.சபையின் பாதுகாப்பு சபையில் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூலம் அவர்கள் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டனர்.

இதன்போது எமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட யோசனை தோல்விகண்ட அதேவேளை, எமக்கு ஆதரவாக முன்மொழியப்பட்ட யோசனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா.சபையினுள் மேற்கொள்ளக்கூடிய சட்டரீதியான இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்திலும் இலங்கை அரசு விடுவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள அரசுக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் அவருடைய மூவர் அடங்கிய குழுவும் மேற்கொண்ட இராஜதந்திர ரீதியிலான பயங்கரவாதத் தாக்குதலே இந்த அறிக்கையாகும். இந்தச் செயற்பாடுகளுக்கு பின்னணியில் அமெரிக்காவும், பிரிட்டிஷமே பிரதான சூத்திரதாரிகளாகச் செயற்படுகின்றன.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.